siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

நல்லூர் ஆலயத்துக்கு முன் மகேஸ்வரனின் சகோதரர் மீது நேற்று அசிட்

           
 தாக்குதல் சம்பவம்!முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரரும், பிரபல வர்த்தகருமான தியாகராசா துவாரகேஸ்வரன் (வயது41) மீது நேற்று சனிக்கிழமை நல்லூரில் வைத்து அசிட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


முதுகிலும், கழுத்துப் பகுதியிலும் படுகாயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி வெளியேறிய அவர் கொழும்பு வைத்திய சாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவம் யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயிலின் முன்பாக நேற்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.

துவாரகேஸ்வரன் நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டுத் திரும்பி வந்து தனது வாகனத்தில் ஏறிப் புறப்படுவதற்கு முற்பட்டபோதே அவர்மீது அசிட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவர் உடனடியாக தான் அணிந்திருந்த சேர்ட்டைக் கழற்றிவிட்டு அவ்விடத்தில் தேங்கியிருந்த மழைநீரில் உருண்டு புரண்டு எரிவு ஓரளவு குறைந்ததும் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெறுவது தனக்குப் பாதுகாப்பில்லை என்று கூறியுள்ள அவர் கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் நேற்றுச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

அசிட் வீச்சால் அவரது முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் பிரத்தியேகச் செயலாளரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான ஜெயக்கொடி என்பரே தன்மீது அசிட் வீசித் தாக்குதல் நடத்தியதாக துவாரகேஸ்வரன் தெரிவித்தார். அசிட் வீசியதைத் தொடர்ந்து ஜெயக்கொடி மோட்டார் சைக்கிளில் அந்த இடத்டதில் இருந்து சென்றார்.

அவருடன் இராணுவத்தினர் எனச் சந்தேகிக்கும் நான்கு பேரும் உடனிருந்தனர் எனவும் துவாரகேஸ்வரன் கூறினார். நேற்றுமுன்தினம் காரைநகர் சிவன்கோயிலுக்குத் தான் சென்றபோது அங்கும் ஜெயக்கொடி என்பவர் என்னைப் பின்தொடர்ந்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பில் யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேராவுடன் தொடர்புகொண்டபோது,

அசிட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் ஜெயக்கொடி என்பவரே அசிட் வீசித் தாக்குதல் நடத்தியதாகத் தான் சந்தேகிப்பதாக துவாரகேஸ்வரனின் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதேவேளை

ஜெயக்கொடி என்பவர் முரண்பாடு ஒன்று காரணமாகவே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். முன்னரும் இவர் முரண்பட்டமையால் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதிக்கும் தெரியப்படுத்தினேன். கொழும்பு இராணுவத் தலைமையகத்திலும் முறைப்பாடு செய்தேன். தற்போது ஜெயக்கொடிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை நடைபெறுகிறது. அதனாலேயே என்மீது அவர் தாக்குதல் நடத்தினார் என்றார் துவாரகேஸ்வரன்

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் தமிழகம் வருகை

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேர் நேற்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வந்து சேர்ந்தனர்.
காரைக்கால், நாகப்பட்டினம் பகுதியில் இருந்து டிசம்பர் 21ம் திகதி நான்கு படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.
நடுக்கடலில் பலத்த காற்று வீசியதால் கச்சதீவு அருகே சென்றபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை பிடித்து திரிகோணமலை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
நீதிபதி உத்தரவுபடி 26ம் திகதி வரை தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் 27ம் திகதி விடுவிக்கப்பட்டனர்.
மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சர்வதேச கடல் எல்லையில் மண்டபம் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தனர்.
நேற்று காலை இராமநாதபுரம் மண்டபம் அழைத்து வரப்பட்ட அவர்கள், விசாரணைக்குப் பின் மீன் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பு பயிற்சி

பெண்களுக்கெதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான டெல்லி மாணவியின் உயிரிழப்பை அடுத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வேண்டியது அவசியமாகிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இவற்றை முழுமையாக காவல்துறையால் மட்டுமே கட்டுப்படுத்தி விட முடியாது.
பொது மக்களின் ஆதரவும் அவசியம், இதனால் வரும் ஜனவரி மாதம் முதல் பெண் பொலிசாருக்கும் கல்லூரி மாணவிகளுக்கும் தற்காப்புக் கலை கற்றுத்தரப்படவுள்ளது.
இதில் வேலைக்குச் செல்லும் பெண்கள், குடும்பத் தலைவிகள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
பயிற்சி பெற விரும்புபவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை பொலிஸ் தலைமை அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.
தற்காப்பின் முதற்கட்டமாக பெண்கள் மிளகுத்தூள், மிளகாய்த்தூள் ஸ்ப்ரேக்களை எப்போதும் தங்களுடன் கொண்டுசெல்ல வேண்டும்.
இந்த உபகபரணங்கள் மூலம் ஆறு அடிக்கு அப்பால் இருந்தே எதிராளிகள் மீது தாக்குதல் தொடுக்கலாம் என மகாராஷ்டிரா புனே மாநகர காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது

ஹோமுஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடற் பயிற்சி

வளைகுடா பிராந்தியத்தில் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஹோமுஸ் நீரிணைப் பகுதியில் ஈரான், தொடர்ந்து கடற்படை போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் பயிற்சி ஹோமுஸ் நீரிணையைச் சுற்றிய 10 லட்சம் சதுர கிலோ மீற்றர் பரப்பில் நடப்பதாக கடற்படை தளபதி ஹபிபோலோ சையரி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, இந்தப் பயிற்சியின்போது கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசுவது, நீர்மூழ்கிகள் மூலம் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அம்சங்கள் சோதிக்கப்படுகின்றன.
மேலும் எதிரி நாட்டுப் படைகளின் ஆக்கிரமிப்பு முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கான ஒத்திகை, வெற்றிகரமாக நடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அணுசக்தித் திட்டங்களை முடக்குவதற்காக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஹோமுஸ் நீரிணையை ஈரான் அடைத்துவிடும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பயணிகள் விமானம் தீப்பிடித்தது: 4 பேர் பலி

ரஷ்யாவில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், 4 பேர் பலியாயினர். ரஷியாவின் ரெட் விங்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம், செக் குடியரசுக்குச் சென்றுவிட்டு பயணிகளை இறக்கிவிட்டு காலியாக வினுகோவா விமான நிலையத்துக்கு திரும்பியது.
இறங்கும் போது ஓடு பாதையை விட்டு விலகி, சாலையையொட்டி நின்று உடைந்து தீப்பிடித்தது. வேறு எந்த வாகனம் மீது விமானம் மோதவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானியின் தவறே விபத்துக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்தில் 4 பேர் பலியாயினர், 8 பேர் படுகாயமடைந்தனர்[புகைப்படங்கள்]