siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 16 டிசம்பர், 2014

மனைவியை 2 நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த நபர்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் முன்னாள் கணவர் உள்பட 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இது குறித்து மாநில அரசிடம் கேட்டால் மீடியாக்கள் உத்தர பிரதேசத்தை மட்டுமே உற்று நோக்குவதாக கூறுகிறது.

இந்நிலையில் தான் உத்தர பிரதேசத்தில் மேலும் ஒரு பலாத்கார சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ராம்கட்டைச் சேர்ந்தவர் ரிஸ்வான். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரிஸ்வான் வேலைக்கு போகாமல் தகாத வழியில் சென்றுள்ளார். இதை தட்டிக்கேட்ட மனைவி நல்ல வழியில் செல்லுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த காரணத்திற்காக ரிஸ்வான் தனது மனைவியை விவாகரத்து செய்தார். விவாகரத்திற்கு பிறகு இருவரும் தனித் தனி வீடுகளில் வசித்து வருகிறார்கள். ரிஸ்வான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ரிஸ்வான் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து முன்னாள் மனைவியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்கள் 3 பேரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 comments:

கருத்துரையிடுக