siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 6 செப்டம்பர், 2012

நொக்கியாவின் இறுதி நம்பிக்கை லுமியா 920: கைகொடுக்குமா?

06.09.2012.by.rajah. கையடக்கத்தொலைபேசிச் சந்தையில் நொக்கியா என்ற சொல்லை அறியாதவர்கள் இல்லையெனலாம். குறிப்பாக ஆசிய நாடுகளில் நொக்கியாவுக்கு என்றுமே தனியான கூட்டமிருந்தது. நியாயமான விலையில்,நீண்டகால பாவனைக்கேற்ற அனைவருக்குமான கையடக்கத்தொலைபேசியினைத் தயாரிக்கும் நிறுவனம் என்றால் அது நொக்கியாதான் என இன்றும் பலர் கூறுவதனைக் கேட்கலாம். குறைந்த விலை, 3 ஆம் தர மற்றும் மத்தியதர சந்தைக்கான கையடக்கத்தொலைபேசிகளைத் தயாரிப்பதில்...

பிபாஷா பாசு நடிக்கும் பில்லி சூனிய கதை

06.09.2012.by.rajah.பாலிவுட்டில் 1980ல் நடந்த ஒரு நடிகையின் உண்மை கதை ‘ராஸ் 3' என்ற பெயரில் இந்தியில் 3டி படமாக தயாராகிறது. ‘அவதார்' படத்தை தயாரித்த ஹாலிவுட் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ்பட் இணைந்து இதை தயாரிக்கிறார். விக்ரம் பட் இயக்கத்தில் நாயகனாக இம்ரான் ஹாஷ்மியும், நாயகிகளாக பிபாஷா பாசுவும், இஷா குப்தாவும் நடிக்கின்றனர். ‘ராஸ்' படத்தின் முதல்பாகம் 2003ம் ஆண்டு வெளியானது. இதில் பிபாஷா பாசு, டினோ மோரியா...

அமெரிக்காவின் கடன் சுமை அதிகரிப்பு

06.09.2012.by.rajah. அமெரிக்காவின் கடன் சுமை 16 லட்சம் கோடி டொலரை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு போட்டியிடும் பால் ரயன், லோவாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், கடன் சுமை அதிகரித்து வருவது நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் கேடு விளைவிக்கும். இது ஜனாதிபதி ஒபாமா அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் தகர்த்துவிட்டது. இந்த கடன் சுமை வேலை வாய்ப்பு பிரச்னையை உருவாக்கி விட்டுள்ளது....

கனடாவில் 27,000 அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

06.09.2012.by.rajah. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 20 ஆண்டுகள் கழித்து சுமார் 27,000 அரசுப் பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டும், வரிச்சுமையை குறைக்க கோரியும் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு தொழிற்சங்கத்தினை சேர்ந்த 25,000 பேரும், மற்ற இரண்டு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 2000 பேரும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் நடந்த அதே நாளில் முதல்வர் கிறிஸ்ட்டி கிளார்க், தனது அமைச்சரவையில் மாற்றங்களை...

சட்டவிரோதமாக குடியேற முயன்ற அகதிகளின் படகு விபத்துக்குள்ளானது: 39 பேர் பலி

06.09.2012.by.rajah. துருக்கியில் சட்டவிரோதமாக குடியேறிய சிலர் ஐரோப்பாவுக்கு படகில் செல்ல முயன்ற போது, அவர்கள் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியான குழந்தைகள் உட்பட 39 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன, 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். துருக்கியின் மேற்கு கடல் பகுதியிலிருந்து புறப்பட்ட படகு, கிரேக்க தீவுகளுக்கு அருகில் சென்ற போது கடலின் நடுவே இருந்த பாறையில் மோதி கடலில் மூழ்கியதாக...

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் செயற்படுத்துமாறு கோரிக்கை

    06.09.2012.by.rajah. சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் செயற்படுத்துமாறு மத்திய அரசிற்கு திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு வலியுறுத்தியுள்ளது. திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம்,இன்று காலை 10 மணிக்கு, சென்னை பெரியார் திடலில் மானமிகு துரை-சக்ரவர்த்தி நிலையத்தில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத்...

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் நாளை இலங்கை வருகிறார்!

    06.09.2012.by.rajah. இலங்கை, மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவர் மைக்கேல் சிசன் நாளை இலங்கை வருவார் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அவர் இலங்கையர்களுக்கு தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வகையிலான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் இலங்கையுடன் உறவினை வளர்த்துக் கொள்ளும் வழி முறைகள் குறித்து ஆராயவிருப்பதாகவும், குறிப்பாக வர்த்தக, பொருளாதார, சுற்றுலா வாய்ப்புகள் குறித்து அவதானம் செலுத்தவிருப்பதாகவும்...

யாழ். பல்கலைக்கழகம் இன்று திறந்திருந்த போதிலும் விரிவுரையாளர்கள் எவரும் வருகை தரவில்லை!

    06.09.2012.by.rajah. இலங்கையில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நடத்தி வருகின்ற தொழிற்சங்கப் போராட்டத்தையடுத்து, திடீரென இழுத்து மூடப்பட்ட பல்கலைக்கழகங்களை அரசாங்கம் வியாழனன்று திறந்திருந்தது. எனினும் ஆசிரியர்கள் பல்கலைக்கழகங்களுக்கு சமூகமளிக்கவில்லை. இதன் காரணமாக அங்கு கல்விச் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை. அரசாங்க அறிவிப்பையடுத்து, யாழ் பல்கலைக்கழகத்திற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய மாணவர்களே வருகை தந்திருந்ததாக அந்தப் பல்கலைக்கழக...

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் அகிலதாஸ் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்! வடக்கின் வசந்தம்

    06.09.2012.by.rajah. கொக்குவில் இந்துக் கல்லூரியில் சிங்கமாகக் கர்ச்சித்துக் கொண்டிருந்த அதிபர் அகிலதாஸ் கொக்குவில் இந்துக் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணமாக பெருமளவு பணமோசடி என கல்லூரியை விட்டு அவரை அகலச் செய்தவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக கொக்குவில் இந்துக் கல்லூரி ஏனைய பலம் பொருந்திய கல்லூரிகளுக்கு நிகராக வருவதற்கு ஆணிவேராக இருந்தவர் அகிலதாஸ். கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்களுக்கு...

தமிழரின் அக வாழ்விலும் புற வாழ்விலும் பனை

06.09.2012.BY.rajah. மனித வாழ்க்கை இயற்கையோடு நெருக்கமாக இணைந்துள்ளது. மரமும் மலையும் மனிதனின் மனதிலே நிறைந்திருந்தன. ஆறும் கடலும் அவனது பார்வையிலே நிலைத்திருந்தன. மண்ணும் விண்ணும் எண்ணத்திலே இணைந்திருந்தன. மனிதன் வாழ்க்கை நடைமுறைகள் இயற்கையின் தோற்றங்களோடு தொடர்புற்று விளங்குகின்றன. தமிழர் வாழ்க்கையில் இப்பண்பினைச் சிறப்பாகக் காண முடிகின்றது. அதனைப் பல தமிழ்ப் பாடல்களும் சான்றுபகிர்கின்றன. குறிப்பாக இந்த ஆய்வுக் கட்டுரையில் தமிழர் வாழ்வியலோடு...

உயிரினங்களும் அவற்றின் கண்களும்........

06.09.2012.BY.rajah. உலகிலுள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் பார்ப்பதற்கு கண்கள் மிகவும் இன்றியமையாதவையாகும். அந்தவகையில் உயிரினங்களும் அவற்றின் கண்களும் தொடர்பான சில சுவாரஷ்சியமான சிறப்பியல்புகள் வருமாறு..... உலகிலுள்ள உயிரினங்களில் மிகப்பெரிய கண்ணினைக் கொண்ட உயிரினமாக இராட்சத ஸ்க்விட்(Giant Squid) விளங்குகின்றது. இதன் கருவிழியின் அகலமானது 18 அங்குலங்கள் ஆகும். அதாவது ஒரு தர்ப்பூசணியின் அளவினை ஒத்ததாகும். மனிதர்களுக்கு பிறப்பின்போது...

இலங்கை ஜனாதிபதியின் வருகைக்கு ௭திர்த்து இந்திய பாராளுமன்றத்தில் தமிழக ௭ம்.பி.க்கள் கோஷம்

06.09.2012.BY.rajah.   இந்திய பாராளுமன்றத்தில் நேற்று அ.தி. முக., தி.மு.க., இந்திய கம்யூ னி ஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ௭ம்.பி.க்கள் இலங்கை ஜனா திபதி இந்தியா வருவதற்கும், இல ங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற் சிய ளி ப் பதற்கும் ௭திர்ப்பு தெரிவித்து கோஷம் ௭ழு ப்பியதால் பெரும் பரபரப்பு ஏற் ப ட் டது. இதன்போது ௭ம்.பி.க்கள் சிலர், பதா கைக ளை யும் ஏந்தி நின்றனர். காலையில் லோக் சபா ஆரம்பித்ததும் கேள்வி நேரம் பாதி ப்பு...

தமிழ் மொழியையும் தமிழ்க் கல்வியையும் காப்பாற்றுவதற்கு அரசியல் அதிகாரம் அவசியமானது: தொல் திருமாளவன்

  06.09.2012.BYrajhh. உலகெங்கும் பலநாடுகளிலும் கிளைகளை அமைத்து தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் பணிகளை பல ஆற்றிவருகின்ற உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இந்த தமிழ்க கல்வி மாநாட்டிலே நான் பங்கு பற்றுவதில் பெருமையடைகின்றேன். இந்த மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது, அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்றெல்லாம் எனக்கு ஆலோசனை கூறப்பட்டது. அதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனாலும் நாங்கள் ஒரு விடயத்தை மட்டும் மறந்து விடக்கூடாது. நமது கல்வியாக இருந்தாலும்,...

இலங்கையில் நாளொன்றுக்கு 11 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர்

06.09.2012.BY.rajah. இலங்கையில் நாளொன்றுக்கு பதினொரு பேர் தற்கொலை செய்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி வருடத்தில் 4000த்திற்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொள்வதாக சுகாதார அமைச்சின் மனநலப் பிரிவு குறிப்பிடுகின்றது. அநேகமானவர்கள் கிருமி நாசினிகளை உட்கொண்டு இவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். 20 முதல் 45 வயது வரையிலானவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்ளவதாகவும், இந்த மரணங்களை தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது....

வரமராட்சியில் மாணவியுடன் வல்லுறவில் ஈடுபட்டவரை மடக்கி பிடித்த இளைஞர் குழு: தப்ப விட்ட கோப்பாய் பொலிஸார்

06.09.2012.BY.rajah.   வீதி திருத்த வேலைகளுக்காக வந்தவர் பாடசாலை மாணவியொருவருடன் வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இளைஞர் குழுவினால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சியைச் சேர்ந்த மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்த வீதி வேலை செய்து வரும் நபர் ஒருவர், குறித்த...

முல்லைத்தீவில் போரில் பாதிக்கப்படாத மக்களுக்கு இந்திய வீடுகள்: இந்தியாவிடம் முறையிடுவோம்- சிறீதரன் எம்.பி

06.09.2012.BY.rajah. முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்றுள்ள 500 வீடுகளில் பெரும்பாலானவற்றை யுத்தத்தினால் பாதிக்கப்படாத மக்களுக்கு வழங்க மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் முறையிடவுள்ளதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 2ம் கட்டமாக மாவட்டத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ள 500 வீடுகளில் பெரும்பாலனவை யுத்தத்தினால்...

கிளி.கண்டாவளை பிரதேசத்தில் நிரந்தர படைமுகாம் அமைக்க திட்டமிடும் இராணுவம்

06.09.2012.BY.rajah. கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் நிரந்தர படைமுகாம்களை அமைப்பதற்கென தனியார் நிலம் உட்பட, சுமார் 2ஆயிரம் ஏக்கர் நிலத்தை தமக்கு வழங்குமாறு படையினர் பிரதேச செயலகத்திடம் அனுமதி கோரியிருக்கும் விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் சுமார் 418ஏக்கர் நிலத்தை வழங்குமாறு படையினர் அனுமதிகோரியுள்ள நிலையில், தற்போது கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிலும் சுமார் 2ஆயிரம்...

மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அமெரிக்க நியூயெர்ஸி மாநிலத்தின் சிறந்த ஆசிரியை கைது

06.09.2012.By rajah அமெரிக்க மாநிலத்தின் மிகச் சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக கடந்த ஆண்டு பெயர் குறிப்பிடப்பட்ட நியூயெர்ஸி மாநிலத்திலுள்ள உயர் பாடசாலையொன்றின் ஆசிரியையொருவர் 15 வயது மாணவர் ஒருவருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வெஸ்ட் ஒரேஞ் உயர் பாடசாலை ஆசிரியையான ௭ரிக்கா டிபலோ (33 வயது) சிறுவனான மாணவனுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தமை, அவனது நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்து...

தமிழர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காமையே தமிழகத்தின் ௭திர்ப்புகளுக்கு காரணம்: ஜே.வி.பி.

  06.09.2012.BYrajah. அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கைகளினால் நாட்டிற்கு பேராபத்து ஏற்படப் போகின்றது. இலங்கை வாழ் தமிழர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காமையே தமிழகத்தின் ௭திர்ப்புகளுக்கு பிரதான காரணம். ௭னவே இந்தியாவுடன் வீணாக முரண்படாது உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வை தேட இனியேனும் அரசு முயற்சிக்க வேண்டும் ௭ன்று ஜே.வி.பி. குறிப்பிட்டுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அரசியல் கைதிகளை தொடர்ந்தும்...