siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

சுமார் 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்ட கிறித்துவ பாதிரியார் மீதுள்ள வழக்கை தள்ளுபடி

உலகையே உலுக்கிய ரிவாண்டா நாட்டு இனப்படுகொலையில் சுமார் 10 லட்சம் அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் கிறித்துவ பாதிரியார் மீதுள்ள வழக்கை தள்ளுபடி செய்யவுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ரிவாண்டாவின்
 அதிபர் Juvenal Habyarimana கடந்த 1994ம் ஆண்டு விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இது ஒரு திட்டமிடப்பட்ட சதி எனக்கூறி அவரது ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். 1994ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த இந்த உள்நாட்டு யுத்தத்தில் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ரிவாண்டா நாட்டை சேர்ந்த Wenceslas Munyeshyaka என்ற கிறித்துவ பாதிரியார் ஒருவர், கிளர்ச்சியாளர்களுக்கு தன்னுடைய தேவாலயத்தில் அடைக்கலம் அளித்தற்கும், அங்கு ஏற்கனவே அடைக்கலம் ஆகியிருந்த நூற்றுக்கணக்கான சிறுமிகள் மற்றும் பெண்கள் கற்பழிப்பிற்கு காரணமாக இருந்துள்ளார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ரிவாண்டா நாட்டு சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க அந்த பாதிரியார் பிரான்ஸ் நாட்டில் அடைக்கலம் தேடி கடந்த 1995ம் ஆண்டு முதல் பிரான்ஸில் வசித்து வருகிறார்.
ரிவாண்டா நாட்டின் கோரிக்கையை ஏற்று பிரான்ஸ் அரசும் அவர் மீது வழக்கு போட்டதை தொடர்ந்து, ரிவாண்டா ராணுவ நீதிமன்றம் அந்த பாதிரியார் இல்லாமலே அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதனை தொடர்ந்து, அவரை தன் நாட்டிடம் ஒப்படைக்குமாறு ரிவாண்டா விடுத்த கோரிக்கையை பிரான்ஸ் அரசு நிராகரித்து
 வந்துள்ளது.
பல ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த இந்த விசாரணையை தொடர்ந்து, தற்போது பாதிரியார் மீது சுமத்தப்பட்டுள்ள எந்த குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்கும் வகையில் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர் மீதுள்ள வழக்கை தள்ளுபடி செய்யவுள்ளதாக பிரான்ஸ் அரசு
 முடிவு செய்துள்ளது.
எனினும், இந்த முடிவை பிரான்ஸ் நாட்டு உச்சநீதிமன்றம் தான் இந்த வழக்கை மேலும் விசாரிக்க வேண்டுமா, வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும் என்றும் பாரிஸ் நகர வழக்கறிஞரான Francois Molins தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரியார் தற்போது தெற்கு பிரான்ஸின் Gisors என்ற நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>