siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

கட்டிட விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை ..

..

வங்கதேச தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள சவார் என்ற இடத்தில் 8 மாடி ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை கட்டிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடிந்தது.
அதில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 1000 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
அங்கு தீயணைப்பு படையினரும், பொலிசாரும் இணைந்து இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்று இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானவர்களின் பலரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் இறந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் 3 ஆயிரம் பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு வெளியில் இருந்து தண்ணீரும், உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களை உயிருடன் மீட்கும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெறுபவர்களுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் ரத்த தானம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று இரவில் மட்டும் 41 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி தவிப்பதால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கட்டிடம் இடிந்ததில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வங்கதேசம் நேற்று ஒரு நாள் துக்க தினம் அறிவித்துள்ளது. மேலும் அந்நாட்டு தேசிய கொடி அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன
 

தென்கொரியா அழைப்பை நிராகரித்த வடகொரியா .,


தென்கொரியா எல்லையில் அமைந்துள்ள கெசாங் என்ற தொழில் மையம் ஒன்றில் வடகொரியா மற்றும் தென்கொரியா இரண்டும் கூட்டாக செயல்பட்டு வந்தது.
இந்த தொழில் மையத்தில் இரு நாட்டு தொழிலாளர்களும் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் போர் பிரகடனம் செய்ததை தொடர்ந்து கடந்த 3ம் திகதி இந்த வளாகத்தை வடகொரியா மூடியது. இதில் பணிபுரிந்த தனது பணியாளர்களில் ஒரு பகுதியினரை கடந்த 9ம் திகதி தென்கொரியா திரும்ப அழைத்துக்கொண்டது.
ஆனால் மீண்டும் அத்தொழில் மையத்தை திறக்க பேச்சு வார்த்தை நடத்த வடகொரியாவுக்கு தென்கொரியா நேற்று அழைப்பு விடுத்தது.
இதற்கு வடகொரியா இன்று காலைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், இந்த பேச்சு வார்த்தை அழைப்பை ஏற்கவில்லை எனில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தென்கொரியா தெரிவித்திருந்தது. ஆனால் இந்த அழைப்பை மோசடியானது என்று கூறி இன்று வடகொரியா நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் தென்கொரிய தொழிலாளர்கள் 170 பேரை திரும்ப பெற்றுக் கொள்வதாக தென்கொரிய அரசு இன்று அறிவித்துள்ளது
 

14 வயது மாணவியுடன் செக்ஸ் உறவு: ஆசிரியருக்கு ?


தன்னிடம் படித்த மைனர் மாணவியுடன் செக்ஸ் உறவு கொண்ட இந்திய வம்சாவளி ஆசிரியருக்கு சிங்கப்பூரில் ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஆசிரியராக பணியாற்றிய அரவிந்த் மேனன்(25) என்பவர் தன்னிடம் படித்த 14 வயது மாணவியுடன் நட்பாக பழகி, செக்ஸ் உறவு கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த மாணவி அரவிந்தை விட்டு விலக நினைத்துள்ளாள். இதனால் அவர் அந்த பெண்ணுடன் உறவு கொண்ட ஆபாச காட்சிகளை காட்டி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அர்விந்த் மீது கடந்த 2009ம் ஆண்டு மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தற்பொழுது இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சிவசண்முகம், மாணவியுடன் உறவு கொண்ட காட்சிகளை காணொளி எடுத்து மிரட்டிய குற்றத்துக்காக அரவிந்த்க்கு ஓராண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளார்.
அரவிந்த் மீது மேலும் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.