siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

ஜேர்மன் பிரபலங்களின் கறுப்பு பணம் அம்பலம்!

சுவிஸ் வங்கியில் ஜேர்மனிய பிரபலங்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பண விவரங்கள் அம்பலமாகியுள்ளன.

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்டத்தின் குழுத்தலைவர் யுலி ஹொனஸ் பல மில்லியன் யூரோக்கள், தொலைக்காட்சி பெண்தொகுப்பாளரான அலிஸ் ஸ்வார்ச் 200,000 யூரோக்கள், பெர்லின் மேயர் கிலாஸ் வாவிரெய்ட் என்பவர் விமான நிலையம் கட்டும் பணிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை ஊழல் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல் அதனை சுவிஸ் வங்கியில் பதுக்கிவைத்துள்ளார்.

மேலும் அரசியல்வாதிகளும் இந்த கறுப்பு பண விவகாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜேர்மனிய வருமான வரித்துறையால் கடந்த 2010ம் ஆண்டில் தொடரப்பட்ட புலனாய்வில், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பிரபலங்களின் விவரங்கள் அடங்கிய சீடி கண்டுபிடிக்கப்பட்டது.

அதில், ஜேர்மனில் மட்டும் மொத்தம் 26,000 பேர் சுவிஸ் வங்கியில் கணக்குகள் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சீடி வெளியான விபரம் குறித்த தகவல் பிற நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளுக்கு தெரியவந்ததால் அவர்களும் தங்களது நாடுகளின் வரி விவரம் குறித்த புலனாய்வில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை வரி ஏய்ப்பு செய்தவர்கள் வரியுடன் அபராதத்தையும் சேர்த்து கட்டவேண்டும் என்ற விடயத்தில், ஜேர்மன் அரசாங்கமான Social Democratic Party (SPD) க்கும், எதிர்கட்சிக்கும் வாக்குவாதம் நடந்து வருகிறது.

இதுகுறித்து SPD யின் நிதி நிபுணர் கூறுகையில், அரசாங்கத்திற்கு பணம் திரும்ப வர வேண்டும் என்பது அத்தியாவசியமாக இருப்பதால், பல நிபந்தனைகளை விதித்தால் மக்களிடமிருந்து பணம் திரும்ப கிடைக்காது என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.