siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 20 ஜூன், 2013

யாகூவிடம் தகவல் கேட்கும் அமெரிக்கா


தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான நபர்களின் விபரங்களை அமெரிக்க கேட்டுள்ளதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது.
யாகூ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மாரிசா மேயர் வெளியிட்டுள்ள கடிதத்தில் இத்தகைய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மே மாதத்துக்கு முந்தைய 6 மாதத்தில் மட்டும் மொத்தம் 13,000 கோரிக்கைகள் அமெரிக்க அரசிடம் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பேஸ்புக், மைக்ரோசாப்ட், அப்பிள் போன்ற நிறுவனங்கள் அமெரிக்க அரசிடம் இருந்து வந்த கோரிக்கைகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 

கடந்த ஆண்டில் மட்டும் 80 இலட்சம் பேர்


அகதிகளாக இடம்பெயர்வு: ஐ.நா  தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.ருவண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய நெருக்கடி காலகட்டத்துக்குப் பிறகு இதுதான் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படும் காலமாகும். கடந்த ஆண்டில் 80 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கின்றது.
இடம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் போர் காரணமாகவே இடம் பெயர்ந்துள்ளனர். இது மிகவும் மோசமான நிலைமை என்றும், சிரியாவின் மோதல் காரணமாகவே மிகவும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாகவும் ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகின்றது.
4.5 கோடி அகதிகளில் அரைவாசிப் பேர், ஆப்கானிஸ்தான், சோமாலியா, இராக், சிரியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர் எனவும், நீண்டகால மோதல்களை தீர்க்க முடியாத அல்லது புதிய மோதல்கள் உருவாவதை தடுக்க முடியாத சர்வதேச சமூகத்தின் இயலாமையையே இந்த புலம் பெயர்வுகள் அதிகரிப்பை காண்பிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறுகிறது