siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 5 ஜூன், 2013

ஊழியர்களுக்கு பிரித்தானியா 18 மில்லியன் பவுண்ட்


வங்கதேசத்தின் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு 18 மில்லியன் பவுண்ட் நிதி உதவியை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
தலைநகர் டாக்காவில் ராணா பிளாசா என்ற ஆடைத் தொழிற்சாலை கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 1100க்கும் அதிகமானவர்கள் பலியானதைத் தொடர்ந்து பிரித்தானியா இதனைக் கூறியுள்ளது.
இந்த சம்பவம் அனுபவமான ஒர் விடயம் எனவும் வங்கதேசத்தில் பாதுகாப்புத் தரங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை இது எடுத்துக் காட்டுவதாகவும் பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.
வங்கதேசத்தில் நடைபெற்ற இந்த விபத்து உலகில் மிகவும் மோசமான கைத்தொழில் விபத்தாக பதிவாகியுள்ளதுடன், சர்வதேச ரீதியில் விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தது.
இந்த விபத்தில் 1130 பேர் பலியானதுடன், சுமார் 2500 பேர் காயமடைந்திருந்தனர்.
 

0 comments:

கருத்துரையிடுக