siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

நல்லூர் ஆலயத்துக்கு முன் மகேஸ்வரனின் சகோதரர் மீது நேற்று அசிட்

             தாக்குதல் சம்பவம்!முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரரும், பிரபல வர்த்தகருமான தியாகராசா துவாரகேஸ்வரன் (வயது41) மீது நேற்று சனிக்கிழமை நல்லூரில் வைத்து அசிட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முதுகிலும், கழுத்துப் பகுதியிலும் படுகாயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று...

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் தமிழகம் வருகை

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேர் நேற்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வந்து சேர்ந்தனர். காரைக்கால், நாகப்பட்டினம் பகுதியில் இருந்து டிசம்பர் 21ம் திகதி நான்கு படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் பலத்த காற்று வீசியதால் கச்சதீவு அருகே சென்றபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை பிடித்து திரிகோணமலை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிபதி உத்தரவுபடி 26ம் திகதி வரை தனியார் பள்ளியில்...

பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பு பயிற்சி

பெண்களுக்கெதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான டெல்லி மாணவியின் உயிரிழப்பை அடுத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வேண்டியது அவசியமாகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றை முழுமையாக காவல்துறையால் மட்டுமே கட்டுப்படுத்தி விட முடியாது. பொது மக்களின் ஆதரவும்...

ஹோமுஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடற் பயிற்சி

வளைகுடா பிராந்தியத்தில் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஹோமுஸ் நீரிணைப் பகுதியில் ஈரான், தொடர்ந்து கடற்படை போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் பயிற்சி ஹோமுஸ் நீரிணையைச் சுற்றிய 10 லட்சம் சதுர கிலோ மீற்றர் பரப்பில் நடப்பதாக கடற்படை தளபதி ஹபிபோலோ சையரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, இந்தப் பயிற்சியின்போது கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசுவது, நீர்மூழ்கிகள் மூலம் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அம்சங்கள் சோதிக்கப்படுகின்றன. மேலும்...

பயணிகள் விமானம் தீப்பிடித்தது: 4 பேர் பலி

ரஷ்யாவில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், 4 பேர் பலியாயினர். ரஷியாவின் ரெட் விங்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம், செக் குடியரசுக்குச் சென்றுவிட்டு பயணிகளை இறக்கிவிட்டு காலியாக வினுகோவா விமான நிலையத்துக்கு திரும்பியது. இறங்கும் போது ஓடு பாதையை விட்டு விலகி, சாலையையொட்டி நின்று உடைந்து தீப்பிடித்தது. வேறு எந்த வாகனம் மீது விமானம் மோதவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானியின் தவறே விபத்துக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது....