ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ் அமைப்பும் , ஒரு சில தனிநபர்களை கொண்டு இயங்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆஸ்திரேலியா கிளையினரும் சேர்ந்தே சுமந்திரனுக்கான மக்கள்
சந்திப்பை ஒழுங்குசெய்தனர் . இந்நிலையில் இச் சந்திப்புக்கு சென்ற தமிழின உணர்வாளர்கள் சுமந்திரனுக்கு எதிர்ப்பு காட்டி போராட்டத்தில்
ஈடுபட்டனர் .
ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ் அமைப்பின் தமிழ்த் தேசிய விரோத செயற்பாடு அம்பலத்துக்கு வந்த பின்னர் , அவ் அமைப்பு சுமந்திரனுக்கு எதிர்ப்பு காட்டிய தமிழ் இளையோர்களை காட்டி கொடுக்கும்
முயற்சியில்
ஈடுபட்டு வருகின்ற தகவல் கசிந்துள்ளது . அத்தோடு தமிழின உணர்வுள்ள இளையோர்களை , காட்டுமிராண்டிகள் ,காடையர்கள் , கடைசியாக கப்பலில் வந்தவர்கள் , என கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர் .
ஆஸ்திரேலியா
தமிழ் காங்கிரஸ் அமைப்பின் தமிழ்த் தேசிய விரோத போக்கை கண்டித்த அவ்வமைப்பின் ஒரு சில தேசியவாத உறுப்பினர்களும் அவ்வமைப்பின் நிர்வாகத்தில் இருந்து ஒதுக்கப்படுவதாக தகவல்
கிடைத்துள்ளது .
தாயகத்தில் தமிழ்த் தேசிய தளத்தை சிதைக்க நினைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளையும் , புலத்தில் அதற்கு வலுச்சேர்க்க துடிக்கும் உலகத் தமிழர் பேரவையின் தலைமைகளையும் இனம் கண்டு உலகத் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதே காலத்தின் தேவையாக உள்ளது