30.09.2012.By.Rajah.விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு கர்வம் என பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
பில்லா வெற்றிக்கு பின்பு அஜித் தனது 52வது படத்தில் மீண்டும் விஷ்ணுவர்த்தன்
இயக்கத்தில் நடிக்கிறார். அதற்குரிய படங்கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியானபோது படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது படத்தின் படப்பிடிப்புக்களில் விஷ்ணு மற்றும் அஜித் மும்முரமாக இருக்கிறார்கள். எனவே படப்பிடிப்புகளை இன்னும் 2 மாதங்களில் முடித்துவிடலாம் என கூறப்படுகிறது. எனவே அதற்குள் படத்திற்கு ஒரு நல்ல பெயர் வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கர்வம் என தலைப்பிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் இனிதான் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 53வது படத்திற்கு வெற்றிகொண்டான் என தலைப்பு வைத்திருப்பதாக மற்றொரு தகவலும் கொலிவுட்டில் உலா வருகின்றன. |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
ஞாயிறு, 30 செப்டம்பர், 2012
அஜித்தின் 52வது படம் கர்வம்?
ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
செய்திகள்
பலத்த சூறாவளியால் இருளில் மூழ்கிய ஜப்பான்
ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
செய்திகள்
30.09.2012.By.Rajah.ஜப்பானை கடும் சூறாவளி புயல்
தாக்கியதில் பல பகுதிகள் இருளில் மூழ்கின.
ஜப்பானின் டோக்கியோ மற்றும் ஒகினாவா பகுதிகளை ஜிலாவத் என்ற புயல் 144 கிலோ
மீற்றர் வேகத்தில் தாக்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்களும், விளக்கு மற்றும் சிக்னல் கம்பங்களும் தெருக்களில் சாய்ந்தன. மின் கம்பிகள், தகவல் தொடர்பு கோபுரங்கள் சாய்ந்துள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த சூறைக் காற்று வீசி வருவதால் ரயில் மற்றும் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பலத்த மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. |
முகப்பு |
பெல்ஜியத்தில் கழுத்தறுக்கப்பட்டு 3 குழந்தைகளுடன் சீக்கிய பெண் கொலை
ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
செய்திகள்
30.09.2012.By.Rajah,பெல்ஜியத்தில் சீக்கிய பெண்,
அவரது மூன்று மகன்கள் உள்பட 4 பேர் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜஸ்பீர்சிங்
(வயது 38). இவர் பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்ஸ் நகரில் கடந்த 15 ஆண்டுகளாக ரெஸ்டாரண்ட் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஈட்டர்பீக் பகுதியில் தனது மனைவி, மூன்று மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளியன்று தனது வீட்டிற்கு தொடர்பு கொண்டு பேச முயன்ற போது எந்த பதிலும் இல்லை. சந்தேகமடைந்த அவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது மனைவி மற்றும் மூன்று மகன்களும் கழுத்து அறுக்கப்பட்டு மர்மான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளனர். இது குறித்து ஜஸ்பீர் சிங் பொலிசில் புகார் தெரிவித்துள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது. |
முகப்பு |
கட்டிப் புரண்டு சண்டை போட்ட பெண்கள்: போர்க்களமாக மாறிய ஷாப்பிங் மால்
ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
செய்திகள்
30.09.2012.By.Rajah.சவுதி அரேபியாவின் தஹரான்
நகரில் உள்ள ஷாப்பிங் மாலில், பெண்கள் இருவர் திடீரென சண்டை போட்டுக் கொண்டதால்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஹரான் நகரில் உள்ள ஷாப்பிங் மாலில், பொருட்களை வாங்கி கொண்டிருந்த சில
பெண்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, பெரும் சண்டையாக மாறியது. ஆளாளுக்கு தலையைப் பிடித்தும், செருப்புகளை எடுத்து அடித்துக் கொண்டும், கையில் இருந்த பேக்குகளால் சரமாரியாக அடித்தும் சண்டை போட ஆரம்பித்தனர். இதனையடுத்து அங்கிருந்த பொலிஸார் ஓடி வந்தனர். வந்தவர்கள் அனைவரும் ஆண்கள். சவுதி நாட்டுச் சட்டப்படி ஆண்கள் பெண்களைத் தொடக் கூடாது. எனவே அவர்கள் சண்டையை விலக்கி விட முடியாமல் திகைத்து நின்றனர். இதையடுத்து பெண் பொலிஸாருக்குத் தகவல் போனது. ஆனால் அவர்கள் வருவதற்குள் சண்டை மேலும் உக்கிரமாகி விட்டது. மாலில் இருந்த கடைகளுக்குள் ஓடி ஓடி சண்டை போட்டனர் அந்தப் பெண்கள். இதனால் அங்கிருந்த பல பெண்கள் காயமடைந்தனர். அதன் பின்பு வந்த பெண் பொலிஸார், சண்டை போட்ட பெண்களை கடும் சிரமத்துக்கு மத்தியில் விலக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சண்டையால் அந்தப் பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது |
ஒரு வயது குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பெண்
ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
செய்திகள்
30.09.2012.By.Rajah.அபுதாபியில் ஒரு வயது குழந்தையை
பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக வேலைக்கார பெண் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
அரேபியர் ஒருவரின் வீட்டில் ஆசியாவை சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து
வந்துள்ளார். சம்பவ தினத்தன்று கணவன், மனைவி இருவரும் வெளியே சென்ற பிறகு அந்த குழந்தையை கீழே படுக்க வைத்து, அவன் மீது ஏறி உட்கார்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அப்போது அக்குழந்தை கதறி அழுததும், குழந்தையை அடித்துள்ளார். பின்னர் தலையணையை எடுத்து குழந்தையின் வாயில் அமுத்தி அடக்கப் பார்த்துள்ளார். இந்த செயல்கள் அனைத்தும் வீட்டில் இருந்த ரகசியக் கமெராவில் பதிவாகி விட்டது. அந்தப் பெண் நிர்வாண கோலத்தில் குழந்தையை நாசப்படுத்திய காட்சியை பெற்றோர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதை போட்டு காட்டிய போது, நான் தான் இதைச் செய்தேன் என்று அப்பெண் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அப்பெண்ணுக்கு 15 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. |
இளம் கால்பந்தாட்ட வீரரை குத்தி கொன்ற 14 வயது பெண் கைது
ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
செய்திகள்
30.09.2012.By.Rajah..தெற்கு லண்டனில் இளம்
கால்பந்தாட்ட வீரரை கத்தியால் குத்தி கொன்றதாக 14 வயது பெண் கைது
செய்யப்பட்டுள்ளார்.
பிரிக்ஸ்ட்டன் நகரில் லோபோரோ எஸ்டேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின்
வெளியே 15 வயது கால்பந்தாட்ட வீரர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், இறந்து
கிடந்தார். இக்கொலைக்கும், 14 வயது இளம் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, அப்பெண்ணை பொலிசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இந்த பெண் நீதிமன்றத்திற்கு நாளை அழைத்து வரப்படுவாள் என்று பொலிசார் தெரிவித்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் 16 வயது சிறுவன் ஒருவனை கைது செய்து பொலிசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே என் மகனை கொலை செய்த நபரை யாராவது பார்த்திருந்தாலோ, இக்கொலை குறித்து யாருக்கும் ஏதேனும் விபரம் தெரிந்தாலோ உடனடியாக பொலிசாரிடம் தெரிவிக்கும்படி இறந்து போன சிறுவனின் தாய் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். |
முகப்பு |
அவுஸ்திரேலியாவில் இருந்து இரண்டாம் கட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 30பேர் இன்று நாடு திரும்பினர்
ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
காணொளி
இந்த தகவலை ரேடியே ஒஸ்திரேலியா என்ற ஊடகம் தெரிவித்துள்ளது. நௌறு தீவுகளில் இருந்து 2 பேரும் கிறிஸ்மஸ் தீவுகளில் இருந்து 20 பேரும் விலாவூட் மற்றும் யொங்கா ஹில் ஆகிய இடங்களில் இருந்து 6 பேருமாக மொத்தம் 28 பேர் இன்று இலங்கைக்கு புறப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் கிரிஸ் போவன் தெரிவித்துள்ளார்.
நௌறு தீவுகளுக்கு மாற்றப்படும் போது இலங்கை திரும்புவோரை பார்க்கும் போது அவர்கள் ஆட்கடத்தல்காரர்களால் பொய் வாக்குறுதி வழங்கப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்பட்டமை புலனாகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.30 இலங்கையர்கள் ஆஸி'யிலிருந்து நாடு திரும்பினர்
சட்டவிரோத குடியேறிகளாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 இலங்கையர்கள் இன்று மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் விசேட வானூர்தி அவர்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர்.
அவர்களுடன் 60 அவுஸ்திரேலிய பாதுகாப்பு தரப்பினரும் கட்டுநாயக்கவை வந்தடைந்ததாக எமது வானூர்தி தள செய்தியாளர்கள் தெரிவித்தார்..
இலங்கை திரும்பிய குடியேறிகள் பின்னர் விசாரணைகளுக்காக தேசிய ரகசிய தகவல் ஆய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் நவுரு தீவிற்கு செல்ல மறுத்தமையினாலேயே மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.
இதனிடையே, அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டமையினால் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் எனக் கூறிக்கொண்டு வேறு நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியா சென்றவர்களும் வந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடிய கவனத்துடன் செயற்படுவதாக குடிவரவு குடியகல்வு நிர்வாகி சூலாநந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இன்று திருப்பியனுப்பப்பட்டவர்கள் குறித்து அவுஸ்திரேலியா அரசாங்கமும் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதில் குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை அமைச்சர் கிறிஸ் போவன் வெளியிட்டுள்ள கருத்தில், ஆட்கடத்தல் காரர்களால் தமது நாட்டுக்கு அழைத்துவரப்படுபவர்களுக்கு எந்த தருணத்திலும் வீசா வழங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு விசேட கவனமோ, வாழ்க்கை பாதுகாப்பு குறித்து திடீர் தீர்மானங்களோ, எடுக்கப்படமாட்டாது என்றும் கிறிஸ் போவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்கடத்தல் காரர்கள் அவுஸ்திரேலியாவில் நிலவும் தன்மை குறித்து போலியான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
சட்டவிரோத குடியேறிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கே திருப்பியனுப்பும் போது தேவையான வசதிகள் குறித்து அவுஸ்திரேலிய அதிகாரிகளே தீர்மானிப்பார்கள் என்றும் குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறிருக்கையில், சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்டு கேரளா கடற்பிராந்தியத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 14 பேர் இன்று இலங்கை திரும்பியுள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பியவர்க்ள சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், 13 இளைஞர்களும், ஒரு பெண்ணும் அந்த குழுவில் உள்ளடங்குகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலக்கலான கொமெடி படத்தில் விவேக்-சோனியா அகர்வால் ஜோடி
ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
செய்திகள்
30.09.2012.By.Rajah,கொலிவுட்டில் விரைவில் வெளியாக உள்ள த்ரில்லர் படமான 'சௌந்தர்யா'வை இயக்கியவர் சந்திரமோகன். |
இவர் தற்போது ஏ.பி.சி.ட்ரீம்ஸ் எண்டர்டெயினர்ஸ் சார்பில் 'பாலக்காட்டு மாதவன்'
என்ற படத்தை இயக்கியுள்ளார். இது குறித்து சந்திரமோகன் கூறுகையில், கதையின் நாயகனாக கலக்கல் கதாபாத்திரத்தில் விவேக் ரசிகர்களை சிரிக்க வைக்கப்போகிறார். கதையின் நாயகியாக நடித்துள்ள சோனியா அகர்வாலுக்கு இப்படம் திருப்புமுனையாக அமையும். தமிழ் சினிமாவின் திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அவரின் ஆலோசனையில் படத்தின் திரைக்கதை மேலும் சுவாரஸ்யமாகி வலிமை பெற்றுள்ளது. மலையாள பட உலகின் பழம்பெரும் நடிகை 'செம்மீன்' ஷீலா, இப்படத்தின் கதையை கேட்டு சிரித்து, சிரித்து கண்கலங்கினார் என்றும் மலையாள படங்களுக்கு இசையமைத்த அஜம்ல் அஜீஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் எனவும் கூறியுள்ளார் |
நான் கவர்ச்சியா நடிக்கக் கூடாதா? விஜயலட்சுமி
ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
செய்திகள்
30.09.2012.By.Rajah.கொலிவுட்டில் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் நடிகை விஜயலட்சுமி. |
இவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். தற்போதும்
வெளியாகவுள்ள வனயுத்தம் படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக
நடித்துள்ளார். இதில் விஜயலட்சுமி படு கவர்ச்சியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கூறுகையில், படத்துல எனக்கு நெகட்டிவ் கேரக்டர். எதையும் தூசு மாதிரி பார்க்குற பொண்ணு. எவ்வளவு திமிரா நடிக்க முடியுமோ, அவ்வளவு திமிரா நடிச்சிருக்கேன். எத்தனை படத்துலதான் குடும்ப குத்துவிளக்காக நடிச்சிட்டிருக்க முடியும். அதான் கிளாமரா நடிச்சிருக்கேன். ஏன் நான் கவர்ச்சியா நடிக்க கூடாதா என்ன? வனயுத்தம் பார்த்துட்டு ரெண்டாவது படம் பார்த்தீங்கன்னா கொஞ்சம் ஷாக்காத்தான் இருக்கும் என்கிறார் |
ஆதிபகவன் படப்பிடிப்பு முடிந்தது: ஜெயம் ரவி மகிழ்ச்சி
ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
செய்திகள்
30.09.2012.By.Rajah.அமீர் இயக்கி வரும் ஆதிபகவன் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி இசை சேர்ப்பு மற்றும் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. |
கடந்த இரண்டு வருடங்களாக ஆதிபகவனுக்காக விதவிதமான கெட்-அப்புகளை போட்டு அதை மறைத்து வாழ்ந்து வந்த ரவி இப்போது நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளார். கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் பரவாயில்லையான்னு அமீர் சார் ஆரம்பத்திலேயே சொல்லிட்டார். ஏன்னா இது நிழல் உலக தாதாக்களோட கதை. படப்பிடிப்பு நடந்தப்போ கஷ்டமாத்தான் இருந்திச்சு. அமீர் சார் அவர் நினைக்கிறது நம்மகிட்டேருந்து வர்ற வரைக்கும் விடமாட்டார். ஒரு சின்ன ஷாட்டுக்கு ஒரு நாள் வரைக்கும்கூட மெனக்கெடுவார். என்னடா நல்லா மாட்டிக்கிட்டோமேன்னு சில நேரங்கள்ல யோசிச்சிருக்கேன். ஆனா இப்போ படத்தை பார்க்குறப்போ அவ்ளோ சந்தோஷமா இருக்கு. ரவி உங்களுக்கு பெரிய ஹிட் கொடுக்குறேன்னு அவரும் சொல்லியிருக்கார் என்றும் அது நடக்கும்னு நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார் |
அனுஷ்காவின் பெரிய மனசு
ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
செய்திகள்
வித்யாபாலனுக்கு பூனை என்றாலே அலர்ஜியாம்
ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
செய்திகள்
பிறந்து, 20 நாட்களேயான பெண் குழந்தை விற்க முயற்சி. தாய், புரோக்கர்அதிரடி கைது
ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
செய்திகள்
Sunday30,September2012.By.Rajah.பிறந்து, 20 நாட்களேயான பெண் குழந்தையை, 5,000 ரூபாய்க்கு விற்க முயன்ற தாய் மற்றும் புரோக்கரை போலீஸார் கைது செய்தனர்.திருச்சி உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். கார் டிரைவர். இவரது மனைவி கலைவாணி, 20. கலைவாணி, கர்ப்பமாக இருந்த போது அவரது கணவர் பிரிந்து சென்று விட்டார்.கடந்த, 20 நாட்களுக்கு முன், கலைவாணிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. கணவர், உறவினர்கள் துணை இல்லாததால், குழந்தையை வளர்க்க முடியாமல் கலைவாணி கஷ்டப்பட்டார்.முதலியார்சத்திரம் நடுத்தெருவைச் சேர்ந்த ராஜூ மனைவி பானு, 27விடம், கலைவாணி தன் நிலையை கூறினார். "குழந்தையை யாரிடமாவது விற்றுவிடலாம்' என, பானு ஆலோசனை கொடுத்தார்.
பீமநகர் கோரிமேடு கூனிபஜாரைச் சேர்ந்தவர் பரமசிவம்- முத்துலட்சுமி தம்பதியருக்கு, மூன்று மகன்கள். பெண் குழந்தை இல்லாததால், பானு, கலைவாணியின் பெண் குழந்தையை, முத்துலட்சுமியிடம் கொண்டு போய் கொடுத்தார்.முத்துலட்சுமிக்கும், அவரது மகன்களுக்கும், குழந்தையை பிடித்திருந்தது. குழந்தையை வளர்க்கும் எண்ணத்துடன் இருந்த முத்துலட்சுமியிடம், பானு, 5,000 ரூபாய் கேட்டார். அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி, பாலக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.பாலக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து, பெண் குழந்தையை பணத்துக்கு விற்க முயன்ற பானு, குழந்தையின் தாய் கலைவாணி ஆகியோரை கைது செய்தனர்.திருச்சி அரசு மருத்துவனையில் உள்ள, அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தையை ஒப்படைத்தனர்.
பீமநகர் கோரிமேடு கூனிபஜாரைச் சேர்ந்தவர் பரமசிவம்- முத்துலட்சுமி தம்பதியருக்கு, மூன்று மகன்கள். பெண் குழந்தை இல்லாததால், பானு, கலைவாணியின் பெண் குழந்தையை, முத்துலட்சுமியிடம் கொண்டு போய் கொடுத்தார்.முத்துலட்சுமிக்கும், அவரது மகன்களுக்கும், குழந்தையை பிடித்திருந்தது. குழந்தையை வளர்க்கும் எண்ணத்துடன் இருந்த முத்துலட்சுமியிடம், பானு, 5,000 ரூபாய் கேட்டார். அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி, பாலக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.பாலக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து, பெண் குழந்தையை பணத்துக்கு விற்க முயன்ற பானு, குழந்தையின் தாய் கலைவாணி ஆகியோரை கைது செய்தனர்.திருச்சி அரசு மருத்துவனையில் உள்ள, அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தையை ஒப்படைத்தனர்.
சனி, 29 செப்டம்பர், 2012
அநாதைகள் போல விடப்பட்டுள்ளோம்
சனி, செப்டம்பர் 29, 2012
செய்திகள்
29.09.2012.By.Rajah. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை முல்லைத்தீவு அரச அதிபர் கூறுவது பொய் சூரியபுரம் காட்டில் உள்ள மக்கள் குமுறல்அநாதைகள் போல காட்டுப் பகுதிக்குள் சுடலைக்குள் தள்ளிவிட்டு இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. அவ்வாறு இருக்கும் போது அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் கூறியிருப்பது வேதனைக் குரியது. அவர் கூறுவதில் உண்மை இல்லை.
இவ்வாறு தமது உளக் குமுறலை வெளியிட்டுள் ளனர் சூரியபுரம் காட்டுப் பகுதியில் தங்கவைக்கப் பட்டுள்ள மக்கள். மனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருந்து அழைத்து வரப்பட்டு கேப்பாபிலவுக் கிராமத்தைச் சேர்ந்த 110 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் சூரியபுரம் காட்டுப்பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் இந்த மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக சூரிய புரம் பகுதியிலுள்ள மக்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் தமது ஆதங்கத்தை வெளியிட்டனர். சூரியபுரத்தில் தங்கியுள்ள குடும்பஸ்தர் ஒருவர் இது குறித்து தெரிவித்ததாவது
முகாமிலிருந்து எங்களை மந்தைகள் போல் ஏற்றிவந்து இந்த காட்டுப் பகுதியில் அநாதரவாக விட்டுள்ளனர். எமக்கு தற்காலிக வீடுகள் அமைப்பதற்கு தடி தண்டுகளோ ஏனைய வசதிகளோ வழங்கப்படவில்லை.
முகாமில் இருந்து கொண்டு வந்த தடிகளைப் பயன்படுத்தி தறப்பாள்களை கட்டி அதற்குள் பலத்த சிரமத்தின் மத்தியில் வாழ்கின்றோம்.
மின்சாரம் இல்லை. அதேவேளை விளக்குகளும் இல்லை. வெறும் மண்ணெண்ணெய் மட்டும் வழங்குகின்றனர். இதனை வைத்து நாம் என்ன செய்வது. குடிதண்ணீர் வசதியில்லை. மலசலகூட வசதி செய்து தரப்படவில்லை. இளம் பெண்கள் ஊட்பட இயற்கைக் கடன்களைக் கழிப்தற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
தற்போது பெய்து வரும் மழையால் உடமைகள் நனைந்து விடுகின்றன. நாம் இங்கு கொண்டு வந்துவிடப்பட்டு நான்கு நாள்கள் கடந்த நிலையிலும் எந்த ஒரு அரச அதிகாரிகளும் எம்மை வந்து பார்க்கவில்லை. இவ்வாறு இருக்கையில் எமக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வேடிக்கையானது என்றனர்.
இது தொடர்பாக அங்குள்ள இளம் குடும்பப் பெண் ஒருவர் தெரிவிக்கையில்
நாம் காட்டுப் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்கின்றோம். எனது வீட்டுக்குப் பின்புறம் பெரும் காடு. அப் பகுதியில் இரவு பகல் என்று பாராது இராணுவத்தினர் வந்த வண்ணம் உள்ளனர்.
தனிமையில் இருக்க முடியவில்லை. அடிக்கடி இராணுவப் புலனாய்வாளர்கள் சுற்றிச் சுற்றி வருகின்றனர். எமது வீடுகள் தூரத் தூர இருப்பதால் தனிமையில் இருக்கும் போது எனன் நடைபெறுமோ தெரியாது அச்சமாக உள்ளது. இதேவேளை ஒழுங்கான வீடு இல்லாத காரணத்தால் வீட்டுப் பொருள்களைப் பாதுகாக்க முடியாதுள்ளது. என்றார்
|
அரசியல் தீர்வு ஒன்றை எட்ட தமிழருக்கு சர்வதேச ஆதரவு; அரசு இனியும் தட்டிக் கழிக்க முடியாது என்கிறார் சம்பந்தன்
சனி, செப்டம்பர் 29, 2012
செய்திகள்

அதில் சர்வதேச மும் உறுதியாக உள்ளது. நீதியை நியாயத்தை உருவாக்காமல் அரசு இனியும் தட்டிக் கழிக்க முடியாது. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
கிழக்குமாகாண சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் நேற்றுத் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சபைக்குத் தெரிவான 11 உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்துகையிலேயே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவித்தவை வருமாறு:
நாம் ஒரு தனித் தேசிய இனம். எமக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கின்றது. நாம் சரித்திர ரீதியாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வந்திருக்கின்றோம். எம்முடன் இஸ்லாமிய சகோதரர்களும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இன்றும் நாம் பெரும்பான்மையுடன்தான் இருக்கின்றோம்.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இந்நிகழ்வை நான் கருதுகின்றேன். இம்முறை நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டோம். நாங்கள் மாகாணசபையை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
தவறானவர்களின் கையில் மாகாணசபை நிர்வாகம் இருக்கக்கூடாது. கடந்தமுறை போன்ற நிலைமை தமிழ் மக்களுக்கு இம்முறையும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டோம்.
ஆட்சி அமைக்கக்கூடிய அதிகாரம் கிடைக்கவில்லையென்றாலும் மாகாணசபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட 12 தமிழ் உறுப்பினர்களில் 11 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தெரிவுசெய்யப்பட்டிருப்பரென்பது சாதாரண விடயமோ அல்லது இலகுவான விடயமோ அல்ல.
கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நிற்கின்றார்கள். கொள்கை ரீதியாக தமிழ் மக்கள் இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். முழுமையான வெற்றியைப் பெறுவதற்கு இன்னும் 6 ஆயிரம் வாக்குகளே தேவைப்பட்டன. அதை 3 மாவட்டத்திலிருந்தும் பெற்றிருக்கலாம். ஆனால், மக்கள் முழுமையான பங்களிப்பைச் செய்தார்கள். எமது மக்களுடைய ஜனநாயகத் தீர்ப்பை அரசும், உலக நாடுகளும் மதிப்பளிக்க வேண்டியிருக்கின்றது.
எமது மக்களுடைய தீர்ப்பைப் புறந்தள்ள முடியாது. தெரிவுசெய்யப்பட்ட 11 பேரும் நிதானமாகச் செயற்படவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு அரசு பல முயற்சிகளைச் செய்தது. ஆனால், அது பலிக்கவில்லை. ஏனைய அரசியல் கட்சிகளை அவர்கள் உடைத்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எவராலும் உடைக்கமுடியாது. நாங்கள் ஒற்றுமையாக எமது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு இணங்க செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டில் சர்வதேசம் எங்களை அங்கீகரித்துள்ளது. தமிழ் மக்களின் நம்பிக்கையின் பிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அரசின் பல்வேறு திட்டங்களால் எமது இனப் பரம்பல் சிதைக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் குடிப்பரம்பலை இனப் பரம்பலை செய்யக்கூடாது என்று கேட்கின்றோம். இந்நிலையால்தான் எங்களது கலாசாரம் சிதைக்கப்படுகின்றது. எமது பிரதிநிதித்துவம் குறைவடைகின்றது. நாம் அரசியல் தீர்வில் உறுதியாக இருக்கின்றோம்.
நாடு பிரிக்கப்படவேண்டும் என்று கேட்கவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுதந்திரமாக நிம்மதியாக சொந்த இடத்தில் உரிமையுடன் வாழவேண்டும் என்ற உறுதியான முடிவை எமது மக்கள் கூறியிருக்கின்றார்கள். அரசுடன் நாம் ஒத்துழைத்துச் செயற்படத் தயாராக இருக்கின்றோம். எமது மக்களுடைய உரிமைகள் தட்டிக்கழிக்கப்படுமாயின், சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பிக்க நாம் ஒருபோதும் பின்நிற்கமாட்டோம் என்றார்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை, பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்
நீதானே என் பொன்வசந்தம்:
சனி, செப்டம்பர் 29, 2012
செய்திகள்
என்னோட வா வா பாடல் வரிகள் தமிழில்.29.09.2012.By.Rajah.
நீதானே என் பொன்வசந்தம் திரைப்பட பாடல் என்னோட வா வா வரிகள் தமிழில். நீதானே என் பொன்வசந்தம் திரைப்பட பாடல் வரிகள் தமிழில்
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
நீ என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்
கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்கி
நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பார்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவதை போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கதானடி
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும்
தீயாக பார்காதடி….
சின்ன பிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி சொல்ல
கேட்டு கொண்டால் கழுகும் பயந்து நடுங்கும்
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்
காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைகணமே
காதல் அதை பொறுக்கண்ணுமே இல்லையெனில்
கட்டி வைத்து உதைகணுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டும்மடி
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
நீதானே என் பொன்வசந்தம் திரைப்பட பாடல் என்னோட வா வா வரிகள் தமிழில். நீதானே என் பொன்வசந்தம் திரைப்பட பாடல் வரிகள் தமிழில்
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
நீ என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்
கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்கி
நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பார்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவதை போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கதானடி
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும்
தீயாக பார்காதடி….
சின்ன பிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி சொல்ல
கேட்டு கொண்டால் கழுகும் பயந்து நடுங்கும்
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்
காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைகணமே
காதல் அதை பொறுக்கண்ணுமே இல்லையெனில்
கட்டி வைத்து உதைகணுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டும்மடி
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
காற்றைக் கொஞ்சம் பாடல் வரிகள் தமிழில்
சனி, செப்டம்பர் 29, 2012
செய்திகள்
29.09.2012.By.Rajah.நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் காற்றைக் கொஞ்சம் பாடல் வரிகள் தமிழில். நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் பாடல் வரிகள் தமிழில்
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..
நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்.
நெஞ்சில் பார்த்து பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்.
தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும் ஒரு ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி..
தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் என்றும் தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி…
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா.
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்.. ஹே ஹே ஹே…
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..
நேற்று எந்தன் கன்வில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே…
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே..
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில் எந்ந மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு எண்ணம் ஓடும் தறிகெட்டு..
இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி
என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே..
மீட்டதோது மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்…
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..
நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்.
நெஞ்சில் பார்த்து பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்.
தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும் ஒரு ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி..
தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் என்றும் தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி…
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா.
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்.. ஹே ஹே ஹே…
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..
நேற்று எந்தன் கன்வில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே…
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே..
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில் எந்ந மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு எண்ணம் ஓடும் தறிகெட்டு..
இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி
என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே..
மீட்டதோது மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்…
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..
மனித உரிமை மாநாட்டில் நிச்சயம் இலங்கைக்கு
சனி, செப்டம்பர் 29, 2012
செய்திகள்
Saturday 29 September 2012.By.Rajah.௭திராக கடும் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்!வசந்த பண்டார இலங்கைக்கு அண்மையில் விஜயத்தை மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் ஹெனி மெகாலி தலைமையிலான குழு வரும் 2013 மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் நிச்சயம் இலங்கைக்கு ௭திராக கடும் தொனியிலான அறிக்கையை சமர்ப்பிக்கும் ௭ன்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு ௭திராக பிரேரணை கொண்டு வரப்படுமானால் அதற்கான முழுப் பொறுப்பையும் வெளிவிவகார அமைச்சர் ஜீ. ௭ல். பீரிஸே ஏற்றுக்கொள்ள வேண்டும் அத்துடன், ஐ.நா. வில் இலங்கையை ஆதரித்த நாடுகளை அரசாங்கம் நட்டாற்றில் விட்டுவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெளிவுபடுத்துகையில்,
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார்.
இலங்கைக்கு ௭திராக பிரேரணை முன் வைக்கப்பட்டிருக்கும் இவ்வாறானதோர் பிரேரணையூடாக யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைகளுக்கான கடும் அழுத்தத்தை பிரயோகிப்பதே மேற்கத்திய நாடுகளின் திட்டமாகவிருந்தது.
இவ்வாறானதோர் சூழ் நிலையிலேயே ஜனாதிபதி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொண்டார்.
ஆனால் இலங்கைக்கு அண்மையில் விஜயத்தை மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் தொழில்நுட்பக் குழுவான ஹெனி மெகாலி தலைமையிலான குழு ௭திர்வரும் 2013 மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் நிச்சயம் இலங்கைக்கு ௭திராக கடும் தொனியிலான அறிக்கையை சமர்ப்பிக்கும்.
இதன் பின்னர் இலங்கை தொடர்பான யுத்தக் குற்றங்களுக்கான சர்வதேச புலன் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு அக்குழு இங்கு வரும் சாத்தியங்களும் உள்ளன.
அத்தோடு அவ்வாறான புலன் விசாரணைக்குழு இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளாது விசாரணைகளை நடத்தக் கூடிய அதிகாரமும் உள்ளது.
இதுவே நாம் ௭திர்நோக்கியிருக்கும் பயங்கரமான நிலைமையாகும்.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு ௭திராக அமெரிக்கா பிரேரணையை கொண்டு வந்தபோது ௭மக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டோம்.
அப்போது 13 நாடுகள் அமெரிக்காவின் பிரேரணையை ௭திர்த்து ௭மக்கு ஆதரவு வழங்கியது. அமெரிக்காவின் பிரேரணையை ௭திர்த்தே ஆதரவு கேட்டோம். ஆனால் இன்று ௭ன்ன நடந்துள்ளது ௭ன்று கேள்வி ௭ழுப்பினார்.
கிளிநொச்சியில் வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு!
சனி, செப்டம்பர் 29, 2012
செய்திகள்

இந்த விபத்துச் சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த தம்பிராசா எழில்வேந்தன்(வயது19) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். வாகனங்களை மறித்து விட்டுக் கொண்டிருந்த சமயம் பின்னால் வந்த பக்கோ கனரக வாகனம் இளைஞரின் மீது மோதி அவர் மீது ஏறியுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். தற்போது இவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணை களை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை வீதிப்புனரமைப்பினால் இடம்பெற்ற 4வது விபத்துச்சம்பவமும், உயிரிழப்புச் சம்பவமும் இதுவாகும், இதற்குக் காரணம் வீதிப்புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள் ள தென்னிலங்கை நிறுவனங்கள் போதியளவு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்வதில்லை.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து பொலிஸாரும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் கூட நடவடிக்கை எடுப்பதில்லை, கண்டுகொள்வதுமில்லை என்பது இங்கு குறிப்பிடத்ததக்க விடயமாகும்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். தற்போது இவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணை களை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை வீதிப்புனரமைப்பினால் இடம்பெற்ற 4வது விபத்துச்சம்பவமும், உயிரிழப்புச் சம்பவமும் இதுவாகும், இதற்குக் காரணம் வீதிப்புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள் ள தென்னிலங்கை நிறுவனங்கள் போதியளவு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்வதில்லை.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து பொலிஸாரும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் கூட நடவடிக்கை எடுப்பதில்லை, கண்டுகொள்வதுமில்லை என்பது இங்கு குறிப்பிடத்ததக்க விடயமாகும்.
கணவன் மனைவிக்கு இடையில் சண்டை குழந்தை அடித்துக் கொலை
சனி, செப்டம்பர் 29, 2012
செய்திகள்
Saturday29September2012.By.Rajah.இரண்டு வயது மற்றும் 2 மாதம் நிரம்பிய குழந்தையை தாக்கி கொலை செய்த சந்தேகத்தில் கணவன் - மனைவி ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீகலெவ - வீரகொல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் இக்கொலை இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த குழந்தையை அதன் தந்தை கற்குகை ஒன்றுக்குள் மறைத்து வைத்துள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து குழந்தையை பெற்றுத் தருமாறு தாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து குழந்தை கொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் குருநாகல் சட்ட வைத்திய அதிகாரி காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மீகலெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மீகலெவ - வீரகொல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் இக்கொலை இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த குழந்தையை அதன் தந்தை கற்குகை ஒன்றுக்குள் மறைத்து வைத்துள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து குழந்தையை பெற்றுத் தருமாறு தாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து குழந்தை கொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் குருநாகல் சட்ட வைத்திய அதிகாரி காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மீகலெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழில் கொள்ளைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளது!
சனி, செப்டம்பர் 29, 2012
செய்திகள்
Saturday29September.By.Rajah.யாழ்ப்பாணத்தில் சென்ற வாரத்தில் மட்டும் 56 கொள்ளைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுண்டுக்குழிப் பகுதியில் கடை உடைக்கப்பட்டு 17,200 பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன,
டக்கா வீதியிலுள்ள கடை ஒன்றில் 21,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன, சுன்னாகம் குப்பிளான் கிழக்கு பகுதியில் வீட உடைக்கப்பட்டு 2,77,500 பெறுமதியான வீட்டுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன, சாவகச்சேரியில் முத்துக்குரார் கடை உடைக்கப்பட்டு நிறப்பூச்சு திருடப்பட்டுள்ளது.
கைதடி தொழில் பயிற்சி நிலையத்திலுள்ள கணினி உதிரிபாகங்கள் கொள்ளயிடப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரப்பகுதியில் பட்டப்பகலில் கடை உடைக்கப்பட்டு 12,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியில் சென்று கொண்டு இருந்த பெண்ணின் தங்கச்சங்கிலி மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத நபர்களினால் அறுத்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 55,000 ரூபா என முறையிடப்பட்டுள்ளது.
கோப்பாய் பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த கொள்ளையர் குழு வீட்டைத் தீவைத்து கொழுத்திவிட்டு வீட்டில் உள்ள மோட்டார் சைக்கிள்களைத் திருடிச் சென்றுள்ளது. இச் சம்பவதுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டு யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்
சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் கவனிக்கப்படவில்லை: ஐ.நா சபையில் கரன் பார்கர் அம்மையார்!
சனி, செப்டம்பர் 29, 2012
செய்திகள்

நடைபெற்று முடிந்துள்ள ஜெனீவா- ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 21வது கூட்டத் தொடரில் உரையாற்றும்போதே அவர் இக்கூற்றினைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான நீதியினைக் கோரி ஐ.நா மனித உரிமைச் சபையில் அவர் ஆற்றிய உரையில், எங்களின் பார்வையில் சிறிலங்கா அரசின் முயற்சிகள்
உண்மையை கண்டறிதல், நீதி வழங்கல், நட்ட ஈடு வழங்கல், மேலும் இவை நடக்காதவாறு செய்தல் ஆகிய விடயங்களிலும் போதாமையாக உள்ளதோடு உண்மையை கண்டறிவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் அது ஆபத்தானதாகும் என ஐ.நா மனித உரிமைச் சபையோருக்கு எடுத்துரைத்துள்ளார்.
உண்மையை கண்டறிதல், நீதி வழங்கல், நட்ட ஈடு வழங்கல், மேலும் இவை நடக்காதவாறு செய்தல் ஆகிய விடயங்களிலும் போதாமையாக உள்ளதோடு உண்மையை கண்டறிவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் அது ஆபத்தானதாகும் என ஐ.நா மனித உரிமைச் சபையோருக்கு எடுத்துரைத்துள்ளார்.
இலங்கைத்தீவில் 100 000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உயிர் இழந்ததை சிறிலங்கா அரசாங்கம் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனைச் சுட்டிக்காட்டிய கரன் பார்கர், “சிங்கள வெற்றிப் பெருமிதம்” என்று ஐ.நா பொதுச் செயலரின் நிபுணர் குழுவினர் கூறியதைப் நினைவில் கொள்ளும் போது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் உண்மை, நீதி, நட்ட ஈடு, தீர்வு என்பன கிடைக்கப் போவதில்லை என்ற அச்சத்தினையும் ஐ.நா மனித உரிமைச் சபையோருக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைச்சபையின் சிறப்பு கண்காணிப்பாளர்களை சிறிலங்காவுக்கு விரைவில் செல்ல ஐ.நா அனுமதி கோரும் என நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.
கரன் பார்கர் அம்மையார், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வளஅறிஞர் குழுவின் பிரதிநிதியாகவும் நா.த.அரசாங்கத்தின் மதியூரைஞர் குழுவின் பிரதிநிதியாகவும் உள்ளார்.
வெள்ளி, 28 செப்டம்பர், 2012
அவுஸ்திரேலியாவிற்கு'நிர்மணி' என்ற படகு மூலம் பயணிக்க முயன்ற 77பேர் கைது
வெள்ளி, செப்டம்பர் 28, 2012
செய்திகள்

'நிர்மணி' என்ற படகு மூலம் பயணிக்க முயன்ற இந்த 77பேரில் 61 தமிழர்கள், 14 சிங்களவர்கள் இரு முஸ்லிம்கள் அடங்குவதோடு, பெண்ணொருவரும் அவரது கைக்குழந்தையும் இக்குழுவில் அடங்குவதாக கடற்படையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, புத்தளம், கொழும்பு, உடப்பு, மன்னார், சிலாபம் மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்கள், மோதர துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, புத்தளம், கொழும்பு, உடப்பு, மன்னார், சிலாபம் மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்கள், மோதர துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்
வீரபாண்டிய கட்டபொம்மனை ரீமேக் பண்ணுகிறார் மணிரத்னம்!!!!!
வெள்ளி, செப்டம்பர் 28, 2012
செய்திகள்
28.09.2012.By.Rajah.தலைப்பை பார்த்துவிட்டு புது மேட்டரா இருக்கே என படிக்க வந்த அனைவருக்கும் வணக்கம்! ஒரு நகைச்சுவை (கற்பனை) பதிவை போடலாம்னு கழிவறையில் உட்கார்ந்து கன நேரம் யோசிச்சபோ கிடைத்த தலைப்பு தான் இது
.
இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த எழுத வில்லை! அதையும்
மீறி புண் படுத்தி இருந்தால் தயை கூர்ந்து மன்னித்தருள்க!
சரி நாம மேட்டருக்கு வருவோம்! நம்ம மணி ரத்தினம் சார் வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்த ரீமேக் பண்ணி வசனம் எழுதி இருந்தார்னா எப்படி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனை!!!!
இடம்: ஒரு அருவி அருகில் அரண்மனை ! ( மணிரத்னம் படம்ல அருவி கண்டிப்பா இருக்கணும்)
நேரம் : இரவு (மேல சொன்ன அதே மணி ரத்னம் தான் காரணம் )
( நம்ம தமிழ் படத்துல தான் இங்கிலீஷ் காரன் கூட தமிழ் பேசுவான் அதனால லாஜிக்லாம் பாக்க கூடாது வசனம் தான் முக்கியம் )
காட்சி- 1
ஜாக்சன் :- ஜாக்சன் !
வீர
பாண்டிய கட்ட பொம்மன்: பொம்மன் ! வீர பாண்டிய கட்ட பொம்மன் !! (மீசையை முறுக்கி
கொண்டே )
பெயரின் நீளம் கருதி இனி ஜாக்சன் , ஜாக் எனவும் வீரபாண்டிய கட்ட பொம்மன் .வீரா வாகவும் !!
ஜாக்: குடுக்கணும் !
வீரா
: என்ன ?!
ஜாக்: வரி,வட்டி,கிஸ்தி!
வீரா: முடியாது!?
ஜாக்: குடுக்க வைப்பேன்
வீரா: மிரட்டுறீங்களா கலெக்டர் சார், இது வீரா சார், வீராப்பு காட்டாதீங்க! , வீணா போய்டுவீங்க!
ஜாக்
: நிறுத்து உன் பேச்சை !
வீரா
: முதல்ல நீ நிறுத்து! நான் நிறுத்துறேன் !!
ஜாக்: எதை நிறுத்தனும் ?
வீரா: ஒங்க ஊரு பொருள விக்கிறதுக்கு வந்த நீ!, எங்ககிட்டயே வரி வாங்குறியே அத நிறுத்து ! நான் நிறுத்துறேன் !
எங்க ஆளுங்கள கைக்குள்ள போட்டுக்கிட்டு எங்களையே காட்டி குடுக்க சொல்ற பார்! அத நிறுத்து! நான் நிறுத்துறேன் !
நீ காசு குடுத்ததும் பல்ல காட்டிகிட்டு எங்கள காட்டி குடுக்குறான் பார் ஒரு கம்மிநாட்டி அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் !
நீ காசு குடுத்ததும் பல்ல காட்டிகிட்டு எங்கள காட்டி குடுக்குறான் பார் ஒரு கம்மிநாட்டி அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் !
அடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன்!!!!
(வில்லன் வாய்ஸ் கொடுப்பது நம்ம கெளதம் -எப்பவும் அவர்தானே வில்லனுக்கு வாய்ஸ் கொடுப்பாரு )
ஜாக்சன் ( தனது கூட்டாளிகளுடன் ) : நாம எங்க போனாலும் -----தா அந்த ஊற ஒரு கலக்கு கலக்கணும் ! அந்த ஊரை நாம ஆளனும்!
அந்த பாண்டியன் ரொம்ப பிரச்சினை பண்றான் ! தூக்கிருங்க ! என்று சொல்லி கொண்டிருக்கும்போதே!
தூரத்தில் கோட்டையின் கதவுகளை உடைத்து கொண்டு வீர பாண்டியன் எனும் பாண்டியன் வருகிறார்!
பாண்டியன்:- இந்த பாண்டியன் ரொம்ப பிரச்சினை பண்றான் ! கிஸ்தி! வரி ! வட்டி எதுவும் தரமட்டிகிறான், அவன் கண்ண எடுத்துட்டு வந்தா எதோ ஐம்பது பொன் காசு தாரேன்னு சொன்னியாமே ! வா ! என் கண்ண பொட்டயாக்கு ! என தனது இமைகளை கைகளால் விரித்து கண்களை காட்டுகிறார்
ஜாக்சன்: வேணாம் பாண்டியன் என்னபத்தி உனக்கு தெரியாது !?
பாண்டியன் : நீ யாருன்னும் தெரியும் ! ஒங்க அம்மா இங்க எப்படி வந்தாங்க அப்படின்னும் தெரியும்டா!
அந்த நேரத்தில் பின்னணி பாடலுடன் ஒரு சண்டை காட்சி!
என்ன பாக்குறீங்க ! படம் முடிஞ்சு போச்சு ! ஒரே காட்சியில ரெண்டு படம் பாத்த மாதிரி இருந்துச்சா ! அப்புறம் என்ன ! பதிவு எப்படி இருக்கிறது என மறக்காமல் கமெண்ட் போட்டுட்டு கெளம்புங்க !!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)