siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 29 டிசம்பர், 2014

ராணியின் பாதுகாவலர்களை தாக்க சதி? ஐ.எஸ். தீவிரவாதிகள்!!

 இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பாதுகாவலர்களை தாக்குவதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
ராணியின் பாதுகாவலர்களில் ஒருவரை கடத்தி கொல்வதற்கு அவர்கள் சதி செய்துள்ளதாக ‘தி மிரர்’ பத்திரிகை கூறி உள்ளது.
இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ‘‘உளவுத்துறையினர், ஐ.எஸ். தீவிரவாதிகளின் இணையதள உரையாடல்களை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளனர். ராணி குடும்பத்தினரை தாக்குவது கடினம் 
என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிந்துள்ளனர். எனவே அவர்கள் ராணியின் பாதுகாவலர்களில் ஒருவரை அவர்கள் தாக்குதல் இலக்காக கொள்ளக்கூடும்’’ என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து ராணியின் பாதுகாவலர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை, 
கிளாரன்ஸ் இல்லம் ஆகியவற்றில் ராணியின் பாதுகாவலர்கள் எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளனர்.
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

தனக்குதானே தீ வைத்துக்கொண்ட பெண்

பிரான்சில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்லேட்யூஸ் நகரின்போவ்லோன் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒன்றரை வயது மகள் வீட்டுக்குள் உறங்கி கொண்டிருந்த போது வீட்டு முற்றத்தில் 30 வயது பெண் தீ மூட்டிக்கொண்டுள்ளார். பெண்ணின் கணவர் சடலத்தை கண்டுபிடித்து அது பற்றி பொலிசாருக்கு அறிவித்துள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 20 டிசம்பர், 2014

கியூபா அமெரிக்கா வுக்கு 50 ஆண்டுகளின் பின் மலரும் உறவு!

1962ம் ஆண்டுக்குப் பின் முற்றாக முறிந்துபோன அமெரிக்கா - கியூபா இடையிலான உறவு மீண்டும் மலர்ந்துள்ளது. கியூபாவில் 5 வருடங்களுக்கு முன் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த 65 வயதான க்ரோஸ் என்ற புலனாய்வாளர் நேற்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கியூபாவுடன் தூதரக உறவு மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். அமெரிக்க அரசின் வலைதள பணிகளை

 மேற்கொள்வதற்காக 2009ம் ஆண்டு 65 வயதான க்ரோஸ் என்பவர் கியூபா சென்றார்.அங்கு உளவு வேலை பார்த்ததாக அவரை கியூபா அரசு சிறைப்பிடித்தது. இதுதொடர்பாக எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் கியூபா அரசு உடன்படவில்லை. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் தெற்கு புளோரிடா மாநிலத்தில் உளவு பார்த்ததாக கியூபாவை சேர்ந்த 5 பேரை அமெரிக்கா சிறைபிடித்தது. கடந்த 5 ஆண்டுகளாக இருதரப்பிலும் எவ்வித தூதரக உறவும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், கியூபாவில் பணையக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டு இருந்த க்ரோஸ் விடுவிக்கப்பட்டார். அவர் அமெரிக்க விமானம் மூலம் புதன்கிழமை இரவு வாஷிங்டனுக்கு சென்றார். இதனைத் தொடர்ந்து தான் பிடித்து வைத்திருந்த கியூபாவை சேர்ந்த 5 பேரையும் அமெரிக்கா விடுவித்தது. இதை தொடர்ந்து அந்நாட்டுடன் தூதரக உறவுகளை மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

கியூபா அதிபர் ரவுல் கஸ்ரோ அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் தொலைபேசியில் பேசியுள்ளதன் மூலம் தூதரக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் துவங்கும் என்று அமெரிக்க குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் மார்கோ ருபியோ கூறியுள்ளார்.

தென் ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த இரு நாட்டுத் தலைவர்களும் தவிர்க்க முடியாத சந்தர்பம் ஒன்றில் கைகுலிக்கிக்கொண்டனர். பகை நாடுகளாகப் பார்க்கப்பட்ட இரு நாடுகளின் தலைவர்களும் கைகுலுக்கிக்கொண்ட காட்சி உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இரு நாட்டுத் தலைவர்களும் மகிழ்வோடு கைகுலுக்கும் காலம் மலர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


செவ்வாய், 16 டிசம்பர், 2014

மனைவியை 2 நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த நபர்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் முன்னாள் கணவர் உள்பட 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இது குறித்து மாநில அரசிடம் கேட்டால் மீடியாக்கள் உத்தர பிரதேசத்தை மட்டுமே உற்று நோக்குவதாக கூறுகிறது.

இந்நிலையில் தான் உத்தர பிரதேசத்தில் மேலும் ஒரு பலாத்கார சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ராம்கட்டைச் சேர்ந்தவர் ரிஸ்வான். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரிஸ்வான் வேலைக்கு போகாமல் தகாத வழியில் சென்றுள்ளார். இதை தட்டிக்கேட்ட மனைவி நல்ல வழியில் செல்லுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த காரணத்திற்காக ரிஸ்வான் தனது மனைவியை விவாகரத்து செய்தார். விவாகரத்திற்கு பிறகு இருவரும் தனித் தனி வீடுகளில் வசித்து வருகிறார்கள். ரிஸ்வான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ரிஸ்வான் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து முன்னாள் மனைவியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்கள் 3 பேரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 12 பேர் சுட்டுக்கொலை

தலீபான்கள் அட்டூழியம் ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் இங்கிலாந்து நாட்டின் முன்னாள் ராணுவ தளம் உள்ளது. அதன் அருகில் உள்ள பகுதியில் தொழிலாளர்கள் நேற்று கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கே மோட்டார் சைக்கிள்களில் வந்த தலீபான் தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 12 தொழிலாளர்கள் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். இது குறித்து தகவல் அறிந்து வந்த பாதுகாப்பு படையினர், அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 4 தீவிரவாதிகள் பலியாகினர். 3 தீவிரவாதிகளை அவர்கள் உயிருடன் பிடித்தனர். இதற்கிடையே காபூல் நகரில் தீவிரவாதிகள் ராணுவ வீரர்களை குறிவைத்து பஸ் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 7 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
ஆப்கானில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வெறிச்செயலுக்கு தலீபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். இதேபோல் தீவிரவாத தாக்குதலுக்கு இரண்டு வெளிநாட்டு ராணுவ வீரர்களும் பலியாகியுள்ளனர். இந்த சம்பவங்கள், ஆப்கானிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

10 விமானங்கள் புதிதாக கொள்வனவு...

 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானங்கள் பிரிவிற்கு வலுச்சேர்க்கும் நோக்கிலேயே இந்த விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் டொக்டர் ரவீந்திர ருபேரு குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கென தற்போது 23 விமானங்கள் காணப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>