siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 29 ஜூலை, 2012

வட மாகாணசபைத் தேர்தல் 2013 பெப்ரவரியில் நடத்த தீர்மானம்

 
 29 யூலை 2012,
வட மாகாணசபைக்கான தேர்தலை 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, பெப்ரவரி மாத இறுதியில் அதாவது 26 ம் திகதியளவில் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ
முன்னதாக இந்தத் தேர்தலை அடுத்த வருடம் செப்டெம்பரில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்த போதிலும், ஜக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வுகள் அடுத்த வருட பிற்பாதியில் நடைபெறவுள்ளதன் காரணமான முந்திக் கொண்டு தேர்தலை நடத்துவதற்கு முனைப்பு காட்டிவருகின்றது.
இதேவேளை வடமாகாணசபைத் தேர்தலின் முதலமைச்ர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது.
வடமாகாணத்தை பிரதிநிதுத்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த அரசு தீர்மானித்திருந்த போதும், தற்போது இந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்திருக்கும் அரசாங்கம், வட மாகாணத்தில் பிரபல்யம் பெற்ற புத்திஜீவி ஒருவரை தேர்தல் களத்தில் ஈடுபடுத்துவது தொடர்பில் ஆலோசித்து வருகின்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் போராசிரியர்கள் சிலரினதும் ஓய்வு பெற்ற கல்விமான்கள் சிலரினதும் பெயர்களும் இதற்காக பரீசீலிக்கப்பட்டு வருவதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக