siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 4 ஜூன், 2013

பரிசோதனைக்கு சென்ற ஆண், பெண்ணாக இருந்தது

 
ஹாங்காங்கில் வாழ்ந்து வரும் 66 வயதான ஆதரவற்ற ஒருவர், தன்னுடைய வயிறு பெருத்து வருவது குறித்து சந்தேகப்பட்டு மருத்துவரிடம் சென்றார்.
பரிசோதனையின் போது பெண்ணுக்கு அமைந்திருக்கும் கருப்பை அவருக்கும் உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். கருப்பையில்  கட்டி வளர்ந்ததால் அவரது வயிறு பெரிதாக  மாறியது தெரிய வந்தது.
அவருக்கு இரண்டு மரபணுக்களும் இணைந்து காணப்பட்டது. மருத்துவ வரலாற்றிலேயே இதுபோன்று மொத்தம் ஆறு பேர் தான் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பெண்களுக்குரிய டர்னர் என்ற நோய்க்குறி இருந்ததால் அவருக்கு குரோமோசோம்கள் பாதிக்கப்பட்டு கருப்பை சிறியதாக மலட்டுத்தன்மையுடன் காணப்பட்டது. எனினும் சிறுநீரகச் சுரப்பி பெரியதாகவும், ஆணுக்குரிய ஹார்மோன்களும் இருந்ததால் தாடி வளர்ச்சியும், சிறிய ஆண் குறியும் இருந்துள்ளது. அதனால் இதுவரை  அவரை ஆண் மகனாகக் காட்டியுள்ளது.
இந்தக் கட்டி வந்திருக்காவிட்டால், அவரின் புதிரான இந்த உடலமைப்பு வெளியில் தெரிந்திருக்காது என்று திங்கள் அன்று அவரைப் பரிசோதித்த இரண்டு மருத்துவமனையைச் சேர்ந்த ஏழு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
வியட்நாமில் பிறந்த அந்த சீன தேசத்தவர், ஆணுக்குரிய சிகிச்சை முறைகளை மேற்கொண்டு தொடர்ந்து ஆணாகவே இருக்கப் போவதாக மருத்துவ பத்திரிகை தெரிவித்துள்ளது
 

ரயில் பாதையில் காணப்பட்ட 2ம் உலகப்போர் குண்டினால் 1 லட்சம் பயணிகள் தவிப்பு

 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிகவும் பரபரப்பாக இயங்கப்பட்டு வரும் ரயில் பாதை அருகே 40 செ.மீற்றர் நீளமுடைய ஒரு வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிக்காக குழி தோண்டும் பணி நடைபெற்ற பொழுது இக்குண்டினைக் கண்டுபிடித்தனர். உடனே வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் குழு அங்கு வரவழைக்கப்பட்டு, குண்டு கிடந்த இடத்தை சுற்றி மக்களோ அல்லது எந்தவித நடவடிக்கைகளும் செயல்படாதவாறு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர்.
பின்னர் மணல் மூட்டைகளை அடுக்கி அந்த குண்டை செயல் இழக்கச் செய்தனர். இதனால் 150 ரயில்கள் இயங்கும் பரபரப்பான அந்த பாதையில் ரயில்கள் ஏதும் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சுமார் 1 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த குண்டு இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவிற்கு எதிராக ஜப்பான் இம்பீரியல் ராணுவத்தினரால் வீசப்பட்டு வெடிக்காமல் போனதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.