siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 3 ஜனவரி, 2013

திடீர் தீவிபத்து. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்

கனடாவில் Central York பகுதியில் புதிதாக கட்டிக்கொண்டிருந்த ஒரு வீட்டில் மின்கசிவு காரணமாக ஜனவரி 2அம் தேதி அதிகாலையில் திடீரென தீப்பிடித்ததால், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தீயை மிகுந்த சிரமத்துடன் அணைத்தனர். வீட்டினுள் கட்டிடவேலைகளுக்கு உதவும் கேஸ் சிலிண்டர்கள் இருந்ததால்,...

வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவிற்கு கடும் குளிர்

தலைநகர் டெல்லியில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் குளிர் நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் அதிகபட்சமாக 9 புள்ளி 8 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவி வருவதாகவும் இன்னும் 7 நாட்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும் வட மேற்காக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து குளிர் காற்று வீசி வருவதே அடர்த்தியான பனிப்பொழிவு நிலவ காரணம் என்று வானிலை ஆய்வு...

வேலை பார்ப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜேர்மனியில் வேலைபார்ப்போர் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக புள்ளியியல்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியது. கடந்த வருடம் 41.5 மில்லியன் பேர் வேலை பார்த்து வந்த நிலையில் 416,000 பேருக்கு இந்த ஆண்டு புதிதாக வேலை கிடைத்திருக்கிறது. அதாவது, இந்த ஆண்டு 1 சதவீதம் பேருக்குக் கூடுதலாக வேலை கிடைத்திருக்கிறது. யூரோ மண்டலக்கடன் நெருக்கடி காரணமாக வளர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டு உழைப்பாளர் சந்தையும் பல்வேறு சிரமங்களை சந்திக்கும்போது வேலைபார்ப்போரின்...

மூன்று தமிழ்ப் பெண்கள் மீது காடையர் கூட்டமொன்று பாலியல்!

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் மூன்று தமிழ்ப் பெண்கள் மீது காமவெறி பிடித்த காடையர் கூட்டமொன்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் மகாசக்தி கிராமத்தைச் சேர்ந்த இந்த மூன்று பெண்களும் வட்டமடு பிரதேசத்தில் வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த நான்கு காடையர்கள் அவர்களைப் பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். இதன்போது அந்தக் காமுகக் கயவர்களுடன் போராடிக் கொண்டிருந்த...

ஐ.நாவின் தலைமை பதவியை ஏற்றது பாகிஸ்தான்

ஐ.நா பாதுகாப்பு சபையின் தலைமை பதவியை பாகிஸ்தான் ஏற்றுள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இச்சபையில் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் உட்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளனர். இவைகள் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே அப்பதவியில் இருக்கும். இந்நிலையில் ஐ.நா சபையின் தலைமை பதவி சுழற்சி முறையில்...