siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 30 அக்டோபர், 2012

இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறது!

         
Tuesday 30 October 2012 .By.Rajah.
அரசாங்கத்தின் உயர் பதவிகள் பலவற்றுக்கு இராணுவத்தினரை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றத் உறுப்பினர் கரு ஜெயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
மாவட்டஅரசாங்கஅதிபர்களாகஇராணுவ பிரிகேடியர்களயும், பாடசாலை அதிபர்களாக இராணுவகேர்னல்களையும் நியமிக்க அரசாங்கம் நடவடிக்கைஎடுத்துள்ளதாகஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தற்போது உள்ள காவற்துறை மா அதிபர் என்ற பதவியை நீக்கி, காவற்துறை ஆணையாளர் என்ற புதிய பதவியை ஏற்படுத்த விருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இராணுவ ஆட்சியில் நடைபெறும் ஒன்று என்று சுட்டிக்காட்டிய அவர், இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்