siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 28 நவம்பர், 2013

ஜேர்மன் அரண்மனையில் பற்றி எரிந்த தீ

ஜேர்மன் நாட்டில் 1000 ஆண்டு பழமைவாய்ந்த ரெனேசான்ஸ் அரண்மனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

ரெனேசான்ஸ் அரண்மனையாது பல்லாயிரம் யூரோக்களால் கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்தாகும்.
இந்த அரண்மனையாது சரியான முறையில் பராமரிக்கப்படாததால் 1956ம் ஆண்டு பள்ளிக்கூடமாக சோவியத் ராணுவத்தினரால் மாற்றப்பட்டது.

பின்னர் 1971ம் ஆண்டு அரண்மனையில் சீரமைப்பு பணிகள் நடந்தபோது அருங்காட்சியாகவும், நூலகமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்கு திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் 100 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்களால் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
மேலும் இவர்களில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி பதவி நீக்கம் - தேர்தலில் போட்டியிட தடை


வரி மோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி அந்நாட்டு நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் அவர், நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்புக்கு முந்தைய விவாதத்தின்போது பெர்லுஸ்கோனியின் ஆதரவாளர்கள் சிலர், அவரை நெல்சன் மண்டேலாவுக்கு இணையாகப் புகழ்ந்தாலும் அவரது நீக்கம் தவிர்க்க இயலாததாகிவிட்டது. பின்னர் தனது இல்லத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பெர்லுஸ்கோனி, இது ஜனநாயக துக்கநாள் என்று விமர்சித்ததுடன் தனது போராட்டம் ஓயாது என்றும் தெரிவித்தார்.
   
இந்த நீக்கத்தின்மூலம், 3 முறை பிரதமர் பதவியை வகித்துள்ள பெர்லுஸ்கோனி, அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும் அவர் உடனடியாகக் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இருப்பினும் கைதுக்கு வாய்ப்பில்லை என அவரது வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.