siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 20 ஜூன், 2013

யாகூவிடம் தகவல் கேட்கும் அமெரிக்கா


தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான நபர்களின் விபரங்களை அமெரிக்க கேட்டுள்ளதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது.
யாகூ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மாரிசா மேயர் வெளியிட்டுள்ள கடிதத்தில் இத்தகைய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மே மாதத்துக்கு முந்தைய 6 மாதத்தில் மட்டும் மொத்தம் 13,000 கோரிக்கைகள் அமெரிக்க அரசிடம் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பேஸ்புக், மைக்ரோசாப்ட், அப்பிள் போன்ற நிறுவனங்கள் அமெரிக்க அரசிடம் இருந்து வந்த கோரிக்கைகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 

0 comments:

கருத்துரையிடுக