siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

கிடைத்த பாகம் மாயமான எம்.எச்.370 விமானத்துடையது தான்???

ரீயூனியன் தீவுகளில் கிடைத்த பாகம் 239 பயணிகளுடன் மாயமான எம்.எச்.370 போயிங் 777 விமானத்துடையதே என்று மலேசிய அதிகாரிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.
மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் திகதி சென்ற மலேசிய விமானம் எம்.எச்.370 ராடாரிலிருந்து திடீரென மறைந்தது.
அதனை தேடும் பணி 16 மாத காலங்களாக நீடித்து வந்த நிலையில், அது இந்தியப் பெருங்கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ரீயூனியன் தீவுகளில் கரையில் விமான பாகம், இறக்கை ஆகியவை ஒதுங்கியது.
இதையடுத்து அந்த பாகங்கள் காணாமல் போன மலேசிய விமானத்தை சேர்ந்தது தானா என்று பிரான்சில் பரிசோதனை நடத்தப்பட்டது.
அந்த பரிசோதனையில், அது போயிங் 777 எம்.எச்.370 விமானத்துடையது என்று உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் லியோவ் தியாங் வெளியிட்ட அறிக்கையில், கண்டெடுக்கப்பட்ட இறக்கை போயிங் 777 விமானத்தினுடையது என்பது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது.
பிரான்சில் செய்யப்பட்ட சோதனையில், போயிங் விமான தயாரிப்பாளர்கள் மற்றும் மலேசிய ஏர்லைன்ஸ் சிவில் ஏவியேஷன் துறையினரும் இதனை உறுதி செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் 16 மாதகாலம் உலகை உலுக்கிய அந்த துயரச் சம்பவத்தின் புதிர் முடிச்சு அவிழ்ந்துள்ளது என்று 
மலேசியா தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சண்டைக்கு எதிராக நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

பிரான்ஸில் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டைக்கு பரவலாக தடை உள்ள நிலையில், இனி நாடு முழுவதும் சேவல் சண்டைக்கான புதிய மைதானங்களை அமைக்க கூடாது என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் காளை அடக்குதல் போட்டி போல, சேவல் சண்டையும் அந்நாட்டு மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சேவல் சண்டைக்கு பெரும்பாலான நகரங்களில் சட்டப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸின் புறப்பகுதிகளில் இந்த சேவல் சண்டை விளையாட்டுகளை உள்ளூர் நிர்வாகங்கள் அனுமதித்து வருகிறது.
இந்த சேவல் சண்டைக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், சேவல் சண்டை நடைப்பெற்று வந்த இடங்களிலும் அந்த விளையாட்டுக்கு எதிராக போராட்டம் நிகழ்ந்து வந்துள்ளது.
இந்நிலையில், Sainte-Marie என்ற நகரை சேர்ந்த இரண்டு நபர்கள் சேவல் சண்டையை நடத்த புதிய மைதானம் அமைக்க உள்ளூர் நிர்வாகம் அனுமதி தர மறுக்கிறது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் அன்மையில் வந்தபோது பேசிய அந்த நபர்கள், பிரான்ஸ் நாட்டில் காளை அடக்குதல் போட்டிகளுக்கு நாடு முழுவதும் அனுமதி உள்ள நிலையில், சேவல் சண்டைக்கு அனுமதி மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினர்.
இதனை விசாரித்த நீதிபதி, காளை சண்டையும் சேவல் சண்டையும் பிரான்ஸ் நாட்டு மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளாக இருந்தாலும் கூட, இரு விளையாட்டுகளின் தன்மைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது அல்ல.
எனவே, இனி நாடு முழுவதும் சேவல் சண்டையை நடத்த புதிதாக மைதானங்கள் அமைக்க தடை விதித்தது சரியானது தான் என தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதியின் இந்த உத்தரவு விலங்களுகள் நல ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்திருந்தாலும், சேவல் சண்டை மூலம் தங்களுக்கு வரும் வருமானம் போய்விட்டது என இந்த உத்தரவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக சேவல் சண்டை 
விளையாட்டு பிரியர்கள் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சமமாக காதலோடு போட்டியிடும் நட்பு: நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

சர்வதேச அளவில் நண்பர்கள் தினம் எல்லோராலும் விரும்பியே கொண்டாடப்பட்டு வருகிறது.
சமுதாயத்துக்கு பயனுள்ள நல்ல விடயமாக இருக்கிற ஒவொவொன்றுக்குமே வருடத்தில் ஒரு நாளை ஒதுக்கி கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் அங்குள்ள கலாச்சார அடிப்படையில் பண்டிகைகள் கொண்டாடுவது வழக்கம். அப்படிப்பட்ட பண்டிகைகள் அவர்களுடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிப்பது சிறப்புடையதுதான்.
அதேவேளையில், உலகத்தில் ஒவ்வொரு பண்டிகைக்கு பின்னாலும் ஒரு சமுதாயம் தன்னை தனித்துவத்துடன் அடையாளம் காட்டிக்கொள்கிறது. அது உலக ஒருங்கிணைப்பில் விலகி நிற்பது போன்றதுதான்.
அதனால், ஐ.நா. போன்ற அமைப்புகள் சர்வதேச அளவில் சில தினங்களை ஏற்படுத்தி உலகில் உள்ள எல்லா நாட்டினராலும் இனத்தவராலும் கொண்டாடும்படியான ஒரு சூழலை, ஒருங்கிணைப்பை உருவாக்கியுள்ளன.
அதுவும் இந்த நுற்றாண்டில்தான் தினங்கள் கொண்டாடுவதை ஊடகங்களும் வாணிபமும் உற்சாகப்படுத்தி வருகின்றன.
நண்பர்கள் தினம் முதன்முதலாக, தென் அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள பாரகுவே மக்களிடம்தான் பிரபலமானது. இதை இளைஞர்கள் தங்கள் நண்பர்களுக்குள் கொண்டாடி வந்தனர்.
இந்தியா, பங்களாதேஷ், மலேசியா போன்ற நாடுகளிலும் இந்த நாளில் கார்டுகள், மலர்க்கொத்துகள் கொடுத்து வாழ்த்து பரிமாறிக்கொண்டனர்.
காதலர் தினம், மகளிர் தினம், யோகாதினம் போல, நண்பர்கள் தினமும் ஐ.நா. வால் அறிவிக்கப்பட்டது.1958 ஆம் ஆண்டுதான். ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிறு கொண்டாடப்படுகிது.
இதை கொண்டாடுகிறார்களோ இல்லையோ கொண்டாடுகிற உரிமை எல்லோருக்கும் தரப்பட்டுள்ளது.
காதலர் தினம், யோகா தினம் போன்றவைகளுக்கு கூட சில நாடுகளில் மதம், கலாச்சாரத்தை காரணம் காட்டி எதிர்ப்பாளர்கள் உருவாகின்றனர்.
நண்பர்கள் தினத்துக்கு எந்த பிரிவினரிடமும் எதிர்ப்பு எழ 
வாய்ப்பே இல்லை.
காதல், மனிதர்களுக்கு இரண்டாவது உயிர் என்றால், அந்த காதலோடு சமமாக போட்டியிட்டு வருவது நட்பு. அது மட்டுமல்ல, சமயங்களில் காதலையே வெல்லக் கூடியதாகவும் உள்ளது நட்பு.
திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களில் நட்புக்கு ஒரு அதிகாரத்தையே தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஒதுக்கியுள்ளபோது. 365 நாட்களில் ஒரு நாளை நண்பர்கள் தினத்துக்கு ஒதுக்கியிருப்பது கூட நாம் அதற்கு அளித்திருக்கும் சிறிய அங்கீகாரம்தான்.
இந்நாளில், நட்பை வளர்ப்பதற்கும், உறவுக்கு சமமான அங்கீகாரம் கிடைப்பதற்கான முயற்சியில் இளைஞர்கள் ஈடுபடலாம்.
இளமையில் நண்பர்கள் வட்டம் விரிவடைந்து கொண்டே செல்லும், முதுமையில் அதை சுருக்கிக்கொள்வதையே சராசரி மனிதர்களின் மனநிலை நிம்மதியாக கருதுகிறது.
இதை மாற்றுகிற கடமை இந்த நண்பர்கள் தினத்துக்குதான் உண்டு.
காதல்தான் சமுதாயத்தில் சமத்துவத்தை கொண்டுவர முடிந்தது என்று எல்லோரும் எண்ணுகிறோம். அதை அதனினும் அனுகூலமாக செய்யும் வலிமை நட்புக்கும் உண்டு.
ரத்த பாத்தியதை உள்ள உறவுகள் துன்பத்தில் உதவுவது. ஆச்சரியத்துக்கும் பாராட்டுக்கும் உரியதல்ல. ரத்த சம்பந்தம் இல்லாத நண்பர்கள் உதவுவதுதான் மெய்சிலிர்க்க வைப்பதும் மெச்ச தகுந்ததுமாகும்.
அத்தகைய மாண்புமிக்க நண்பர்கள் தினத்தில் உங்கள் நண்பர்களுக்கு உயர்வான உதவிகளை செய்யுங்கள்.
அல்லது, உங்களுக்கு உதவிய நண்பர்களுக்கு இந்த நன்னாளில் நன்றியை நினைவு கூருங்கள்.