siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 4 ஏப்ரல், 2013

முதியவர் ஆபாச நடவடிக்கை: நீதிபதி எச்சரிக்கை



சுவிட்சர்லாந்திலுள்ள ஜுரா மாநிலத்தைச் சேர்ந்த வயதான விவசாயி(80) ஒருவர், சிறுவர் சிறுமிகளிடம் தொடர்ந்து தவறாக நடந்துகொண்டார் என்பதால் இவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் இவர் பிறர் முன்னிலையில் மிகச்சிறிய கால்சட்டையை அணிந்துகொண்டு தனது உறுப்பு பலரது பார்வையில் படும்படி ஆபாசமாக நடந்துசெல்வது, சிறுவர்களிடம் பாலியல் முறைகேடுகளில் ஈடுபடுவது போன்ற குற்றங்களுக்காக பொலிசார் இவரை போரெண்ட்டூயி(Porrentruy) நீதிமன்றத்தில் நிறுத்தியபொழுது நீதிபதி இவருக்கு 720 ஃபிராங்க் அபராதம் விதித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பெரிய கால்சட்டை அணிய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டிலும், அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னரும் இந்த எண்பது வயது முதியவர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

இறைச்சி உணவில் ஆர்வம் குறைந்த சுவிஸ்

 ஆய்வறிக்கை தகவல் ,,
சுவிட்சர்லாந்தில் கடந்த 2012ம் ஆண்டில் இறைச்சி உணவு குறித்து புரோவியான்டி(Proviande) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ஒவ்வொருவருக்கும் தலா 3.4 சதவீதம் இறைச்சி உண்பதில் ஆர்வம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த வருடம் ஒவ்வொருவரும் சராசரியாக 51.72 கிலோகிராம் இறைச்சி உணவை சாப்பிட்டுள்ளனர். அதாவது ஒருவர் ஒரு நாளைக்கு சுமார் 141 கிராம் சாப்பிட்டதாகச் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

இறைச்சி உணவு குறைந்ததற்குப் பொருளாதாரம் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் மக்களில் பலர் வெளி உணவகங்களில் இறைச்சி உண்பதைக் குறைத்துவிட்டனர்.
இருந்தாலும் சுவிட்சர்லாந்தில் இறைச்சியின் தரமும், சுவையும் மக்களைக் கவர்ந்திருப்பது உண்மை தான். ஏனெனில் அண்டை நாடுகளான ஜேர்மனி, பிரான்சில் இருந்து இறக்குமதியாகும் இறைச்சியை விட சுவிட்சர்லாந்தில் கிடைக்கும் இறைச்சியே சிறந்தது என்று 64 சதவீதம் பேர் இந்த ஆய்வில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுவிட்சர்லாந்தில் கடந்த வருடம், சராசரியாக ஒருவர் பன்றி இறைச்சியை 23.54 கிலோவும், கோழிக்கறி 11.31 கிலோவும், மாட்டிறைச்சி 11.06 கிலோவும் சாப்பிட்டதாக இந்த ஆய்வறிக்கை புள்ளிவிபரத்துடன் விளக்குகிறது
 

திருடர்களின் கைவரிசையால் காணாமல் போன ???


வட இங்கிலாந்தில் உள்ள நியூ கேஸ்டில் நகரில் உள்ள மேயர் இல்லத்தில் அந்நகரின் தொல்பொருட்கள் மற்றும் அரிய வகை பரிசுப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இந்த இல்லத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு நள்ளிரவில் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த சுமார் 1 1/2 லட்சம் பவுண்ட்கள் மதிப்புள்ள பொருட்களை அள்ளிச் சென்றுவிட்டனர்.
திருடப்பட்ட பொருட்களில் உலகின் மிக உயரிய பரிசு என கருதப்படும் நோபல் பரிசு பதக்கமும் ஒன்றாகும். ஆயுதப் போட்டியை உலகநாடுகள் கைவிட வேண்டும் என்று சேவையாற்றிய இங்கிலாந்து நாட்டின் முன்னாள் வெளியுறவு மந்திரி ஆர்தர் ஹெண்டர்சனுக்கு 1934ம் ஆண்டு அமைதிக்கான இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவர் நியூ கேஸ்டில் நகரைச் சேர்ந்தவர் என்பதால் அவரது மறைவிற்கு பிறகும் இந்த பரிசு பதக்கம் நகர மேயரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதையும் திருடர்கள் கொண்டு சென்றுவிட்டது உள்ளூர் மக்களுக்கு வேதனை அளிக்கும் செய்தியாக உள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பெருமைக்குரிய நோபல் பதக்கத்தை எடுத்தவர்கள், உடனடியாக அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என நியூ கேஸ்டல் நகர்வாசி ஒருவர் கூறினார்.

திருடர்களின் கைவரிசையால் காணாமல் போன நோபல்


வட இங்கிலாந்தில் உள்ள நியூ கேஸ்டில் நகரில் உள்ள மேயர் இல்லத்தில் அந்நகரின் தொல்பொருட்கள் மற்றும் அரிய வகை பரிசுப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இந்த இல்லத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு நள்ளிரவில் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த சுமார் 1 1/2 லட்சம் பவுண்ட்கள் மதிப்புள்ள பொருட்களை அள்ளிச் சென்றுவிட்டனர்.
திருடப்பட்ட பொருட்களில் உலகின் மிக உயரிய பரிசு என கருதப்படும் நோபல் பரிசு பதக்கமும் ஒன்றாகும். ஆயுதப் போட்டியை உலகநாடுகள் கைவிட வேண்டும் என்று சேவையாற்றிய இங்கிலாந்து நாட்டின் முன்னாள் வெளியுறவு மந்திரி ஆர்தர் ஹெண்டர்சனுக்கு 1934ம் ஆண்டு அமைதிக்கான இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவர் நியூ கேஸ்டில் நகரைச் சேர்ந்தவர் என்பதால் அவரது மறைவிற்கு பிறகும் இந்த பரிசு பதக்கம் நகர மேயரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதையும் திருடர்கள் கொண்டு சென்றுவிட்டது உள்ளூர் மக்களுக்கு வேதனை அளிக்கும் செய்தியாக உள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பெருமைக்குரிய நோபல் பதக்கத்தை எடுத்தவர்கள், உடனடியாக அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என நியூ கேஸ்டல் நகர்வாசி ஒருவர் கூறினார்

மரங்களிலிருந்து பரவும் மகரந்தக் காய்ச்சல்: பேராசிரியர் ?


ஜேர்மனியில் விரைவில் வசந்த காலம் தொடங்கவுள்ள நிலையில் மரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம்.
இது குறித்து மருத்துவமனையின் காது மூக்குத் தொண்டை மருத்துவர் பேராசியர் ஆண்டிரீயாஸ் டீஸ்(Andreas Dietz) கூறுகையில், வசந்த காலங்களில் மரங்களில் பூக்கும் மலர்களின் மகரந்ததால் ஒவ்வாமை ஏற்பட்டு தூசிக் காய்ச்சல் பரவும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது மரங்களில் இலைகளோ, மலர்களோ பூக்கவில்லை. ஆனால் இன்றிருக்கும் குளிர் நாளை மாறி வெப்பம் பரவத் தொடங்கியதும் மலர்கள் மலரும்.
அப்பொழுது மகரந்தம் காற்றில் பரவும் வேளையில் ஒவ்வாமை தாக்கும் மனிதர்கள் தங்கள் கைகளில் கைக்குட்டையை வைத்துக் கொண்டு மூக்கை காத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
முதன் முதலில் மலரும் birch மலரில் இருந்து பரவும் மகரந்தத்தால் பாதிக்கப்படுவோரை மருத்துவமனைகள் விரைவில் எதிர்பார்க்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வடஅமெரிக்காவில் இருந்து ஜேர்மனிக்கு வந்திருக்கும் Ragweed என்ற செடியின் மலர்களால் பரவும் மகரந்தம் வீரியம் மிக்கவை. இதனாலும் ஒவ்வாமை ஏற்பட்டு காய்ச்சல் வரும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்