siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் மன ஓய்வு!'?

         
Wednesday 31 October 2012 .By.Lovi. ஓய்வான மனநிலை மகிழ்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும். ஓய்வு எடுப்பதன் மூலம் பயம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்தும் விடுதலைப் பெறலாம். இது நோயை விரட்டி ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கிறது. எனவே  எவ்வாறு ஓய்வு எடுப்பது என்று தெரிந்துக்கொள்ளவது மிகவும் அவசியம்.
* காமெடியான படங்கள், சிரிப்புக்காட்சிகள் பார்த்து மனம் விட்டு சிரிப்பதன் மூலம் பதற்றமான நிலை நீங்கி மனம் ஓய்வு பெறும்.
* விருப்பப்பட்ட பாடலைக் கேட்பது, ஒரு சில பாடலுக்கு நடனம் புரிதல் போன்றவையால் எத்தகைய பிரச்சனைகளையும் சந்திக்கும் அளவுக்கு மனம் பக்குவம் அடையும்.
* அதிகாலையில் 5 மணிஅளவில் வீட்டின் அமைதியான நிலையை 5 அல்லது 10 நிமிடங்கள் உணர வேண்டும்.
* இரவு உறங்க செல்வதற்கு முன் முழு தினமும் நடந்த நல்லவை தீயவை என்று அனைத்தையும் மனக்கண்முன் கொண்டு வருவதன் மூலம் மனம் முற்றிலும் தூய்மைப்பெற்று ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.
* யோகா செய்தல் மிகவும் நல்லது. யோகா வகுப்புகளுக்கு செல்ல இயலாத நிலையில், வாரம் ஒரு முறை யோகா புத்தகம் அல்லது சிடி போட்டு பார்த்து செய்து வந்தால் மனம் உடல் இரண்டும் நல்ல ஓய்வு நிலையை அடையும் வாய்ப்புகள் இருக்கின்றன.
உடல் ஆரோக்கியத்திற்கு மூலக்காரணம் மனமே, எனவே உங்கள் மனதையும் உடலையும் ஓய்வு நிலையில் வைத்திருக்கும் பொறுப்பு உங்கள் கையில் என்பதை மனதில் கொள்ளுங்கள்

314 நாட்கள் நடந்து வந்து ஹஜ் பயணத்தை நிறைவு செய்த யாத்திரிகர்

 செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, By.Rajah{.காணொளி,புகைப்படங்கள்}
போஸ்னியாவை சேர்ந்த யாத்திரிகர் ஒருவர், 5650 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று ஹஜ் பயணத்தை நிறைவு செய்துள்ளார். போஸ்னியாவை சேர்ந்த செனாத் ஹெட்சிக்(வயது 47) என்பவர் பவோனிசி நகரிலிருந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் 15 ஆயிரம் ரூபாய் மற்றும் 20 கிலோ எடை கொண்ட உடைமைகளுடன் ஹஜ் பயணம் மேற்கொண்டார்.
314 நாட்கள், 5650 கிலோ மீற்றர் தூரம் நடந்து செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளை கடந்து தற்போது சவுதி அரேபியா வந்து சேர்ந்துள்ளார்.
வரும் வழியில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளார் செனாத். இவர் பயணம் மேற்கொண்ட டிசம்பர் மாதத்தில் பல்கேரியா நாட்டில் குளிர் மைனஸ் 35 டிகிரி என்று இருந்ததால், நிலையை சமாளிக்க முடியவில்லை.
அத்துடன் சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருவதால், அந்நாட்டை கடப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
கடைசியில் தான் நினைத்தபடி சவுதி அரேபியா வந்து, ஹஜ் பயணத்தை முடித்து கொண்டார்.


நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தூங்கிய விமானிகள் ???

 செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, By.Rajah.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானிகள் இருவர் தூங்கி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானிகள் அடிக்கடி தூங்குவதாக புகார் வந்தன. இந்நிலையில் விமானத்தின் முதன்மை விமானி, கழிப்பறைக்கு செல்வதற்காக, சக விமானிகளிடம் விமானத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
சில நிமிடங்கள் கழித்து முதன்மை விமானி, விமானிகள் அறைக்கு தொடர்பு கொண்ட போது பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டு மற்றொரு விமானியிடம் பேச முயன்றார். அவரிடமிருந்தும் பதில் வரவில்லை. மூன்றாவது விமானியை தொடர்பு கொண்ட போதும் பதில் கிடைக்கவில்லை.
நிலைமையை உணர்ந்து கொண்ட கேப்டன் விமானிகள் அறைக்கு சென்று பார்த்த போது, விமானிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். அதுவரை நடுவானில் விமானம் பறந்து கொண்டே தான் இருந்தது. கேப்டன் எழுப்பியதும் உரிய இடத்தில் விமானம் தரையிறங்கியது. அப்போதும் மூன்றாவது விமானி தூங்கி கொண்டே தான் இருந்தார்.
இவர்களது பெயரை பிரிட்டன் விமானத்துறை வெளியிட மறுத்து விட்டது. இது குறித்து விமானிகள் சங்க நிர்வாகிகள் குறிப்பிடுகையில், விமானம் பறக்கும் போது அசதி காரணமாக விமானிகள் தூங்குவது சகஜம் தான் என்றனர்.
விமானிகளின் இந்த பாதுகாப்பற்ற செயல் குறித்து விமான அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது டிராகன் விண்கலம்

 செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, By.Rajah.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பொருட்களை சுமந்தபடி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி உள்ளது டிராகன் விண்கலம். விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக, விண்வெளியில் மிதக்கும் சர்வதேச ஆய்வு மையத்துக்கு பொருள்களைக் கொண்டு செல்லும் பணியை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்தது.
சிஆர்எஸ்-1 என்ற இத்திட்டத்தில் “டிராகன்” எனப் பெயரிடப்பட்ட விண்கலம் 450 கிலோ எடையுள்ள பொருள்களைச் சுமந்தபடி விண்வெளி நிலையத்துக்குச் சென்றது.
அங்கு பொருள்களைக் கொடுத்து விட்டு, அங்கிருந்து மாதிரிகள், ஆய்வு முடிவுகள், வன்பொருள்கள் உள்ளிட்ட 758 கிலோ எடையுள்ள பொருள்களைச் சுமந்தபடி வெற்றிகரமாகத் திரும்பியது டிராகன்.
பசிபிக் கடலில் பாராசூட் உதவியுடன் இறங்கிய இந்த ஆளில்லா விண்கலம் நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் மீட்கப்பட்டது.

இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறது!

         
Tuesday 30 October 2012 .By.Rajah.
அரசாங்கத்தின் உயர் பதவிகள் பலவற்றுக்கு இராணுவத்தினரை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றத் உறுப்பினர் கரு ஜெயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
மாவட்டஅரசாங்கஅதிபர்களாகஇராணுவ பிரிகேடியர்களயும், பாடசாலை அதிபர்களாக இராணுவகேர்னல்களையும் நியமிக்க அரசாங்கம் நடவடிக்கைஎடுத்துள்ளதாகஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தற்போது உள்ள காவற்துறை மா அதிபர் என்ற பதவியை நீக்கி, காவற்துறை ஆணையாளர் என்ற புதிய பதவியை ஏற்படுத்த விருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இராணுவ ஆட்சியில் நடைபெறும் ஒன்று என்று சுட்டிக்காட்டிய அவர், இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

காங்கேசன்துறையை சூறாவளி தாக்கலாம்!?

Tuesday 30 October 2012.By.Rajah.எதிர்பார்க்கப்பட்டதைப் போல நேற்றைய தினம் இலங்கையை சூறாவளி எதுவும் தாக்கவில்லை, எனினும், இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த சூறாவளி இலங்கையை ஊடறுத்து செல்லலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. தற்போது முல்லைத்தீவில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தாழமுக்க நிலையில், இன்று பிற்பகலில் காங்கேசன் துறை ஊடாக இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறும் என்று கூறப்படுகிறது. இதனால் யாழ்ப்பாணத்தில் சிறிய அளவிலான சூறாவளி ஒன்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்ற வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. அதேநேரம் மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.