siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 6 செப்டம்பர், 2012

இலங்கையில் நாளொன்றுக்கு 11 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர்

06.09.2012.BY.rajah.
இலங்கையில் நாளொன்றுக்கு பதினொரு பேர் தற்கொலை செய்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி வருடத்தில் 4000த்திற்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொள்வதாக சுகாதார அமைச்சின் மனநலப் பிரிவு குறிப்பிடுகின்றது.
அநேகமானவர்கள் கிருமி நாசினிகளை உட்கொண்டு இவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.
20 முதல் 45 வயது வரையிலானவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்ளவதாகவும், இந்த மரணங்களை தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வாழ்க்கை முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தற்கொலைச் சம்பவங்களை தடுக்க முடியும் என சுகாதார அமைச்சின் மனநலப் பிரிவுப் பணிப்பாளர் பிரசந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஏனையவர்களை அச்சுறுத்தும் நோக்கில் நஞ்சு அருந்தும் பலர் உயிரிழந்து விடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மன அழுத்தம் மன உலைச்சலிலிருந்து விடுபடுவது தொடர்பில் நாட்டு மக்களுக்கு போதியளவு விளக்கம் அளிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்