siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 7 பிப்ரவரி, 2013

2 தினங்களே ஆன சிசுவை தாயிடமிருந்து பறித்த நோர்வே,,,

 
பிறந்து இரண்டு தினங்களே ஆன சிசுவை அதன் தாயிடமிருந்து நோர்வே சிறுவர் காப்பகம் பலவந்தமான பறித்துச் சென்ற அடாவடிச்சம்பவம் ஒன்று நோர்வேயில் இடம்பெற்றுள்ளது. புரூண்டி நாட்டைச் சேர்ந்த நோர்வேயின் டர்மென் என்ற இடத்தில் வதியும் எஸ்பெரன்ஸ் பிசிமான மற்றும் பிரிடிலே பிசிமான என்ற தம்பதியரின் பாலகனே இவ்வாறு பறித்துச்செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றும் இதே பெற்றோரின் 8 வயது சிறுவன் வளர்ப்பு வீட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்ட நிலையில் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி தம்பதியர் தமது நான்கு பிள்ளைகளுடன் நோர்வேயின் டர்மென் இல் வசித்து வந்த சந்தர்ப்பத்தில் 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி அவர்களது 13,11,08 வயதுகளையுடைய மூன்று பிள்ளைகளை நோர்வே சிறுவர் காப்பகம் பலவந்தமாக எடுத்து சென்றுள்ளது. இது இவ்வாறிருக்க இந்த தம்பதியருக்கு 05 ஆவதாக பிறந்த குழந்தையையும் இரண்டு நாட்களின் பின்னர் வைத்தியசாலையில் இருந்தவாறே தாயிடமிருற்து பலவந்தமாக பறித்து செல்லப்பட்ட துயரச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. தற்போது தமது ஐந்து பிள்ளைகளையும் நோர்வே சிறுவர் காப்பகத்திடம் பறிகொடுத்து தவிர்ப்பதாகவும் தற்போது சுமார் நான்கு மாதங்களே ஆன தமது ஐந்தாவது குழந்தையை நினைத்து மனமொடிந்து போயிருப்பதாகவும் குழந்தையின் தாயாரான பிடிலா பிசிமான தெரிவித்துள்ளார். இந்நிலையிலிருந்து எங்களது மனோநிலை எவ்வாறு இருக்கும் என்பதை மனிதாபிமானிகள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் அந்தப் பெற்றோர் கூறியுள்ளனர். இதே நோர்வே காப்பகத்தில் கவர்ந்து செல்லப்பட்ட தமது 8 வயது மகன் பாலியல் துன்புறுத்த்களுக்கு ஆளாக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்கள் தமது குழந்தைகளை மீட்டுத்தறுவதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்

ஐ.நா.சபையில் ஒலிக்கப் போகும்

இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும். ஆனால், வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதற்குத்தான் அதிகத் துணிச்சல் தேவை". பெரிய வார்த்தைகளைச் சர்வசாதாரணமாகச் சொல்கிறார் ஸ்வர்ணலஷ்மி. விரைவில் ஐ.நா.சபையில் கணீர் என ஒலிக்கப்போகிறது பார்வையற்ற இந்தத் தோழியின் குரல். சென்னை, லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் ஸ்வர்ணலஷ்மி, மாநில அளவிலான குழந்தைகள் பாராளுமன்றத்தின் பிரதமர்

துனிசியாவின் எதிர்கட்சி தலைவர் படுகொலை

மத்திய கிழக்கு நாடான துனிசியாவின் தலைநகர் டுனிஸ்ஸில் நேற்று, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சொக்ரி பெலாயிட் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துனிசியாவின் இடதுசாரி ஜனநாயக தேசப்பற்று இயக்கத்தின் செயலாளரான இவர், தனது அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த போது தலையிலும் கழுத்திலும் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இக்கொலைக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. துனீசியாவில் முன்னால் ஜனாதிபதி பென் அலி என்பவர் 2011ம் ஆண்டு தொடக்கத்தில் பதவியிறக்கப்பட்ட பின் இடம்பெற்ற முதலாவது அரசியல் படுகொலை இதுவாகும். இச்சம்பவத்தையடுத்து துனீசிய தற்போதைய ஜனாதிபதி மொன்செஃப் மார்ஷௌக்கி தனது பிரான்ஸுக்கான குறுகிய கால விஜயத்தை ரத்து செய்து நாடு திரும்பியுள்ளார்.மேலும் எகிப்துக்குச் செல்லவிருந்த தனது பயணத்தையும் கைவிட்டுள்ளார்