siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 4 ஜூன், 2013

ரயில் பாதையில் காணப்பட்ட 2ம் உலகப்போர் குண்டினால் 1 லட்சம் பயணிகள் தவிப்பு

 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிகவும் பரபரப்பாக இயங்கப்பட்டு வரும் ரயில் பாதை அருகே 40 செ.மீற்றர் நீளமுடைய ஒரு வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிக்காக குழி தோண்டும் பணி நடைபெற்ற பொழுது இக்குண்டினைக் கண்டுபிடித்தனர். உடனே வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் குழு அங்கு வரவழைக்கப்பட்டு, குண்டு கிடந்த இடத்தை சுற்றி மக்களோ அல்லது எந்தவித நடவடிக்கைகளும் செயல்படாதவாறு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர்.
பின்னர் மணல் மூட்டைகளை அடுக்கி அந்த குண்டை செயல் இழக்கச் செய்தனர். இதனால் 150 ரயில்கள் இயங்கும் பரபரப்பான அந்த பாதையில் ரயில்கள் ஏதும் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சுமார் 1 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த குண்டு இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவிற்கு எதிராக ஜப்பான் இம்பீரியல் ராணுவத்தினரால் வீசப்பட்டு வெடிக்காமல் போனதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 

0 comments:

கருத்துரையிடுக