siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 3 ஜூன், 2013

அம்பலமாகிய கள்ளத் தொடர்பு!


 பேயைக் கண்டறியும் பொருட்டு வைத்த கெமராவில் காதலியின் துரோகச் செயல் பதிவாகிய சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
நபரொருவர் தனது வீட்டில் பேய் நடமாடுவதாக கருதி ஒரு இரகசியக் கேமராவை வைத்து கண்காணித்து வந்துள்ளார்.
ஆனால் அந்தக் கேமராவில் பேய்கள் எதுவும் பதிவாகவில்லை.மாறாக, அந்த நபரின் காதலி, அவரது 16 வயது மகனுடன் முத்தமிட்டு கட்டியணைத்துக்கொண்டிருக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அவர் 11 வருடமாக பழகி வரும் காதலிக்கும், மகனுக்கும் இடையிலான உறவு அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து அவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, டஸ்மானிய நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் சட்டத்தின் பிரகாரம் ஆண் ஒருவர் பெண்ணொருவருடன் உடலுறவு கொள்வதற்கு குறைந்தபட்சம் 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் ஆனால் சம்பவத்தின் போது சிறுவனுக்கு வயது 16 என நிரூபணமானது.
எனினும் இது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லையென அப் பெண் கூறியுள்ளார்.
விசாரணையின் முடிவில் அப்பெண்ணுக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவரை மறு வாழ்வு மையத்திற்கு அனுப்பவும், அங்கிருந்து அவர் பயிற்சி பெற்று வருவதற்காக 6 மாத காலம் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது

0 comments:

கருத்துரையிடுக