siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தீவிரவாதிகளுக்கு முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் போர்ப் பயிற்சி!

 சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது �இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா� என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
  
இதன் முதல்கட்டமாக சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இப்படையினர் அங்கிருக்கும் கிருஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டி விட்டு இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், சிரியாவின் ரக்கா நகரை ஏற்கனவே கைப்பற்றி தங்களது தலைமை பீடமாக அமைத்துக் கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் பல பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இதன் அடுத்தகட்டமாக, அலெப்போ மாகாணத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டர்க்மென், பரே, அக்தரின் ஆகிய நகரங்களையும் அவற்றை ஒட்டியுள்ள சில கிராமங்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். என்றிருந்த தங்களது இயக்கத்தின் பெயரை ஐ.எஸ். என்று சமீபத்தில் சுருக்கிக் கொண்ட இவர்களது படையில் இணைய பலரும் முயன்று வருவதாக தெரிகின்றது.
இந்த ஐ.எஸ்.படையில் அமெரிக்கா, பிரிட்டைன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்களும் சேர்ந்து சிரியா மற்றும் ஈராக் ராணுவத்தினருடன் போரிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தியாவை சேர்ந்த சுமார் 100 இஸ்லாமிய இளைஞர்களும் இந்தப் படையில் சமீபத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டைனை சேர்ந்த சுமார் 600 இஸ்லாமிய இளைஞர்கள் ஐ.எஸ்.படையில் இணைந்து சிரியா மற்றும் ஈராக்கில் போராடி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக இந்த இயக்கத்தில் இணையும் இளைஞர்களுக்கு பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் நவீன வகை போர்ப் பயிற்சிகளை அளித்து வரும் திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் செல்போன் உரையாடல் மற்றும் இ-மெயில்களை பிரிட்டைன் நாட்டின் உளவுத்துறையான எம்.16 மற்றும் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. ஆகியவை இடைமறித்து உளவறிந்ததில் மேற்கண்ட உண்மை தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமான !தி டெய்லி ஸ்டார்! குறிப்பிட்டுள்ளது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

சனி, 30 ஆகஸ்ட், 2014

பெருநட்டத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ்! விமான விபத்துக்களால்

இந்து சமுத்திரத்துக்கு மேலாகப் பறந்த வேளை, கடந்த மார்ச் மாதத்தில் விமானம் ஒன்று காணாமல் போன சம்பவத்தை அடுத்து மலேசியன் ஏர்லைன்ஸின் பயணிகள் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு, அது பெரும் நிதி இழப்பை எதிர்நோக்குவதாகக் கூறப்படுகின்றது. ஜூலையில் இரண்டாவது விமானம் ஒன்று யுக்ரெய்னில் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, பயணத்துக்கான பதிவுகள் 30 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததால், இந்த வருடத்தின் இரண்டாவது அரைப் பகுதியில் மேலும் இழப்பு ஏற்படும் என்று அது எச்சரித்துள்ளது.
முதலாவது விமானம் காணாமல் போனதை அடுத்து, விமானப் பயணத்துக்கான பதிவுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக முதல் காலாண்டில் அந்த நிறுவனத்துக்கு 97 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

குழந்தை பிறந்ததை 'ஆப்பிள்' ஸ்டைலில் விளம்பரமாக்கிய தந்தை

ஜேர்மனியில் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் தனக்கு குழந்தை பிறந்த விடயத்தை வித்தியாசமாக இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆண்ட்ரியாஸ் கிளெய்ன்க் (Andreas Kleinke) என்பவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
தன் மகன் பிறந்ததை நண்பர்களுக்குத் தெரியப்படுத்த தனியாக வலைத்தளம் ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, புதிய சிறிய ரகம் ஜோனாதன் அறிமுகம். ஜோனாதன் (2014 வருட படைப்பு) 20 அங்குலம் நீளமுள்ள ஒரே உடல் அமைப்பு கொண்ட திடமான அழகினை உடையது. ஒழுங்கான 10 விரல்கள் நேர்த்தியான பன்முக தொடுதல் அனுபவம் தர கூடியது.
கூடுதலாக, ஒன்று அல்ல பார்வை திறன் கொண்ட இரு கமெராக்களை கொண்டது. ஒவ்வொன்றும் ரெடினா ரெசல்யூசனில் திகைக்க வைக்கும் படங்களை தருவது.
இரு ஒலிவாங்கள் (Microphones) இரு புறமும் அமைந்து ஒவ்வொரு சத்தத்தையும் கேட்கும் திறன் கொண்டது.
இதன்பின் நடுவில் அமைந்துள்ள ஸ்பீக்கர் உங்களை ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டு சென்று விடும்.
அதுவும் அதிகபட்சமாக 120 டெசிபல் அளவுள்ள சத்தத்தை அதிகமாக வெளியிடும் திறன் கொண்டது.
பல மொழிகளை அறிந்து கொள்ளும் வகையில் இது படைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இதன் இருப்பிடம் முனிச் (Munich) ஜேர்மனி என்று கூறியதுடன், தனது குழந்தை குறித்த சுவாரிஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
9
 இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .


 

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ரூபாய் ஒன்றரை கோடிக்கு விலைபோன ஆட்டுக்கிடா!

 ஆட்டு விந்துக்கு மவுசு பாருங்க!கலப்பின ஆடுகளின் விந்தணுக்களின் மூலமாக திடகாத்திரமான ஆடுகளை உருவாக்கும் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் 6 மாத ஆட்டுக்கிடா ஒன்றினை ஒரு லட்சத்து 52 ஆயிரம் பவுண்டுகளுக்கு வாங்கியுள்ளது. உடலின் மேல்பகுதியில் அடர்த்தியான கம்பளி ரோமத்துடன் கொழுகொழுவென்று இருக்கும் இந்த அரியவகை ஆட்டிடம் ஒருமுறை சுரக்கும் விந்தினை குறைந்தபட்சம் 100 பவுண்டுகளுக்கு விற்று போட்ட முதலீட்டை எடுத்து விடலாம் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

 

ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் (காணொளி)

அணு உலை நிலையங்களை வேவு பார்க்க வந்த இஸ்ரேலின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரானின் பல பகுதிகளில் அமைந்துள்ள அணு செறிவூட்டும் நிலையங்களை ஆளில்லா உளவு விமானங்களின் மூலமாக இஸ்ரேல் வேவு பார்த்தும் வருகின்றது.
இந்நிலையில், ஈரானின் நட்டன்ஸ் பகுதியில் உள்ள அணு செறிவூட்டும் நிலையத்தை நேற்று வேவு பார்த்த இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
ஈரானின் நட்டன்ஸ் அணு செறிவூட்டும் நிலையத்தை நோக்கிச் சென்ற ஆளில்லா உளவு விமானத்தை, ஈரான் இராணுவப் படைகள் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானிலுள்ள அணு உலைகளில் மின்சார உற்பத்தி மட்டுமின்றி பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களும் தயாரிக்கப்படுவதாக உலக நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரானின் அணு ஆயுதங்களை எல்லாம் பறிமுதல் செய்து அழித்து விட வேண்டும் இஸ்ரேல் கங்கணம் கட்டி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

எரிமலை வெடிக்கலாம் என்பதால் மக்கள் வெளியேற்றம்!

 ஐஸ்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய எரிமலையான பர்டர்புங்கா எரிமலை அமைந்துள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து புவியியலாளர்கள் 300க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களைக் கணக்கிட்டுள்ளனர். இந்த நிலை அதிர்வு நடவடிக்கை ஒரு எரிமலை வெடிப்பிற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டில் அங்குள்ள எய்ஜப்ஜள்ளஜோகுல் எரிமலை வெடித்தபோது அதிலிருந்து சிதறப்பட்ட சாம்பல் துகள்களால் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு பெரும்பாலான ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்து மூடப்பட்டது. இப்போதும் எச்சரிக்கைக் குறியீட்டின் நான்காவது தர நிலையான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளதால் இதுபோன்றதொரு பாதிப்பு நிகழக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.
   
தலைநகர் ரெய்க்ஜவிக்கிலிருந்து 300கி.மீ தொலைவில் உள்ள இந்தப் பகுதியில் மனிதக் குடியிருப்புகள் அதிகம் இல்லாதபோதும் அங்குள்ள தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகமாகக் காணப்படும். எனவே பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்தப் பூங்காவிற்கு வருபவர்களைத் தடை செய்து பூங்காவையும் மூடியுள்ளதாக அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று வரை இந்த எரிமலை அமைதியாகக் காணப்பட்டபோதிலும், இது வெடிக்கத் தொடங்குமேயானால் அட்லாண்டிக் வான் போக்குவரத்து இதனால் பாதிக்கப்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .

 

பேச்சுவார்த்தையிலிருந்து இம்ரான் விலகல்

 பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான், அப்போராட்டத்தைக் கைவிடுவது குறித்து அரசுடன் நிகழ்த்தி வந்த பேச்சுவார்த்தையிலிருந்து வியாழக்கிழமை விலகினார்.
அந்நாட்டின் மத குரு தாஹிருல் காத்ரியின் அவாமி தெஹ்ரிக் கட்சியும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதுகுறித்து விவாதிக்க அரசு விடுத்திருந்த அழைப்பை ஏற்று, இம்ரான் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.
இந்நிலையில் தற்போது அதிலிருந்து விலகியதுடன், இறுதிவரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளதன்மூலம், அரசுக்கு எதிரான தனது நிலையை அவர் மேலும் கடுமையாக்கியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் உத்தரவு: முன்னதாக, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு தலைமை வழக்குரைஞர் சல்மான் பட் தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “இது நிர்வாகம் சார்ந்த பிரச்னை. அரசுதான் சட்டத்துக்கு உள்பட்டு இந்த விவகாரத்தைக் கையாள வேண்டும்’ என்று தெரிவித்தது.
இதன் காரணமாகவே, இம்ரான் கான் தனது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் தீர்மானம்: இதற்கிடையே, பிரதமரை பதவி விலக
வலியுறுத்தி இம்ரான் கான், தாஹிருல் காத்ரி கட்சிகள் மேற்கொண்டுள்ள போராட்டத்துக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
எதிர்க்கட்சியினர் தரக்குறைவாகவும், அவதூறாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசி வருவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிபருடன் ஷெரீஃப் சந்திப்பு: இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்தும், நிலைமையை சமாளிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்க அதிபர் மம்நூன் ஹுசைனை நவாஸ் ஷெரீஃப் சந்தித்தார்.
முக்கிய அரசுக் கட்டடங்கள் அமைந்துள்ள சிறப்புப் பாதுகாப்பு மண்டலத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து அதிபரிடன் அவர் எடுத்துரைத்தார்.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

 

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

போதை வழக்கில் மகன்: வெட்கி தலைகுனிந்த ஜாக்கி சான்

பிரபல நடிகர் ஜாக்கி சான் தனது மகன் கைதானது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜாக்கி ஜானின் மகன் நடிகர் ஜெய்சி சான் (31), தைவான் சினிமா நடிகர் கெய் கோ (23) ஆகியோர் போதை பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஜெய்சி சான் வீட்டில் இருந்து 100 கிராம் போதைப்பொருள் கைப்பற்றபட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜாக்கி சான் தனது வலைதளத்தில், இந்த பிரச்சினை தொடர்பாக, நான் கோபமாகவும் அதிர்ச்சிகரமாகவும் உணர்கிறேன்.
நான் பிரபலமானவன் என்ற அடிப்படையில் இதற்கு நான் மிகவும் வெட்கப்படும் வேளையில், ஒரு தந்தை என்ற அடிப்படையில் எனது இதயம் உடைந்து போய் உள்ளேன்.
இதனால் இந்த சமூகத்திடமும், பொதுமக்களிடமும் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்.
அனைத்து இளைஞர்களும் ஜெய்சியை பார்த்து போதைப்பொருள் தீங்கானது என்ற பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும், தவறு செய்யும் போது அதற்குரிய விளைவுகளை ஏற்று கொள்ள வேண்டும்,தந்தை என்ற நிலையில் வருபவைகளை உன்னுடன் சேர்ந்து எதிர்கொள்ள போகிறேன் என்று ஜெய்சிக்கு கூறுவதாக தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .


புதன், 20 ஆகஸ்ட், 2014

அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை!

வீடியோ வெளியானதால் பரபரப்பு!
ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40) கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர்.
அந்த வீடியோவின் இறுதியில் மற்றொரு அமெரிக்கரும் தோன்றுகிறார். அவர் சிரியாவில் இருந்து 2013ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர். ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த படுகொலையை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
 

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

தனிநாடாக பிரியக்கூடாது: அவுஸ்திரேலிய பிரதமர்

  ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து ஸ்கொட்லாந்து மக்கள் தனியாக பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து தனிநாடு கோரும் வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது.
வாக்கெடுப்பு பத்திரத்தில் சுதந்திர நாடாக மாறுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆம் இல்லை என்ற வார்த்தைகள் மாத்திரமே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆம் என்ற புள்ளியிடலில் புள்ளியிட வேண்டாம் என அவுஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் இந்த கருத்தனை வெளியிட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

ஆஸ்திரேலிய மருத்துவமனை மன்னிப்பு கோரியது.

    அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக இறந்தவர்கள் என்று அறிவித்துவிட்டது. இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மருத்துவமனை நிர்வாகம் இன்று பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளது. தங்களிடம் பணிபுரியும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனையை விட்டு செல்லும்போது அந்தந்த மருத்துவர்களுக்கு அனுப்பப்படும் தகவல் குறிப்புகளில் கவனக்குறைவாக இதுபோல் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று இம்மருத்துவமனையின் சுகாதாரப்பிரிவு இயக்குனர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், மேலும் இந்தத் தவறு குறித்து அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர் என்றும் நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது. இதனால் நோயாளிகளின் கவனிப்பு பாதிக்கப்படவில்லை என்றும் இந்த அறிக்கை தெரிவித்தது. இந்தத் தவறு ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என்று கூறிய ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம், இதனால் பணியில் இருந்த மருத்துவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றது. எதிர்த்தரப்பு உறுப்பினர்களோ சுகாதார அமைப்பின் அதிகப்படியான வேலைப்பளுவை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகின்றது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
 
 
 

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

தவறான கிரீன் சிக்னல்: பள்ளத்தில் பாய்ந்த மூதாட்டியின் கார்

ஜேர்மனியில் தவறான போக்குவரத்து விளக்கால் கார் நேருக்கு நேர் மோதியதில் மூன்று நபர்கள் காயம் அடைந்துள்ளனர். ஜேர்மனியின் கொப்லென்ஸ் நகரில் சாலை ஒன்றில் போக்குவரத்து விளக்கு தவறாக காட்டியுள்ளது. இரு சாலையில் மத்தியில் இருந்த இந்த விளக்கு, இரு சாலையினருக்கும் பச்சை விளக்கு காட்டியதால் 72 வயது மூதாட்டி ஓட்டிய கார் மற்றொரு காரின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ஏதிரே வந்த காரில் இருந்த 46 வயது நபர் தனது காரை திருப்ப முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. வேகமாக மோதியதால் மூதாட்டியின் கார் பறந்து சென்று பள்ளத்தில் விழுந்துள்ளது. இதனால் இவர் பலத்த காயமடைந்துள்ளார். தற்போது இந்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டு தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

முதியவரின் திருட்டுத்தனம் அம்பலம்

பிரான்ஸ் நாட்டில் முதியவர் ஒருவர் பழமை வாய்ந்த பொருட்களை திருடி விற்ற குற்றத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 60 வயது மது தயாரிப்பாளர் ஒருவர் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது பொலிசார் அவரது காரினை சோதனை நடத்தியதில், 112 ரோமன் நாணயங்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், பொலிசார் இவர் வீட்டை சோதனை செய்த போது, பழமை வாய்ந்த நாணயங்கள் மற்றும் ஏராளமான நகைகள் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து உரிமம் இல்லாமல் தொல்பொருட்களை விற்றதற்காக 200,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

சனி, 9 ஆகஸ்ட், 2014

பிரித்தானியா வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்காக புதிய திட்டம் அறிமுகம்!

 இலங்கையில் இருந்து பிரித்தானியா வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்காக புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இது கடவுச்சீட்டை திரும்ப வழங்கும் ( passport-back service) சேவை என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. புதிய அறிமுகத்தின்படி வீசாவுக்காக ஆவணங்களை சமர்ப்பிப்போர் வீசா தயாரிப்பு நடைபெறும் பெரும்பாலான காலத்தில் தமது கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருக்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி சுற்றுலா, வியாபாரம் உட்பட அடிக்கடி பிரித்தானியாவுக்கு சென்று திரும்புவோரும் இதில் உள்வாங்கப்படுவார்கள். இதேவேளை இந்த திட்டத்துக்காக 9400 ரூபா மேலதிக கட்டணமாக அறவிடப்படவுள்ளது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

பார்க்கும் பெண்களை எல்லாம் கொன்று குவிக்கும் மர்ம நபர்

பிரேசிலில் மர்ம நபர் ஒருவர்  கண்ணில் பட்ட  பெண்களை எல்லாம் கொல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் கொயானியா நகரத்தில் மர்ம நபர் ஒருவன் பெண்களை தேடி தேடி கொலை செய்து வருகிறான்.
மோட்டார் சைக்களில் உலா வரும் அந்நபர் இளம்பெண்கள் அருகில் சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளான்.
இதுவரை 13 வயதில் இருந்து 29 வயதிற்கு உட்பட்ட 12 பெண்களை கொலை செய்துள்ள அவன், கடைசியாக இரு தினங்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை கொலை செய்துள்ளான்.
இந்நிலையில் இவன் அடுத்து யாரை கொலை செய்யப்போகிறான் என தெரியாமல் பெண்கள் பீதியில் உள்ளனர்.
தற்போது இவனை பிடிக்க தீவிர முயற்சி கொண்ட பொலிசார் நகரம் முழுவதும் வலைவரித்தபோதும் இதுவரை அவன் சிக்கவில்லை.
மேலும் ஒவ்வொரு பெண்ணை கொலை செய்யும்போதும், அவன் வெவ்வேறு மோட்டார் சைக்கிளில் வருவதால் அவனை பிடிப்பதில் பொலிசார் திணறி வருகின்றனர்.


இங்குஅழுத்தவும்மற்றைய செய்திகள்
 

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா

  பொருளாதார மேம்பாட்டிற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் முடிவை உக்ரைன் எடுத்தபோது, ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புத்தின் அதனை நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பிரிவினை மோதல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. உக்ரைனின் கிழக்குப் பகுதி பிராந்தியத்தில் ஒன்றான கிரிமியா உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கு இடையே ரஷ்யாவுடன் தன்னை இணைத்துக்கொண்டது. உக்ரைனின் இன்னும் சில பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைக்க ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 இதனை ரஷ்யா ஆதரிப்பதாகக் கூறி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அந்நாட்டின் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. உக்ரைனில் நிலவும் நெருக்கடிக்கு காரணகர்த்தா ரஷ்யா என்பதை வெகுவாக விமர்சித்த கம்யூனிஸ்ட் நாடுகளில் போலந்தும் ஒன்றாகும். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக போலந்திலிருந்து இறக்குமதியாகும் காய்கறி, பழங்களுக்கு ரஷ்யா முற்றிலுமாகத் தடை விதித்துள்ளது. இந்த இறக்குமதியில் ஏராளமான பூச்சிக்கொல்லி மிச்சங்களும், நைட்ரேட் ரசாயனங்களும் கலந்துள்ளது என்று ரஷ்யாவின் உணவு சுகாதார அதிகாரிகள் தடை விதித்தபோது குறிப்பிட்டுள்ளனர். போலந்தில் விளையும் அப்பிள்களுக்கு ரஷ்யாவே பிரதான ஏற்றுமதி சந்தையாகும்.

ஆண்டுதோறும் ஒரு பில்லியன் யூரோ வரையிலான அந்நிய செலாவணியை போலந்திற்கு இந்த வர்த்தகம் பெற்றுத் தந்தது. இந்தத் தடை உத்தரவினால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவிகிதம் பாதிக்கப்படக்கூடும் என்று போலந்தின் துணைப் பிரதமர் ஜனுஸ் பிசோசின்ஸ்கி தெரிவித்துள்ளார். போலந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்

 விவசாயப் பொருட்களே 3.8 சதவிகிதத்தை அளிப்பதால் விவசாயிகள் தங்களின் வருமானத்திற்கான நஷ்ட ஈட்டை ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்டுப் பெறத் திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ரஷ்யாவின் மீதான தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் அப்பிள் படங்களை அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
.
  மற்றைய செய்திகள்

சனி, 2 ஆகஸ்ட், 2014

இரக்கமற்ற பெற்றோர்: மரணத்தின் பிடியில் குழந்தை (காணொளி, )

வாடகைத் தாய் மூலம் பெற்ற தமது பிள்ளையை, அவுஸ்திரேலிய தம்பதி ஒன்று தவிக்க விட்டுச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலிய தம்பதி ஒன்று வாடகைத் தாய் ஒன்றின் மூலம் பிள்ளையை  பெற்றெடுக்க முடிவு செய்தனர். இவர்மூலம் பிறந்த ஆரோக்கியமான பிள்ளையை எடுத்துக் கொண்டு, நோயாளிப் பிள்ளையை விட்டுச் சென்றுள்ளனர்.
தாய்லாந்தைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய பட்டாராமன் சனுபா என்ற பெண்மணியே இந்தப் பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தாய்லாந்தில் வறுமையில் வாடும் சனுபாவை,  அவுஸ்திரேலிய தம்பதியினர் தொடர்பு கொண்டு, தமது கருவை சுமக்க முடியுமா என்று கேட்டுள்ளனர். இதற்காக 16,000 டொலர்களை செலுத்தவும் இணங்கியிருக்கிறார்கள்.
இதன் பிரகாரம், அவுஸ்திரேலிய தம்பதியின் கருவைச் சுமந்த சனுபா கடந்த டிசம்பர் மாதம் இரட்டைக் குழந்தைகளை பெற்றிருக்கிறார்.
இந்தக் குழந்தைகளில் பெண் குழந்தை ஆரோக்கியமானதாக இருந்தபோதிலும், ஆண் சிசு டோவ்ன் சின்ட்ரோம் என்ற வளர்ச்சிக் குறைபாட்டு நோயால் பீடிக்கப்பட்டிருந்த விடயம் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலிய தம்பதி அதனை சனுபாவிடம் விட்டு, பெண் குழந்தையுடன் சொந்த நாட்டுக்கு சென்றுள்ளனர்.
தமது வயிற்றில் சுமந்த பிள்ளைக்கு கெமி என்று பெயர் சூட்டி கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளும் சனுபாவிற்கு இன்னொரு சோதனை. கெமியின் இருதயத்தில் துவாரம் ஏற்பட்டுள்ளதென்ற செய்தி சனுபாவின் காதில் இடியாக விழுந்தது.
கெமி உயிர்வாழ வேண்டுமானால் பாரியதொரு சத்திரசிகிச்சை செய்ய  வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமையில் வாழும் வாடகைத் தாயால் அதற்குரிய பணத்தைத் திரட்டுவது முடியாத காரியம்.
எனினும் கெமியின் அவுஸ்திரேலிய தாய் தந்தை கைவிட்டபோதிலும், பொதுமக்கள் கைவிடவில்லை.
குழந்தையின் சிகிச்சைக்காக இணையத்தின் மூலம் பிரச்சாரமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்மூலம் 60,000 டொலர்களை திரட்டிக் கொடுத்துள்ளார்கள்.

மற்றைய செய்திகள்