siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் (காணொளி)

அணு உலை நிலையங்களை வேவு பார்க்க வந்த இஸ்ரேலின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரானின் பல பகுதிகளில் அமைந்துள்ள அணு செறிவூட்டும் நிலையங்களை ஆளில்லா உளவு விமானங்களின் மூலமாக இஸ்ரேல் வேவு பார்த்தும் வருகின்றது.
இந்நிலையில், ஈரானின் நட்டன்ஸ் பகுதியில் உள்ள அணு செறிவூட்டும் நிலையத்தை நேற்று வேவு பார்த்த இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
ஈரானின் நட்டன்ஸ் அணு செறிவூட்டும் நிலையத்தை நோக்கிச் சென்ற ஆளில்லா உளவு விமானத்தை, ஈரான் இராணுவப் படைகள் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானிலுள்ள அணு உலைகளில் மின்சார உற்பத்தி மட்டுமின்றி பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களும் தயாரிக்கப்படுவதாக உலக நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரானின் அணு ஆயுதங்களை எல்லாம் பறிமுதல் செய்து அழித்து விட வேண்டும் இஸ்ரேல் கங்கணம் கட்டி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 comments:

கருத்துரையிடுக