siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 30 ஜூன், 2013

ஆள ஊடுருவும் படையினரின் நச்சுவாயு முகமூடிகள்


2009ம் ஆண்டுக்கு முன்னதாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பல இடங்களில், இலங்கைப் படையின் ஆள ஊடுருவும் படையினர் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள். குறிப்பாக இவர்களது தாக்குதல் விஸ்வமடு கிளிநொச்சி மற்றும், முல்லைத் தீவுக்குச் செல்லும் பாதைகளில் கூட நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். விடுதலைப் புலிகளின் அதி உச்ச தலைவர்கள் நடமாடும் இப் பிரதேசங்களை புலிகள் கடுமையாகப் பாதுகாத்து வந்தனர். இருப்பினும் அப்பிரதேசங்கள்ல் அவ்வேளைகளில் ஆள ஊடுருவும் இலங்கைப் படையால் நடத்தப்பட்ட சில தாக்குதல்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இருந்தபோதிலும் அதற்கான விடைகள் இப்போது கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் சில அதிர்சி தகவல்களும் உள்ளது. அதாவது வன்னியில் தற்சமயம் கண்ணிவெடிகளை அகற்றிவரும் சில அரசசார்பற்ற நிறுவனங்களில் வேலைசெய்யும் சிலர் வழங்கியுள்ள தகவல்கள் இவை. தாம் சில பகுதிகளில் ( பாதுகாப்பு காரணங்களுக்காக இடங்கள் குறிப்பிடப்படவில்லை) கண்ணிவெடிகளை அகற்றியவேளை, புதர் மற்றும் பற்றைகளில் இருந்து மறைத்துவைக்கப்பட்ட சீருடைகளை கண்டு பிடித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவை விடுதலைப் புலிகளினுடையது அல்ல என்றும், மாறாக இலங்கை இராணுவ சீருடைகளும் அல்ல எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப் பகுதிகளில் இவை ஏன் மறைத்துவைக்கப்பட்டுள்ளது என ஆராயப்பட்டவேளை சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இச் சீருடைகளை எடுத்துச் செல்லவந்த இராணுவத்தினர், அவை ஆள ஊடுருவும் அணியினர் பாவிக்கும் சீருடை என்று கூறியுள்ளார்கள். இதில் திடுக்கிடும் தகவல் என்னவென்றால், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீருடையுடன் அதி நவீன ஆயுதங்கள் மற்றும் தொடர்பாடல் கருவிகள் இருந்ததாகவும், கூடவே நச்சுவாய்க் குண்டுகளைப் பாவிக்கும்போது அணியும் தலைக் கவசமும் இருந்தாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் சில குறிப்புகள், மற்றும் வரை படங்கள் என்பன தமிழில் தான் எழுதப்பட்டிருந்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படி என்றால் இலங்கை இராணுவத்தின் ஆள ஊடுருவும் அணியை வழிநடத்தியது , இல்லை என்றால் இயக்கியதே கருணாவின் குழுவில் உள்ளவர்கள் தான் என்பது, தெளிவாகப் புலணாகிறது. இறு நேரத்தில் புலிகள் அமைப்பில் பல கருணாவின் குழுவின கலந்து போராளிகள் போல இருந்திருக்கிறார்கள். இவர்களே ஆள ஊடுருவும் அணியில் செயல்பட்டிருப்பதும் தற்போது ஆதாரபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது -

பஸில் ராஜபக்ஷ இந்தியா பயணம்!


 சிறீலங்காவிற்கும் இந்தியாவுக்கும் இடையே இராஜதந்திர ரீதியிலும் படை ரீதியிலும் முறுகல் நிலை வலுவடைந்துள்ள இந்த நேரத்தில் இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரில் ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ எதிர்வரும் 4 ஆம் திகதி புதுடில்லிக்குப் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசமைப்பின் '13' ஆவது திருத்தம் மற்றும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் என்பன தொடர்பில் சிறீலங்கா அரசின் நிலைப்பாட்டை இந்தியாவுக்குத் தெளிவாக விளக்குவதற்கே பஸில் அழைக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய சிறீலங்கா ஒப்பந்தத்தை இல்லாதொழிப்பதற்கு சிறீலங்கா அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படும் நிலையில் இந்தியா இதற்குத் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.
அவ்வாறு ஏதாவது நடந்தால் சிறீலங்காவில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்பதற்கும் அது எண்ணியுள்ளது. அத்துடன் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர்வரும் 7 ஆம் திகதி சிறீலங்கா செல்லவுள்ளார் இதேவேளை இந்தியாவில் பயிற்சிக்குச் சென்ற சிறீலங்கா படையினரை தமிழகத்தின் எதிர்ப்புக் காரணமாக நாட்டுக்குத் திருப்பி அழைத்துள்ளது இலங்கை. இவ்வாறாறு இராஜதந்திர முறுகல் நிலை வலுவடைந்து வரும் நிலையில் இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரில் அமைச் சர் பஸில் ராஜபக்ஷ புது டில்லிக்கு விரைகிறார் எனத் தெரியவருகிறது

சனி, 29 ஜூன், 2013

சிறிலங்காவை அழுத்தும் நவனீதம்பிள்ளை

     
 சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
 
 எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவுக்குப் விஜயம் மேற்கொள்ளவுள்ள நவநீதம்பிள்ளை, பிபிசிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே இதனை வலியுறுத்தியுள்ளார்.

 சிறிலங்காவில் போருக்குப் பிந்திய மாற்றங்கள் குறித்து தாம் அவதானிக்கவுள்ளதாகவும், தனது பயணத்தின் போது, சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 வரும் ஓகஸ்ட் 25ம் நாள் கொழும்பு செல்லும் நவநீதம்பிள்ளை, 31ம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருப்பார்.

 சிறிலங்கா அரசாங்கத்தினால் 2011ம் ஆண்டு விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையில் இந்த விஜயம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

வெள்ளி, 28 ஜூன், 2013

விவசாயிகள் மீது தாக்குதல் 22பேர் காயம்?


  மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமிழ் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக 22பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாகனேரி பொத்தானைப்பகுதியில் உள்ள கொழுவாமடு விவசாய கண்டப்பகுதியில் பல காலமாக தமிழர்கள் விவசாயம் செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் யுத்தம் நிறைவுபெற்ற பின்னர் இப்பகுதியில் உள்ள காணிகளை பிடித்தும் பலரிடம் ஆசை வார்த்தை காட்டி காணிகளை வாங்கியுள்ள முஸ்லிம்கள் சிலர் இப்பகுதியில் தமிழர்களின் விவசாய நடவடிக்கைகக்கு தடைகளை ஏற்படுத்திவருவதுடன் அவர்களுக்கான நீர் விநியோக நடவடிக்கைகளையும் தடுத்துவந்தனர்.
இது தொடர்பில் கடந்த ஆண்டும் இரு சமூகங்களுக்கும் இடையில் இது தொடர்பில் இப்பகுதியில் முறுகல் நிலையேற்பட்டு இராணுவத்தின் தலையீட்டின் காரணமாக அந்த முறுகல் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று அப்பகுதிக்கு சென்ற பெருமளவான முஸ்லிம் குண்டர்கள் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதன்போது 22 விவசாயிகள் காயமடைந்த நிலையில் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 17பேர் சிகிச்சை பெற்று சென்றுள்ள நிலையில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர்,
தமது பகுதிக்கான தண்ணீர் வரும்பகுதியை சில முஸ்லிம் விவசாயிகள் அடைத்துவைத்து தமது பகுதிக்கு அதனை திரும்பியிருந்தனர்.இதனை திறந்துவிடுமாறு பல்வேறு தடவைகள் கோரியபோதிலும் நடவடிக்கையெதுவும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் பல தடவைகள் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தபோதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்இதண்ணீர் இல்லாத காரணத்தினால் எமது விவசாய நடவடிக்கைகள் முடங்கிப்போகின.
இதனை கருத்தில்கொண்டு இன்று அப்பகுதியில் விவசாயம் செய்யும் நாங்கள் அப்பகுதிக்கு சென்று தண்ணீர் கட்டப்பட்டுள்ள பகுதியில் திறந்துவிட முயற்சி செய்தோம்.
இந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த பெருமளவானோர் எம்மீது தாக்குதல் நடத்தினர்.தாக்குதல் நடத்தியவர்களில் அதிகமானோர் அப்பகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்.அவர்கள் விவசாய நடவடிக்கைகளில் அப்பகுதியில் ஈடுபடுவதில்லை.திட்டமிட்ட வகையிலேயே எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்குதல் நடத்துவதன் மூலம் இப்பகுதியில் உள்ள காணிகளை தமிழர்கள் விற்றுவிட்டுச்செல்வார்கள் என அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்

தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்

 
 
  ரசாங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் வடக்கின் அதிகாரப்பகிர்வினைப் பற்றி மட்டும் பேசுகின்றனரே தவிர, வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பற்றி பேசுவதாக இல்லை. வடக்கில் 13ஆவது திருத்தச்சட்டத்தை பிரயோகிப்பதா இல்லையா என்பதை விட வடக்கின் தமிழர்களை (பாதுகாக்க அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில்ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
நேற்று நிப்பொன் ஹோட்டலில் சகோதரத்துவத்தின் மக்கள் அரண் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று வடக்கு வாழ் தமிழ் மக்கள் படும் கஷ்டங்களை கவனத்திற்கொள்ளாது வடக்கில் 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துவது தொடர்பில் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். மக்களின் அன்றாட வாழ்வாதார
பிரச்சினைகள் பற்றி கதைக்கவோ, தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்கவோ எவரும் இல்லை. அரசாங்கமும் சரி தமிழ் கட்சிகளும் சரி அவரவர் நிலைப்பாடுகளைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர்.
இன்று வரையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் பற்றி எவரும் கதைக்கவுமில்லை. இராணுவத்தினரால் பறிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பில் எந்தத் தீர்வும் எடுக்கப்படவும் இல்லை. யுத்தம் முடிவடைந்து நான்கு வருட காலமாகியும் வடக்கில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றவில்லை. மீண்டும் இராணுவக் குவிப்பே இடம்பெறுகின்றது.
வடக்கில் மட்டும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தாய், தந்தையரை இழந்தும் பிள்ளைகள், கணவனை இழந்தும் அநாதரவாக்கப்பட்டுள்ளனர். 50 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடங்களை இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். வடக்கில் உள்ள மீனவர்கள் தொடர்ந்தும் இதுவரையும் ஒரு தீர்வு காணப்படவில்லை.
மேலும், வடக்கிலுள்ள தமிழர்களுக்கு தமது மொழியிலேயே அவர்களின் கருமங்களை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இன்று வரையிலும் அப்பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. அவை தொடர்பாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் கேள்வி எழுப்பினார்.
அத்தோடு இன்றும் வட பகுதிகளில் கட்டுப்பாடுகள், பலாத்காரம், ஆட்கடத்தல்கள் நடைபெற்ற வண்ணமே உள்ளது. இவை தொடர்பில் அப் பகுதி கட்சிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வடக்கில் அடிப்படை சுகாதார வசதிகள் இன்றி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறந்த கல்வி முறைமைகள் இல்லாதுள்ளது.
யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு வழங்கப்பட்ட தமிழர்கள் இன்னமும் இராணுவக்கட்டுப்பாடுடனேயே உள்ளனர். இன்னும் பலர் சிறையில் இருக்கின்றனர். யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் இதுவரையிலும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
எனவே, இவ்வாறு அப்பதவி மக்களுக்கு பல அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. இவை தொடர்பாக அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதா? இனியாவது அரசாங்கம் இவை தொடர்பாக பேசுமா?
சிறுபான்மை மக்களுக்கு சேவைகளை வழங்க அவர்களைப் பாதுகாக்க கிடைத்த சந்தர்ப்பத்தினை அரசு தவறவிட்டுவிட்டது. ஆகவே, இனிமேலாவது அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களை மதிக்கும் செயற்பாட்டினை அரசு செய்ய வேண்டும்.
யார் ஆட்சிக்கு வருகின்றார்கள் என்பது முக்கியமல்ல. யார் வடக்கு மக்களை பாதுகாக்கப் போகின்றார்கள் என்பதே முக்கியமாகும்.

13ஆவது திருத்தம் நடைமுறையில் இருப்பின் மீண்டும் புலித் தீவிரவாதம் உருவாகுமென அரசாங்கம் நினைக்கின்றது. 13ஆவது திருத்தம் நடைமுறையில் இருந்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என தமிழ் மக்கள் நினைக்கின்றனர். ஆனால், இதில் எவை இருந்தும் பிரயோசனமற்றதே. முதலில் மக்களைப் பற்றி யோசிக்க வேண்டும். அவர்களுக்கான நியாயமான ஓர் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

வியாழன், 27 ஜூன், 2013

உக்ரேன் பிரஜைகள் இருவருக்கு கடூழிய சிறை!


 சிறீலங்காவில் கைதுசெய்யப்பட்ட உக்ரேன் நாட்டு பிரஜைகள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரிசேன இரண்டு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
போலி கடன் அட்டைகளை பயன்படுத்தி பல வங்கிகளின் தன்னியக்க பண பரிவர்த்தனை இயந்திரங்களிலிருந்து 11.1 மில்லியன் ரூபா வரையில் களவாக எடுத்தல் உட்பட அவர்கள் மீது சுமத்தப்பட்ட 26 குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்தே அவ்விருவருக்கும் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதன், 26 ஜூன், 2013

உயிருடன் கடலில் இருந்த கடல் கன்னி

 
கடல் கன்னிகள் கற்பனை என்று சொல்பவர்களும், நிஜம் என்று வாதடுகின்றவர்கள் என பலர் இந்த உலகத்தில் உள்ளனர். இவ்வாறு இருக்கும் போது கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் கடல் கன்னிகள் குறித்து சொல்கின்ற பல அதிர்ச்சிக் கதைகளையும் செவிமடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இவ்வாறான நிலையில் இஸ்ரேலுக்கு சுற்றுலா சென்ற பயணி ஒருவர் கடலில் கண்ட காட்சியால் திக்குமுக்காடிப் போனதுடன் இவர் கண்ட இக்காட்சியை வீடியோ பிடித்து பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளார்உயிருடன் கடலில் இருந்த கடல் கன்னி காணொளி! கடல் கன்னிகள் கற்பனை என்று சொல்பவர்களும், நிஜம் என்று வாதடுகின்றவர்கள் என பலர் இந்த உலகத்தில் உள்ளனர். இவ்வாறு இருக்கும் போது கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் கடல் கன்னிகள் குறித்து சொல்கின்ற பல அதிர்ச்சிக் கதைகளையும் செவிமடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இவ்வாறானகாட்சியால்பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது {,காணொளி!}

 

செவ்வாய், 25 ஜூன், 2013

சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் அழைப்பாணை


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மீண்டும் அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவருக்கு எதிரான வழக்கில் சாட்சியமளிப்பதற்கு சமுகமளிக்குமாறே நீதிமன்றத்தினால் நேற்று திங்கட்கிழமை அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சமுகமளிக்காததை அவதானித்த நீதிபதி குமுதினி விக்கிரமசிங்,க அவருக்கு இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணையை அனுப்புமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களான செ. கிருபாகரன், ச. சூரியகுமார் மற்றும் பிரகாஷ் ஆகியோர் சிறைச்சாலைகள் அதிகாரிகளினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
எனினும், சாட்சியமளிப்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சமுகமளிக்காமையினால் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


திங்கள், 24 ஜூன், 2013

பிரித்தானியா செல்லும் ஆசிய நாட்டவர்கள் 3000 பவுண்ட்களை

 
 
பிணையாக செலுத்த புதிய திட்டம்  பொருளாதார தேக்க நிலை காரணமாக உலக நாடுகள் அந்நிய நாட்டவர்களை தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற்றுவதும் உள்நாட்டவருக்கே வேலை என்ற திட்டத்தையும் மெல்ல ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இங்கிலாந்தும் ஏற்கனவே, இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளது.
தற்போது சட்டத்திற்குப் புறம்பாகத் தங்குபவர்களை ஒடுக்கும்விதமாக விசா பெறுவதன் விதிமுறைகளை மேலும் கடினமாக்குகின்றது. வரும் நவம்பர் மாதம் முதல், இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல விசா பெறுபவர்கள் காப்புத் தொகையாக அந்த நாட்டு பணத்தின்படி 3,000 பவுண்ட் (2.70லட்சம் ) செலுத்தவேண்டும்.
விசா காலம் முடிந்தபின் குறிப்பிட்ட நபர் இங்கிலாந்தை விட்டு வெளியேறாவிட்டால் காப்புத் தொகை திருப்பித் தரப்படமாட்டாது. இதன் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக அங்கேயே தங்கிவிடுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்று இங்கிலாந்து கருதுகின்றது.
இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நைஜீரியா மற்றும் கானா ஆகிய ஆறு நாடுகளுக்கு இந்த புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கேயே தங்கிவிடுவதைத் தடுக்கும் வகையிலேயே தங்களுடைய குடியேற்ற அனுமதி முறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும், நாட்டிற்குத் தேவையான, திறமையானவர்களை அவர்கள் நாடு வரவேற்கவே செய்கின்றது என்றும் இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் தெரசா மே கூறியுள்ளார்.
கடந்த 2011-12ஆம் ஆண்டில், இங்கிலாந்திற்கு படிப்பதற்காகவோ அல்லது வேலைக்காகவோ செல்லுபவர்கள் விசா பெறுவது 20 சதவிகிதம் குறைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதன் காரணமாக, கடந்த ஜூன் மாதத்திற்குப் பின் இங்கிலாந்தில் வந்து தங்கும் அயல்நாட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வருடத்தில் வெறும் 74,000 என்ற எண்ணிக்கையில்தான் இருந்தது

அண்டை நாட்டினரை விட மிகவும் பணம் படைத்தவர்களாக திகழும்


ஜேர்மனியின் அண்டை நாடுகிளில் வசிப்பவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களை விட ஜேர்மனி நாட்டின் மையத்தில் வசிப்பவர்களே அதிக பணம் படைத்தவர்களாக திகழ்கின்றனர் என ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேர்மன் பட்ஜ் வங்கி நடத்திய ஆய்வில்(German Bundesbank) ஜேர்மன் மக்களை விட அண்டை நாடுகளில் வசிப்பவர்கள் சராசரி விகிதத்தின் படி அதிக ஏழைகளாக உள்ளனர்.
வீட்டுவருமானம், வங்கியிருப்பு, வயது, வேலை மற்றும் கல்வி, ஆகிய அடிப்படையில் ஜேர்மனியர்கள் மற்றும் ஜேர்மன் அல்லாதவரிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சராசரியாக அண்டைநாடுகளில் வசிப்பவர்களை விட ஜேர்மன் நாட்டினர் 10000யூரோ அதிமம் சம்பாதிக்கின்றனர். அண்டைநாட்டில் வசிப்பவர்களின் சராசரி நபரின் சம்பளம் 34000யூரோ யெனில், ஜேர்மன் நாட்டில் வசிக்கும் சராசரி கீழ்வர்க்க நபரின் சம்பளம் 44000யூரோவாக உயர்ந்து காணப்படுகின்றது.
அதிக வசதிபடைத்தவர்களுடன் ஒப்பிடுகையில் இதன் மதிப்பு இன்னும் அதிக அளவில் வேறுபட்டு காணப்படுகின்றது. அண்டைநாட்டினரின் சம்பளமானது 24000யூரோவாகவும், ஜேர்மன் நாட்டில் வசிப்பவரின் சம்பளமானது 78000யூரோவாகவும் உள்ளது.
அண்டைநாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜேர்மன் நாட்டில் வசிப்பவர்கள் 81 சதவீதம் பேர் சொந்த வீடு மற்றும் வாகனத்துடன் மிகவும் வசதியாக வாழ்வதாக புள்ளியல் விபரங்கள் தெரிவிக்கின்றன.
 

சனி, 22 ஜூன், 2013

ஜனாதிபதியாக பெண் ஒருவரே வரவேண்டும்:


அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முந்தைய ஆட்சி காலத்தில் அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரியாக பதவி வகித்த ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியாவார்.
இவர் அமெரிக்காவின் சக்தி வாய்ந்த பெண்மணிகளில் முக்கியமானவராக கருதப்படுகிறார். அத்துடன் இவர் வெளியுறவு துறை மந்திரியாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மேலாண்மை தகுதி மற்றும் தலைமை பண்பு தொடர்பான கருத்தரங்குகளில் சிறப்புரை நிகழ்த்தி ஆலோசனை வழங்கி வருகிறார்.
அமெரிக்க அதிபராகும் நோக்கில் தான் இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இக் கருத்தை ஆமோதிக்கும் வகையில் பில் கிளிண்டனும் சூசகமாக செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், கனடா நாட்டு மாணவர்களுடன் "யூ டியூப்" மூலமாக பேசிய ஹிலாரி கிளிண்டன்:-
"எனது வாழ்நாளுக்குள் அமெரிக்காவின் அதிபராக ஒரு பெண்மணி பொறுப்பேற்பதை காண ஆசைப்படுகிறேன். அடுத்த முறையோ அல்லது, அதற்கு அடுத்த முறையோ சிரமமான அந்த பதவியில் ஒரு பெண் அமர்ந்து அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என்ற செய்தியை ஆண் சமுதாயத்துக்கு நாம் வெளிப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராகும் ஆசை ஹிலாரிக்கு இல்லை என ஒரு தரப்பினர் கூறிவந்த போதிலும் தனது மனதுக்குள்ளும் அமெரிக்க அதிபராகும் ஆசை சிறகடித்துக் கொண்டிருப்பதை ஹிலாரி கிளிண்டன் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்
 

மலிவான விலையில் விற்கப்படும் ஜேர்மன் சாராயம்


ஜேர்மனியில் விற்கப்படும் மதுவின் விலையானது மற்ற ஜரோப்பிய நாடுகளை விட மிகவும் குறைவான விலையிலேயே விற்கப்படுகின்றன என புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
இத்தகைய மதுவானது ஜரோப்பிய நாடுகளில் வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றன. மற்ற ஜரோப்பிய நாடுகளை ஒப்பிடும்பொழுது ஜேர்மனி நாட்டு மக்கள் அதிக விலை கொடுத்து குடிப்பதற்கு தாயாராக உள்ளனர்.
ஜரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்கரியா (Bulgaria) ரோமனியா (Romania) மற்றும் ஹங்ரே (Hungary) ஆகிய பகுதிகளில் மதுவின் விலையானது மிகவும் குறைவான விலையில் விற்கப்படுகின்றன. இதன் விலையானது உணவு, புகையிலை, மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை ஒப்பிடும்பொழுது மிகவும் குறைவான விலையிலேயே உள்ளன.
புகையிலை, உணவு, மற்றும் பானங்கள் உலகம் முழுவதும் விற்கப்பட்டாலும் சில இடங்களில் அதன் விலையானது பல்வேறு விதங்களில் வேறுபடுகின்றன.
ஜேர்மனியில் விற்கப்படும் மதுவின் விலையானது உணவுப் பொருட்களின் விலையுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் குறைவான விலை என்பது நம்பமுடியாத ஒன்றாகும்
 

வியாழன், 20 ஜூன், 2013

யாகூவிடம் தகவல் கேட்கும் அமெரிக்கா


தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான நபர்களின் விபரங்களை அமெரிக்க கேட்டுள்ளதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது.
யாகூ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மாரிசா மேயர் வெளியிட்டுள்ள கடிதத்தில் இத்தகைய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மே மாதத்துக்கு முந்தைய 6 மாதத்தில் மட்டும் மொத்தம் 13,000 கோரிக்கைகள் அமெரிக்க அரசிடம் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பேஸ்புக், மைக்ரோசாப்ட், அப்பிள் போன்ற நிறுவனங்கள் அமெரிக்க அரசிடம் இருந்து வந்த கோரிக்கைகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 

கடந்த ஆண்டில் மட்டும் 80 இலட்சம் பேர்


அகதிகளாக இடம்பெயர்வு: ஐ.நா  தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.ருவண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய நெருக்கடி காலகட்டத்துக்குப் பிறகு இதுதான் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படும் காலமாகும். கடந்த ஆண்டில் 80 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கின்றது.
இடம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் போர் காரணமாகவே இடம் பெயர்ந்துள்ளனர். இது மிகவும் மோசமான நிலைமை என்றும், சிரியாவின் மோதல் காரணமாகவே மிகவும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாகவும் ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகின்றது.
4.5 கோடி அகதிகளில் அரைவாசிப் பேர், ஆப்கானிஸ்தான், சோமாலியா, இராக், சிரியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர் எனவும், நீண்டகால மோதல்களை தீர்க்க முடியாத அல்லது புதிய மோதல்கள் உருவாவதை தடுக்க முடியாத சர்வதேச சமூகத்தின் இயலாமையையே இந்த புலம் பெயர்வுகள் அதிகரிப்பை காண்பிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறுகிறது
 

புதன், 19 ஜூன், 2013

தனக்குத் தானே ஆபரேஷன் செய்துக் கொண்ட முதல் டாக்டர்-


 
பனிப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர், லியோனிட் ரோகோசோவ். 29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல் என ஒன்றுபட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு பிறகு கடுமையான வயிற்று வலியும் சேர்ந்துக்கொள்ள மனிதர் துடிதுடித்துப் போனார். தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை. ரஷ்யாவின் தலைமை ஆய்வு நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால் ஆயிரத்து 600 கிலோ மீட்டர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். ஆனால், கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய பருவ நிலையோ..விமான பயணத்துக்கு இடம் தரவில்லை. அன்று மாலை வயிற்று வலி மேலும் கடுமையானது. ‘அப்பென்டிஸைட்டிசிஸ்’ எனப்படும் குடல் வால் நோய்தான் தனது தீராத வயிற்று வலிக்கு காரணம் என்பதை அவர் உணர்ந்தார். மறுநாள் இரவு வரை வயிற்று வலி குறையாமல் போகவே, 30-4-1961 அன்றிரவு 10 மணியளவில் ஒரு டிரைவர் மற்றும் ஒரு வானிலை ஆய்வாளர் ஆகியோர் கத்தி, மருந்து ஆகியவற்றை எடுத்து தர, தனது வயிற்றுப் பகுதியை 10 சென்டி மீட்டர் அளவிற்கு திறந்து 4 சதுர சென்டி மீட்டர் அளவுள்ள குடல் வாலை வெற்றிகரமாக வெட்டி வெளியே எடுத்தார். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த ஆபரேஷனுக்கு பின்னர் திறந்த பகுதியை தையலிட்டு மூடிய ரோகோசோவ், 2 வாரத்திற்குள் உடல்நலம் தேறி எப்போதும் போல் வேலைகளை கவனிக்க தொடங்கினார். 1962ம் ஆண்டு லெனின்கிராட் நகருக்கு திரும்பிய அவர், 1966ம் ஆண்டு புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி செய்து பி.எச்.டி. பட்டம் பெற்றார். பின்னர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி 1986 முதல் 2000ம் ஆண்டு வரை செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில் உள்ள ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார். நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 21-9-2000 அன்று தனது 66வது வயதில் லியோனிட் ரோகோசோவ் மரணமடைந்தார். உலக மருத்துவ வரலாற்றில் தனக்குத் தானே ஒருவர் ஆபரேஷன் செய்துக் கொண்டது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது

சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில்



அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மதுபோதையில் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்ட நான்கு பேரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிவான் ரி. சரவணராஜா ஒருவருக்கு மூவாயிரத்து ஐநூறு ரூபாவும் மற்றறொருவருக்கு மூவாயிரம் ரூபாவும் அடுத்த இருவருக்கும் தலா இரண்டாயிரம் ரூபா வீதம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதேவேளை கஞ்சா வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டு அன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிவான் ஐயாயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். கைது செய்யப்பட்டவர்களில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மற்றும் கண்டி தர்மசிறி மாவத்தையை சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்களிப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றம்


இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் சில திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18.06.13) நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடமாகாணசபைத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், 1983ஆம் ஆண்டு மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தைக் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
வேறு எந்த இடத்திலும் வாக்காளர்களாகப் பதிவு செய்யாதவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளதுடன் அதற்கான சட்டமூலமும் நீதியமைச்சரினால் நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்களில் வாழ்வோர் சொந்த மாவட்டங்களில் வாக்காளராக பதிவு செய்வதற்கு தற்போது சட்டத்தில் இடமில்லை.
இந்த திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 1983 மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெயர்ந்த 15,000 பொதுமக்கள் வடக்கில் தம்மை வாக்காளராகப் பதிவு செய்ய வழி பிறக்கும் என்று அந்த சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டடு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

வெள்ளி, 7 ஜூன், 2013

என் அப்பா இல்லையா? மனமுடைந்து தற்கொலை செய்த மகள்


மைக்கேல் ஜாக்சன் தனது தந்தை இல்லை என்று வெளியான செய்தியால் அவரது மகள் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாக்சனின் மகளான பாரிஸ் மிகவும் அழகானவர் மட்டுமல்ல, புத்திசாலியான பெண்ணும் கூட.
அவர் தற்கொலைக்கு முயன்றது ஜாக்சன் குடும்பத்தினரை உலுக்கியுள்ளது.
பாரிஸ் தற்கொலை முயற்சியைத் தொடர்ந்து தற்போது பல்வேறு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் அடித்துக் கொண்டிருந்த ஜாக்சன் குடும்பத்தினர் ஒன்றிணைந்துள்ளனர்.
அனைவரும் பாரிஸ் நலமுடன் திரும்புவதற்காக துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த பல மாதங்களாகவே பாரிஸ் மனதளவில் பெரும் உளைச்சலில் சிக்கித் தவித்து வந்தாராம்.
மேலும் தனது குடும்பத்தினருக்கிடையே நிலவி வந்த சொத்துப் பிரச்சினை, சட்ட போராட்டம் அவரை வெகுவாக பாதித்துள்ளது.
இந்நிலையில் தான் மைக்கேல் ஜாக்சனின் எந்தக் குழந்தையும் அவருக்குப் பிறந்ததில்லை என்ற தகவல்கள் வெளியாகி பாரிஸை பெரும் மன உளைச்சலில் தள்ளி விட்டது.
ஜாக்சன் எனது தந்தை இல்லையா என்று அவர் புலம்பி வந்தாராம். இதேபோல மேலும் பல விஷயங்களும் பாரிஸின் மன உளைச்சலுக்குக் காரணமாக காட்டப்படுகிறது.
இதனையடுத்தே அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

.

வியாழன், 6 ஜூன், 2013

கல்லூரிக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு


     
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாயலுக்கு முன்பாக அமைந்துள்ள சிராஜிய்யா அரபுக்கல்லூரிக்கு இன்று வியாழக்கிழமை அதிகாலை 03.30 மணியளவில் இனந்தெரியாத குழுவொன்றினால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அரபுக்கல்லூரியின் மேல் மாடியில் அமைந்துள்ள அதிபர் அலுவலகம், மாணவர்களின் படுக்கறை விடுதி, விடுதியிலுள்ள பொருட்கள், மாணவர்களின் ஆடைகள், கணனிகள்; உள்ளிட்ட சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க உடமைகள், பொருட்கள்; தீயில் கருகி சேதமாகியுள்ளதாக சிராஜிய்யா அரபுக்கல்லூரியின் பிரதி அதிபர் யூ.ஏ.மஜீத் (சிறாஜி) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதியில் தங்கி கற்றல்களை மேற்கொண்டு வந்த மாணவர்களுக்கு கடந்த 29.05.2013ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே குறித்த தீ வைக்கப்பட்டுள்ளமையால் எவ்வித உயிர்ச் சேதமும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற போது தான் கல்லூரியில் இருக்கவில்லை எனவும் அதிகாலை 4 மணியளவில் எனக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து தான் ஸ்தலத்திற்குச் சென்று அங்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரின் உதவியுடனும் பொதுமக்களின் உதவியுடனும் தீ மேலும் பரவாமல் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் யார் மீதும் சந்தேகமில்லை எனவும் இது தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் இரண்டு பெற்றோல் போத்தல்கள் காணப்படுவதுடன் பெற்றோலினாலேயே குறித்த விடுதியை இனந்தெரியாதவர்கள் எரித்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீ விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

அதிர்ச்சி""காணாமல் போன ஊடகவியலாளர் பிரான்ஸில்



காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் லங்கா ஈ நியூஸ் இணைய தளத்தின் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பிரான்ஸில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 கார்ட்டுன் மற்றும் பத்தி எழுத்தாளராக கடமையாற்றிய ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010ம் ஆண்டில் காணாமல் போயிருந்தார்.

பிரகீத் எக்னெலிகொட பிரான்ஸில் வாழ்ந்து வருவதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
 எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
 இதேவேளை, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸும் எக்னெலிகொட வெளிநாடொன்றில் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 2ம் இணைப்பு
 எக்னெலிகொட பற்றிய தகவல் அதிர்ச்சி அளிக்கின்றத!–  சந்தியா எக்னெலிகொட
 காணாமல் போன ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட பற்றிய தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
 பிரான்ஸ் நாட்டில் எக்னெலிகொட பாதுகாப்பாக வாழ்ந்து வருவதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
 இந்தத் தகவல் உண்மையென்றால் எக்னெலிகொடவை கண்டு பிடிக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் எனவும் அதற்கான பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 எக்னெலிகொடவை கைது செய்வதற்கு சகல வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
 ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், பிரதம நீதியரசரும் எக்னெலிகொட எங்கிருக்கின்றார் என்பது பற்றிய தகவல்களைத் தெரிவித்துள்ளதாகவும், அந்தத் தகவல்கள் உண்மையென்றால் அவரை அழைத்து வர சகல அதிகாரங்களும் அரசாங்கத்திற்கு உள்ளதாக சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்

அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது - சர்வதேச !!


அமெரிக்கா இலங்கை மீது அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்று பிரபல சர்வதேச ஆங்கில ஊடகமான சீ.என்.என் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
 சீ.என்.என் இணைத்தளம் நேற்று வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 இலங்கையின் மனித உரிமை மீறல் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான வன்முறைகள் ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் பேரவை வரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
 எனினும் இந்த விடயங்களில் இலங்கை இன்னும் பொறுப்புடைமையை காண்பிக்கவில்லை. இந்த நிலையில், சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
 எனவே மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விடயங்கள் தொடர்பில்,  இலங்கை மீது இந்த தருணத்திலேயே அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் சீ.என்.என் செய்தி சேவை தெரிவித்துள்ளது,

புதன், 5 ஜூன், 2013

கொழும்பில் பெருமளவு ஆயுதங்கள்!!:

அதிர்ச்சியில் சிறிலங்கா படையினர்,விடுதலைப் புலிகளால் கொண்டு வரப்பட்ட தலா 500 கிலோ எடையுள்ள இரண்டு பாரிய குண்டுகளும், பெருமளவு ஆயுதங்களும் இன்னமும் கொழும்பு நகரப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளதுவெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே இந்த ஆயுதங்கள் பற்றிய விபரம் தெரியவந்துள்ளது.
 இதையடுத்து பெரும் சேதங்களை ஏற்படுத்தக் கூடிய பாரிய குண்டுகளையும், ஆயுதங்களையும் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சிறிலங்கா காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.
  போர் நடந்த காலத்தில், கொழும்புக்கு கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு தொன் எடையுள்ள குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் தமக்குத் தெரியும் என்று அதனைக் கடத்தி வந்தவரான, விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் வெலிக்கடைச் சிறை அதிகாரியிடம் எழுத்துமூலம் தெரிவித்தார்.
  இந்த ஆயுதங்களில் தலா 500 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகள், ஏழு ரி-56 துப்பாக்கிகள், ஒன்பது தன்னியக்க கைத்துப்பாக்கிகள், மூன்று இலகு இயந்திரத் துப்பாக்கிகள், ரி-56 துப்பாக்கிகளுக்கான 3500 ரவைகள், 10 மில்லியன் ரூபா பெறுமதியான சொக்கலேற் பொதி, 8 மில்லியன் ரூபா பணம் என்பனவே மறைத்து வைக்கப்பட்டுள்ளன

கழிப்பறை நிறுவனங்களுக்கு விருது வழங்கிய பிரான்ஸ் ,,


சுகாதாரமான கட்டண கழிப்பறைகளை அமைக்கும் சுலப் அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக்குக்கு பிரான்ஸ் நாட்டில் விருது வழங்கப்பட்டுள்ளது.
எளிதில் கட்டமைக்கும் வகையில், கட்டண கழிப்பறைகளை கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து புரட்சியை ஏற்படுத்தியவர், சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக்.
இந்தியாவில், இவர் ஏற்படுத்திய கழிப்பறை புரட்சியை பாராட்டிய பிரான்ஸ் அரசு, லெஜண்ட் ஆப் பிளானட் என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று முன்தினம், நடந்த விழாவில் துணை ஜனாதிபதி சான்டல் ஜுர்டான் இந்த விருதை பிந்தேஷ்வருக்கு வழங்கினார்
 

ஊழியர்களுக்கு பிரித்தானியா 18 மில்லியன் பவுண்ட்


வங்கதேசத்தின் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு 18 மில்லியன் பவுண்ட் நிதி உதவியை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
தலைநகர் டாக்காவில் ராணா பிளாசா என்ற ஆடைத் தொழிற்சாலை கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 1100க்கும் அதிகமானவர்கள் பலியானதைத் தொடர்ந்து பிரித்தானியா இதனைக் கூறியுள்ளது.
இந்த சம்பவம் அனுபவமான ஒர் விடயம் எனவும் வங்கதேசத்தில் பாதுகாப்புத் தரங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை இது எடுத்துக் காட்டுவதாகவும் பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.
வங்கதேசத்தில் நடைபெற்ற இந்த விபத்து உலகில் மிகவும் மோசமான கைத்தொழில் விபத்தாக பதிவாகியுள்ளதுடன், சர்வதேச ரீதியில் விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தது.
இந்த விபத்தில் 1130 பேர் பலியானதுடன், சுமார் 2500 பேர் காயமடைந்திருந்தனர்.
 

செவ்வாய், 4 ஜூன், 2013

பரிசோதனைக்கு சென்ற ஆண், பெண்ணாக இருந்தது

 
ஹாங்காங்கில் வாழ்ந்து வரும் 66 வயதான ஆதரவற்ற ஒருவர், தன்னுடைய வயிறு பெருத்து வருவது குறித்து சந்தேகப்பட்டு மருத்துவரிடம் சென்றார்.
பரிசோதனையின் போது பெண்ணுக்கு அமைந்திருக்கும் கருப்பை அவருக்கும் உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். கருப்பையில்  கட்டி வளர்ந்ததால் அவரது வயிறு பெரிதாக  மாறியது தெரிய வந்தது.
அவருக்கு இரண்டு மரபணுக்களும் இணைந்து காணப்பட்டது. மருத்துவ வரலாற்றிலேயே இதுபோன்று மொத்தம் ஆறு பேர் தான் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பெண்களுக்குரிய டர்னர் என்ற நோய்க்குறி இருந்ததால் அவருக்கு குரோமோசோம்கள் பாதிக்கப்பட்டு கருப்பை சிறியதாக மலட்டுத்தன்மையுடன் காணப்பட்டது. எனினும் சிறுநீரகச் சுரப்பி பெரியதாகவும், ஆணுக்குரிய ஹார்மோன்களும் இருந்ததால் தாடி வளர்ச்சியும், சிறிய ஆண் குறியும் இருந்துள்ளது. அதனால் இதுவரை  அவரை ஆண் மகனாகக் காட்டியுள்ளது.
இந்தக் கட்டி வந்திருக்காவிட்டால், அவரின் புதிரான இந்த உடலமைப்பு வெளியில் தெரிந்திருக்காது என்று திங்கள் அன்று அவரைப் பரிசோதித்த இரண்டு மருத்துவமனையைச் சேர்ந்த ஏழு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
வியட்நாமில் பிறந்த அந்த சீன தேசத்தவர், ஆணுக்குரிய சிகிச்சை முறைகளை மேற்கொண்டு தொடர்ந்து ஆணாகவே இருக்கப் போவதாக மருத்துவ பத்திரிகை தெரிவித்துள்ளது
 

ரயில் பாதையில் காணப்பட்ட 2ம் உலகப்போர் குண்டினால் 1 லட்சம் பயணிகள் தவிப்பு

 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிகவும் பரபரப்பாக இயங்கப்பட்டு வரும் ரயில் பாதை அருகே 40 செ.மீற்றர் நீளமுடைய ஒரு வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிக்காக குழி தோண்டும் பணி நடைபெற்ற பொழுது இக்குண்டினைக் கண்டுபிடித்தனர். உடனே வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் குழு அங்கு வரவழைக்கப்பட்டு, குண்டு கிடந்த இடத்தை சுற்றி மக்களோ அல்லது எந்தவித நடவடிக்கைகளும் செயல்படாதவாறு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர்.
பின்னர் மணல் மூட்டைகளை அடுக்கி அந்த குண்டை செயல் இழக்கச் செய்தனர். இதனால் 150 ரயில்கள் இயங்கும் பரபரப்பான அந்த பாதையில் ரயில்கள் ஏதும் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சுமார் 1 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த குண்டு இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவிற்கு எதிராக ஜப்பான் இம்பீரியல் ராணுவத்தினரால் வீசப்பட்டு வெடிக்காமல் போனதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 

திங்கள், 3 ஜூன், 2013

அம்பலமாகிய கள்ளத் தொடர்பு!


 பேயைக் கண்டறியும் பொருட்டு வைத்த கெமராவில் காதலியின் துரோகச் செயல் பதிவாகிய சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
நபரொருவர் தனது வீட்டில் பேய் நடமாடுவதாக கருதி ஒரு இரகசியக் கேமராவை வைத்து கண்காணித்து வந்துள்ளார்.
ஆனால் அந்தக் கேமராவில் பேய்கள் எதுவும் பதிவாகவில்லை.மாறாக, அந்த நபரின் காதலி, அவரது 16 வயது மகனுடன் முத்தமிட்டு கட்டியணைத்துக்கொண்டிருக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அவர் 11 வருடமாக பழகி வரும் காதலிக்கும், மகனுக்கும் இடையிலான உறவு அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து அவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, டஸ்மானிய நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் சட்டத்தின் பிரகாரம் ஆண் ஒருவர் பெண்ணொருவருடன் உடலுறவு கொள்வதற்கு குறைந்தபட்சம் 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் ஆனால் சம்பவத்தின் போது சிறுவனுக்கு வயது 16 என நிரூபணமானது.
எனினும் இது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லையென அப் பெண் கூறியுள்ளார்.
விசாரணையின் முடிவில் அப்பெண்ணுக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவரை மறு வாழ்வு மையத்திற்கு அனுப்பவும், அங்கிருந்து அவர் பயிற்சி பெற்று வருவதற்காக 6 மாத காலம் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது

செவ்வாய்க் கிரகத்தில் அதிக கதிர்வீச்சு


  எதிர்காலத்தில் செவ்வாய்க்கிரகத்திற்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்கள் கடுமையான கதிரியக்கத் தாக்கத்துக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகள் உடன்படும் அளவைவிட கூடுதலான அளவுக்கு அங்கு கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு விண்வெளி வீரர்கள் இலக்காக நேரிடும் என்று நாசா கூறுகிறது.
உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கக் கூடிய அளவில் இந்த கதிர்வீச்சு இருக்கும் என்றும் விண்வெளி வீரர்களை நாசா எச்சரித்துள்ளது.
கியூரியாசிட்டி ரோவர் விண்ணூர்தியைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் மூலம் இதனை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
செவ்வாயின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு நடத்திய ஒரு கார் அளவிலான இந்த ரோபோ ஊர்தியை அங்கு கொண்டு செல்லும் அரை பில்லியன் கிலோ மீட்டர் தூர பயணத்துக்கு 8 மாதங்களுக்கும் அதிக காலம் எடுத்துள்ளது.
இந்தப் பயணத்தை கிழமைகள் கணக்கில் விரைவுபடுத்துவதற்கு போதுமான உந்து சக்திக்கான தொழில்நுட்ப வசதி இன்னும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

சிங்கப்பூரில் விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்?


 இலங்கை யுவதிகளை தொழிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பலாத்காரமாக விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த ஆனமடுவைச் சேர்ந்த நபர் ஒருவரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர் சிங்கப்பூரில் விபசாரம் நடத்தி வந்தவர்களில் முக்கியமான நபரென பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் சமீபத்தில் ஐந்து யுவதிகளை அழைத்துச் சென்று பலாத்காரமாக விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நபரால் பலாத்காரமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த யுவதிகள் இவரது பிடியிலிருந்து தப்பிச் சென்று சிங்கப்பூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

பொலிஸார் இந்த நபரைக் கைது செய்ய முயன்ற போது அவர் தலைமறைவாகியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் இந்நபர் சிங்ப்பூரிலிருந்து இலங்கை வர முயற்சித்தபோது சிங்கப்பூர் விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு: பொலிசார் தீவிர தேடுதல்,



சுவிட்சர்லாந்திலுள்ள ஜுரிச் மாநகர் காவல்துறையும், மாநிலக் காவல்துறையும் இணைந்து துப்பாக்கி சூடு நடத்திய ஒரு கொலைகாரனை வலைவீசித் தேடி வருகின்றது.
கடந்த வியாழனன்று பிற்பகல் மூன்று மணியளவில் பிராயர்டிராஸ் தெருவில் உள்ள 37ம் எண் உடைய வீட்டில் ஒருவன், தன்னிடமிருந்த துப்பாக்கியால் இரண்டு துருக்கியரைச் சுட்டுவிட்டுத் தப்பிவிட்டான்.
குண்டுகாயத்துடன் இருந்த இருவரையும், பொலிசார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஒருவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை நடைபெற்று உடலில் புகுந்திருந்த துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது.
இருவரும் அபாய நிலையிலிருந்து தப்பித்துவிட்டனர் என்று மாநகர் பொலிஸ் தகவல் தொடர்பாளி மார்கோ கோர்டெஸி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பொலிசார் இந்தத் துப்பாக்கிச்சூடு பற்றி தகவல் தெரிந்தவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்
 

கஞ்சா புகைப்பவருக்கு அபராதம் மட்டுமே?


சுவிட்சர்லாந்து கஞ்சா புகைப்பது சட்டப்படி குற்றம் என்றாலும் மூன்றரை இலட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரையிலான இளைஞர்கள் கஞ்சா புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.
இனி இவர்கள் பிடிபட்டால் அங்கேயே நூறு பிராங்க் வரை அபராதம் வசூலிக்கப்படும். இவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப் போவதில்லை.
சுவிட்சர்லாந்தில் போதைப்பொருள் கடத்தல், நுகர்வு போன்ற சட்டங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதால் சில மாற்றங்கள் ஒக்டோபர் முதல் நடைமுறைக்கு வருகின்றன.
இந்த மாற்றங்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் திகதி அன்று நாடாளுமன்றத்தின் மேலவையும், மக்களவையும் அனுமதி அளித்துள்ளன.
பத்து கிராம் அல்லது அதற்கும் குறைவான கஞ்சா வைத்திருப்பவருக்கு இந்த உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் பொலிஸ் மற்றும் நீதித்துறையினரின் வேலைப்பளு கனிசமாகக் குறைகிறது. மேலும் சுவிட்சர்லாந்தில் மாநிலத்திற்கு, மாநிலம் இச்சட்டங்கள் மாறுபடுகின்றன.
ஃபிரிபோர்க் மாநிலத்தில் 10 கிராம் கனாபீஸ் வைத்திருந்தால் ஐம்பது ஃபிராங்க் அபராதம் விதிக்கப்படும். அதுவே டிசினோ மாநிலத்தில் மூவாயிரம் ஃபிராங்க் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 

நிலநடுக்கத்தினால் சிலிண்டர் வெடிப்பு

.,.

தைவானில் டைசங் நகரத்திலிருந்து தென்கிழக்கே 38 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் பூமிக்கடியில் சுமார் 14.5 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் தைபேவிலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சிலிண்டர் வெடித்ததாக அந்நாட்டின் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் உயிரிழப்புகளோ பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
 

புதிய 15 கரும் நட்சத்திர மண்டலங்கள்


 அதி நவீன அல்மா டெலெஸ்கோப், அண்டத்தில் உள்ள காஸ்மிக் தூசுக்களின் இருளுக்குள் 15 புதிய கரும் நட்சத்திர மண்டலங்கள் இருப்பதை பதிவு செய்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
நட்சத்திர கூட்டம் 'செடஸ்' அமைந்திருக்கும் திசையில் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கரும் விண்மீன் திரளுக்கு 'சுபாரு' என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் காஸ்மிக் பிரபஞ்ச தூசுக்களால் இருக்கும் இந்த கதிர்களின் ஆதிக்கத்திற்குள் மறைந்து கொண்டு இதுபோன்று நிறைய புதிய விண்மீன் திரள்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
 

ஞாயிறு, 2 ஜூன், 2013

சீனாவிடம் கோடிக்கணக்கில் கடன்"

 :
 அரசாங்கம் இந்தியாவை ஏமாற்றிக் கொண்டு சீனாவுடன் கூட்டு சேர்ந்து வருவதுடன் அபிவிருத்தி என்ற பெயரில் கோடிக் கணக்கான பணத்தையும் கடனாகப் பெற்று நாட்டையும், நாட்டு மக்களையும் படுபாதாளத்தில் தள்ளிவிடப் பார்க்கின்றது. இந்த அரசாங்கம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் மென்மேலும் கடன் பெற வேண்டுமா? என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் காரணிகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். அத்தோடு முறையான பொருளாதார மற்றும் இராஜதந்திரக் கொள்கைகளை வகுத்துக் கொண்டு நாடும், நாட்டு மக்களும் பாதிக்காத வகையிலான வேலைத்திட்டங்களையே மேற்கொள்ள வேண்டும். மாறாக நாட்டு மக்களை கடனாளிகளாக்கி நாட்டை குட்டிச் சுவராக்கி விடக்கூடாது என ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கம் சீனாவிடமிருந்து பெருந்தொகை கடனைப் பெற்றுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அதன் பிரதான நோக்கம் கடனைப் பெறுவதே அன்றி வேறொன்றும் இல்லை. இவ்வாறு சீனா 2.2 பில்லியன் டொலர்களை கடனாக இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளதாக தெரிய வருகிறது.
இதற்கு முன்னரும்; சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் பெருந்தொகையான கடனுதவிகளை இந்த அரசாங்கம் பெற்றுவந்துள்ளது. அவற்றின் மூலம் முறையான, மக்களுக்கு பயன்தரக் கூடிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவில்லை. இதனால் பாதிக்கப்படுவது அரசாங்கம் அல்ல, இந்நாட்டு அப்பாவி பொதுக்களே.
இவ்வாறான நிலையில் மேலும் மேலும் கடனுதவிகளைப் பெற்றுக்கொள்வதால் மாத்திரம் நாட்டைப் கட்டியெழுப்ப முடியாது. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கேற்ற வேலைத்திட்டங்களை திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும். முறையான திட்டமிடல் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் இன்று தோல்வியடைந்துள்ளன. அதனையும் நாட்டு மக்களே இன்று சுமந்து வருகின்றனர்.
இன்று நாட்டின ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது. சர்வதேச நாடுகள் எமது நாட்டின் மனித உரிமைகள் தொடர்பாக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில் நாம் முதலாவதாக நாட்டின் ஜனநாயகத்தினை சீர்படுத்த வேண்டும். அதன் பின்னரே ஏனைய திட்டங்களுக்கு அடித்தளமிட வேண்டும்.
எமது நாட்டின் ஜனநாயகம் சீராகவும், மனித உரிமைகள் செயற்பாடு எவ்வித பாதிப்புமின்றி காணப்படும் போது பல்வேறு சர்வதேச நாடுகள் தாமாகவே முன்வந்து பல்வேறு உதவிகளை வழங்கும்; எனவே, நாம் அதற்கேற்ற வகையில் முறையான கொள்கைகளை வகுத்துக்கொண்டு செயற்பட வேண்டும்.
இந்தியாவிடம் ஒன்றும், சீனாவிடம் இன்னொன்றும், நாட்டு மக்களிடம் வேறொன்றும் கூறி நாட்டு மக்களுக்குள் மேலும் மேலும் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது. அதனால் எமது நாட்டின் எதிர்காலமே சீரழியும். இதனை இந்த அரசு நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்.
நாட்டில் தற்போது யுத்தமற்ற சூழல் காணப்படுகிறது. எனவே, அதனை சரியாக பயன்படுத்தி அடுத்தகட்ட நகர்வுகளைக் கொண்டு செல்ல வேண்டும். மாறாக திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு இனவாத செயற்பாடுகளை தூண்டி விட்டு அதில் ஆதாயம் தேடக் கூடாது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை கூறிவருகின்றன. அதற்கெல்லாம் பின்னணி இருக்கிறது. அதாவது அரசின் கதை வசனத்திலேயே அவர்கள் அப்படி செயற்படுகிறார்கள்.
தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கிலேயே 13 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்பொழுது அதுதொடர்பாக பல்வேறு வகையான கருத்துக்களை அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அரசாங்கமோ அது எதுவும் தெரியாததைப் போல இருக்கிறது.
உண்மையில் இவ்வாறான ஒரு சூழலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை நீக்கி அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலமே நாட்டின் தேசிய இனப்பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அத்தோடு நாட்டையும் கட்டியெழுப்ப முடியும் என்றார்.
இதேவேளை, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்காக புதிதாக, 2,2 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்க சீனா முன்வந்துள்ளதுடன், இலங்கை இராணுவத்துக்கு பயிற்சிகளை வழங்கவும், பாதுகாப்புத் தொழில் நுட்பங்களை வழங்கவும் இணங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.
இது தொடர்பில் பீஜிங்கில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹொங் லீ ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில்,
இருதரப்பும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ள இணங்கியுள்ளன. பாதுகாப்புத் தொழில்நுட்பம், படையினருக்கான பயிற்சி, மற்றும் ஏனைய துறைகளில் தொடர்ந்தும் இரண்டு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சுகளுக்கு இடையில் ஒத்துழைப்புகளை பரிமாறிக் கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சீனப் பயணத்தின்போது, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பான உடன்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பான உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதுபற்றி சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பிய போது இலங்கையுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடுகள் பற்றிய விபரங்களை வெளியிட மறுத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு தங்க நகைகள்


 மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பரிவுக்குட்பட்ட குருக்கள் மடம் எனும் இடத்தில் மட்டக்களப்பபு –கல்முனை குருக்கள்மடம் பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீரில ஸ்ரீ செல்ல கதிர்காமர் கோயிலில் உள்ள 19 விக்கிரகங்கள் இன தெரியாத நபர்களால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளதோடு தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் எமது செய்தியாளர் ஸ்ரீரில ஸ்ரீ செல்ல கதிர்காமர் கோயில் பூசாரி வெ.கு.நாகராஜ குருக்களை வினவிய போது, நேற்று இரவு 10 மணிக்குப் பிறகுதான் இந்த நாசகார சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் இக் கோயிலில் 19 விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 25 பவுண் தங்கள் களவாடப்பட்டுள்ளதாகவும், கோயில் ஓட்டை கழற்றி தான் கோயிலுக்குள் இனம் தெரியாத நபர்கள் இறங்கி இருப்பதாகவும் இது தொடர்பில் சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெயசிங்க தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு இங்கு விஜயம் செய்த களுவாஞ்சிக்குடி பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்க உடனடியாக மோப்ப நாய்கள், கை விரல் அடையாளம் எடுப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளும் படி உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் நிலமைகளை கேட்டறிந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேந்திரன்,சி.யோகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் ஆகியோர் நேரில் சென்று நிலமைகளை கேட்டறிந்து கொண்டதோடு இதன் சூத்திர தாரிகளை உடனடியாக கைது செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்தனர்

ல்கொய்தா இயக்கத்தின் விஷவாயு


ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அல்கொய்தா இயக்க தீவிரவாதிகள் ரகசியமாக நடத்தி வந்த விஷ வாயு தயாரிப்பு தொழிற்சாலையை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சரின், கடுடு வாயு உள்ளிட்ட ரசாயன விஷவாயுக்கள் பாக்தாத்தில் இயங்கி வந்த 2 தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த தொழிற்சாலையில் பணி புரிந்த 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் ஈராக் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் முஹம்மது அல் அஸ்கரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த தொழிற்சாலையில் கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும், கைது செய்யப்பட்டவர்களையும் நிருபர்களுக்கு காட்டிய அவர், இங்கு தயாரிக்கப்பட்ட விஷவாயுவை பயன்படுத்தி ஈராக், ஐரோப்பியா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளின் மீது விஷ வாயு தாக்குதலை நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார்.
ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் விமானங்களின் மூலம் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இந்த விஷ வாயுவை திறந்துவிட தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விஷ வாயுவை சுவாசித்தவர்கள் சுவாசப்பை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு சில நிமிடங்களுக்குள் துடிதுடித்து இறந்துவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 1 ஜூன், 2013

நீர்மூழ்கிக் கப்பல்களை ரோந்துப் பணிக்கு


தென்புறக் கடல்பகுதிகளில் ரோந்து செல்ல அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை ஈடுபடுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
சோவியத் ரஷ்யா சிதைந்து 20 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய அதிகார பலத்திற்கு புத்துயிர் கொடுக்கும் விதமாகவே இத் திட்டத்தை ரஷ்யா அமுல்படுத்தியுள்ளது.
இத்தகவலை, ரஷ்ய நாட்டின் செய்தி நிறுவனம், சனிக்கிழமை அன்று வெளியிட்டுள்ளது. மத்தியத் தரைக் கடல் பகுதியில், நிரந்தரமாக ஒரு கப்பற்படையை நிறுவவேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சென்ற மார்ச் மாதம் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, 16 அணுசக்தி ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் போரெய் நீர்மூழ்கிக் கப்பல்களை ரோந்துப் பணிக்கு அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது.
நீர்மூழ்கி கப்பல்கள் மீண்டும் ரோந்துப்பணியில் ஈடுபடுவது வடதுருவப் பகுதிகளில் மட்டுமல்லாது, தென்பகுதிகளிலும் குற்றங்கள் குறைய உதவும் என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகப் பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.
இந்த கப்பல்கள் படிப்படியாக கடல் பகுதிகளில் நிலைநிறுத்தப்படும். மொத்தம் 8 போரெய் கப்பல்களில், 2020ஆம் ஆண்டு பணியில் ஈடுபடுத்தப்படும் யூரி டோல்கோருக்கி என்ற கப்பல், இந்த வருடம்தான் கப்பற்படையில் இடம் பெற்றுள்ளது.
கடந்த மே மாதம் மீண்டும் பதவிக்கு வந்ததில் இருந்து, வலிமையான, செயல்படும் திறனுடைய ராணுவத்தின் தேவையை புதின் வலியுறுத்தி வந்தார்.
13 வருடங்களில், அவர் வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, ரஷ்யாவின் ஒற்றுமையையும், வலிமையான ராணுவத்தையும் பற்றிக் குறிப்பிட்டு வந்துள்ளார்.
அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே அணுசக்தி குறித்த மறைமுக மோதல்கள் குறைந்துள்ள நிலையில், 2010ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, நாட்டின் அணு ஆயுதங்களை வரம்புக்குள் வைத்துக் கொள்வதாக தீர்மானித்துக் கொள்ளப்பட்டது.
எனினும் தற்போது புதின் நாட்டின் ஆயுதபலத்தை மேம்படுத்தும் எண்ணத்தில் இருக்கின்றார்