siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 29 ஜூலை, 2012

நல்லூர் உற்சவம் கொடியேற்றம் தொடங்கி இற்றைவரை 20 பவுண் தங்க

 
 29 யூலை 2012,
நல்லூர்க் கந்தன் கோவிலில் கொடியேற்ற நாள் தொடக்கம் நேற்று வரையான காலப்பகுதியில் 20 பவுன் நகைகள் வரை கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திருவிழா நாட்களில் தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதன் காரணமாக திருட்டுச் சம்வங்களும் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
கோவில் வளாகத்தில் பெண்களும், பக்தர்களின் வேடமணிந்து திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கோயிலில் தற்போது 600 காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் 150 பேர் கூடுதலாக அண்மையில் இணைக்கப்பட்டுள்ளனர்

0 comments:

கருத்துரையிடுக