siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 26 நவம்பர், 2019

குழந்தைகளை தொலைபேசி பாவனையிலிருந்து பாதுகாக்க இந்தோனேஷிய அரசின் திட்டம்

குழந்தைகள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாவதை தடுக்க புதுமையான வழிமுறையொன்றை இந்தோனேசிய அரசாங்கம் எடுத்துள்ளது.இன்றைய சமூகத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மிக அதிகமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட வயது வித்தியாசமில்லாமல்
 குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என அனைவரும் எல்லோரும் அதற்கு அடிமையாகி இருக்கிறார்கள். இதனால், பெற்றோர்கள்
 தங்கள் குழந்தைகளை அதிலிருந்து பாதுகாக்க சிரமப்படுகிறார்கள்.இந்நிலையில், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள பண்டங் நகரில் ஸ்மார்ட்போன் 
பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமையாவதை தடுக்க நூதன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி அரசு சார்பில் 10 பாலர் பாடசாலைகள் மற்றும் 2 உயர்நிலை பாடசாலைகயில் பயிலும் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகள் 
கொடுக்கப்பட்டு அதனை வளர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுவரை சுமார் 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசின் இந்த திட்டத்திற்கு பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.”என்னை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்” என்று 
எழுதப்பட்டு கோழிகுஞ்சுகளின் கூண்டுகளில் வைக்கப்பட்டுள்ளன.“இந்த கோழிக்குஞ்சு வளர்ப்புத் திட்டம் குழந்தைகளின் கவனத்தை ஸ்மார்ட்போன் திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்டது மட்டுமல்லாமல், விலங்குகளை
 நேசிப்பதற்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கும் அவர்களை வழிநடத்த நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.“அவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு முன்பும், 
பாடசாலையில் இருந்து வீட்டிற்கு வந்த பின்னரும் கோழிகளுக்கு உணவளிப்பார்கள். இதன்மூலம் 
அவர்கள் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்வார்கள்
. ”இணைய பாதுகாப்பு நிறுவனமான ESET இன் 2019 கணக்கெடுப்பில், இந்தோனேசியாவில் சராசரியாக மக்கள் தினமும் மூன்று மணிநேரம் இணையத்தில் நேரத்தை செலவிடுவதாகவும், அதில், 10 சதவீதமானோர் வலைத்தளத்தில் 10 மணித்தியாலங்களை செலவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது

புதன், 13 நவம்பர், 2019

சீனாவில் இளைஞனின் காதிற்குள் படையெடுத்து குடியிருந்த கரப்பான் பூச்சிகள்

சீனா குவாண்டாங் மாநிலத்தில் உள்ள ஹுயாங் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனின் காதுக்குள் இருந்து கரப்பான் பூச்சிகளை வைத்தியர்கள் அகற்றியுள்ளார்கள்.காதுக்குள் ஏதோ அசைவு இருப்பதை உணர்ந்து, இளைஞன் தனது 
குடும்பத்தினரிடம் காதுக்குள் எதாவது இருக்கிறதா எனப் பார்க்கச் கூறியுள்ளார்.ஆனால், அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. வலி அதிகரித்ததன் காரணமாக உடனே அவர் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவரின் காதை பரிசோதித்துப் பார்த்த வைத்தியருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. காதுக்குள் ஒரு கரப்பான் பூச்சி பத்துக்கும் மேற்பட்ட குட்டிகளோடு இருந்துள்ளது. இதனால் உடனடியாக
 ஒவ்வொரு கரப்பான் பூச்சியாக கருவி மூலம் வெளியே எடுத்துள்ளனர்.குட்டிகளை வெளியே விரைவில் எடுத்துவிட்டாலும், தாய் கரப்பான் பூச்சியை
 அகற்றுவதில் வைத்தியர்களுக்கு பெரும் சிரமம் இருந்துள்ளது. இதனால், களிம்பு கொண்டு காதை சுத்தப்படுத்தி நீண்ட போராட்டத்துக்குப்பின் தாய் கரப்பான்பூச்சியை அகற்றியுள்ளனர். ‘லீவ் தினமும் சாப்பிட்டதுபோக 
மீதி உணவுகளை தனது படுக்கையறையிலே 
வைத்துள்ளார். அதனால் உணவை சாப்பிட வரும் கரப்பான் பூச்சிகள் காதுக்குள் சென்றிருக்கின்றது.எத்தனை நாட்களாக கரப்பான் பூச்சி காதில் இருந்தது எனத் தெரியவில்லை எனவும், 
வைத்தியர் தெரிவித்துள்ளார்.