siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

சட்டவிரோத மது விற்பனை தண்ட வசூல் ரூ.9 லட்சம்

04.08.2012. யாழ். மாவட்டத்தில் கடந்த 7 மாத காலப்பகுதிக்குள் மட்டும் 313 பேர் சட்டவிரோத மதுசார விற்பனை மற்றும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த குற்றத் துக்காக அவர்களிடம் இருந்து 9 லட்சத்து 23 ஆயிரம் ரூபா வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோது இந்தத் தண்டம் அறவிடப்பட்டது என யாழ்.மாவட்ட மதுவரித்திணைக்களக் கட்டுப்பாட்டு அதிகாரி என்.கிருபாகரன்...

சிறுமிகளைக் கடத்த முயற்சி நிந்தவூரில் பெரும் பதற்றம்

04.08.2012. நிந்தவூரில் வைத்து வானில் கடத்தப்பட்ட பாடசாலைச் சிறுமிகள் இருவர் அம்பாறை நகரில் அமைந்துள்ள இராணுவச் சாவடிக்கு முன்னால் இறக்கிவிடப்பட்டுள்ள சம்பவத்தால் நேற்றுமுன்தினம் அப்பகுதியெங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருபவை வருமாறு: நேற்றுமுன்தினம் மாலைநேர வகுப்புக்குச் சென்ற முஜிபுர் ரகுமான் ஜெய்னப் (வயது 09), முகம்மது உவைஸ் நபீசா (வயது 09) ஆகிய இரு மாணவிகளும் வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது...

இறுதி யுத்தத்தில் தமிழர்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் சிங்களவரால் அபகரிப்பு

  04.08.2012. முல்லைத்தீவு, மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதியுத்தத்தின்போது கைவிடப்பட்ட பெருமளவு வாகனங்கள் தென்னிலங்கை சிங்கள வர்த்தகர்களால் தினசரி அபகரித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், முள்ளிவாய்க்கால் வீதி திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பெருமளவு சிங்கள வர்த்தகர்கள் சுதந்திரமாக வந்து நடமாடுவதோடு, தமிழ் மக்களால் கைவிடப்பட்ட வாகனங்களை எடுத்துச் செல்கின்றனர். இதற்கு முழுமையான ஒத்துழைப்பினை படையினர்...

14 வயது சிறுமி மீது 60 வயது தாத்தாவுக்கு மலர்ந்த காதல்

  04.08.2012.. சிறுமி ஒருவர் மீது முதியவர் ஒருவர் காதல் வயப்பட்ட சம்பவம் ஒன்று களுத்துறையில் இடம்பெற்றுள்ளது. 60 வயது முதியவர் ஒருவர் 14 வயது பாடசாலை மாணவியை காதல் என்ற பெயரில் ஏமாற்ற முற்பட்ட சம்பவம் ஒன்று களுத்துறையில் நடந்துள்ளது. இந்த முதியவர் குறித்த மாணவிக்கு சொக்லெட், பிஸ்கட் போன்றவற்றுடன் தாம் எழுதிய காதல் கடிதத்தையும் புத்தகத்தில் வைத்து கொடுத்தாக தெரிகிறது. அளுத்கம பொலிஸார் முதியவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தார்கள். களுத்துறை...

சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய விசேட உயர் நீதிமன்றம்

    04.08.2012. இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய விசேட உயர் நீதிமன்றமொன்று உருவாக்கப்பட உள்ளது. குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை விதிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தை அமைப்பதற்கு தேவையான கட்டட வசதிகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுவர் துஸ்பிரயோகச் செயல்களில் ஈடுபடும்...

மரண அறிவித்தல் >> கந்தையா சந்திரசேகரம்

...

நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்கள் குழு சென்ற வேன் விபத்து

நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்கள் குழு சென்ற வேன் விபத்து _ 03.08.2012.நேற்றிரவு நியூஸ் பெஸ்டின் ஊடகவியலாளர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.சிறிமாவே பண்டாநாயக்க மாவத்தையின் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கு முன்பாக நேற்றிரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.கடமையை நிறைவுசெய்து வீடு திரும்பும் நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்களை ஏற்றிய வேன் சுகததாஸ உள்ளக...

இருவருக்கிடையே மோதல் கத்திக் குத்தில் ஒருவர் பலி

 _ 03.08.2012.வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தினால் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தினால் அம்பேகம, பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நெரஞ்சன் மானமடுவ ௭ன்பவரே பலியாகியுள்ளதுடன், கடும் காயங்களுக்குள்ளான சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...

சட்டவிரோத வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட 11 பேர் கைது

03.08.2012.மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்டுவந்த 11பேர் மாவட்ட ஹலால் திணைக்கள உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேறிய வெல்லாவெளி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மண்டூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே நிலத்துக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 110 லீற்றர் கசிப்பு மற்றும் கோடா கசிப்பு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள்...

ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்: சீனா தொடர்ந்து முதலிடம்

03.08.2012.லண்டன் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் தொடர்ந்து சீனா முதலிடத்திலும், ஐக்கிய அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன. 17 தங்கங்கள், 9 வெள்ளிகள், 4 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று மொத்தமாக 30 பதக்கங்களைப் பெற்றுள்ள சீனா முதலாவது இடத்தில் உள்ளது.13 தங்கங்கள், 8 வெள்ளிகள், 9 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ள ஐக்கிய அமெரிக்கா மொத்தமாக 30 பதக்கங்களோடு 2ஆவது இடத்தில் உள்ளது.6 தங்கங்கள், 2 வெள்ளிகள், 4 வெண்கலப் பதக்கங்களோடு 12 பதக்கங்களைப்...

அடிப்படை வசதிகளற்ற நிலையில் முசலி சவேரியார்புரம் புதுக்குடியிருப்பு கிராம மக்கள் அவதி

_ 03.08.2012.முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சவேரியார்புரம் புதுக்குடியிருப்பு கிராம மக்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த புதன்கிழமை முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில்; இடம் பெற்ற போது அக்கிராம மக்கள் பல்வேறு பட்ட அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருவதை தமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் திரு சுனேஸ் தெரிவித்தார்.இக் கூட்டத்திற்கு முசலி பிரதேச...

தமிழ் மசாலா செய்திகள்

03.08.2012. உன்ங்களை மிகவும் மகிழ்விக்க தமிழ் மசாலாவை பாருங்கள் ...

இவர்களின் அதிரடித்தாக்குதலை நீங்கள் பார்த்துண்டா?

03.08.2012, கடல்வாழ் மீனினங்களுள் இரைதேடுவதற்காக பாரிய தாக்குதல்களை மேற்கொள்வதில் சுறாக்களுக்கு நிகர் சுறாக்களே. இவற்றின் கொடூரமான தாக்குதலில் பாரிய படகுகளும் சிக்கி சின்னாபின்னமாகிவிடும். இவ்வாறு பெரியதொரு மீனை சுறா ஒன்று தனது அதிரடித்தாக்குதல் மூலம் வேட்டையாடுவதை ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று மிகவும் அற்புதமான முறையில் காணொளிப் படம் பிடித்துள்ளனர். ...

மீன் பிடிப்பதற்கு இப்படியெல்லாமா யோசிப்பார்கள்!

  03.08.2012. வெடிகுண்டு போட்டு மீன் பிடிப்பது ஆபத்தான காரியம் தான். அதற்காக போடத் தெரியாதவர்கள் வெடிகுண்டு போட்டு மீன்பிடித்தால் இப்படித்தான் இருக்கும். ...

பசுவின் இரத்தத்தை நீங்கள் குடித்ததுண்டா?

.   03.08.2012. ஆப்பிரிக்காவில் வாழ்கின்ற பழங்குடி மக்களில் ஒரு வகுப்பினர் பசுவின் இரத்தம் உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும் என்று விசுவாசித்து அதனைக் குடிக்கின்றனர். உடல் வலிமையை அதிகரிக்க சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் இது அருமையான உணவு எனவும் நம்புகின்றார்கள். பசுவின் கழுத்துப் பகுதியில் இரத்த நாளத்தில் அம்பு மூலம் துளை இட்டு இரத்தத்தை எடுக்கின்றனர். எந்த பசுவிடம் இருந்து இரத்தத்தை பெறுகின்றனரோ அதே பசுவின் பாலுடன் கலந்து குடிக்கின்றார்கள். ஆயினும்...

உலகின் பிரசித்தி வாய்ந்த புனிதத் தலங்கள்

  03.08.2012. பொதுவாக சமயத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மேலும் சமய தலங்கள் பலவிதமான அற்புதங்களுடனும், அழகாகவும் காணப்படும். அவ்வாறு உலகிலேயே அதிக பிரசித்தி வாய்ந்த புனிதத் தலங்களின் தொகுப்பினைப் படத்தில் காணலாம். Back to Home...

இலங்கை விமானப் படையினரோடு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டிய பிரித்தானிய பாராளுமன்ற குழு

  வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, யாழ். வந்த பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் விமானப் படையினரோடு நின்று புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தது யாழ். மக்களிடம் கடும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று யாழ்ப்பாணம் வந்த குழுவினர், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் உலங்குவானுர்தியில் வந்திறங்கியபோது தம்மை அழைத்து வந்த விமானப்படையினரோடு நின்று புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டியிருந்தனர். இவர்களில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள்...

சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்: மக்கள் ஆதரவு அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, லண்டனில் இன்று பன்னிரண்டாவது நாளாக உண்ணாநிலைப் போராடத்தில் ஈடுபட்டுவரும் கோபி சிவந்தனுக்கு தமது ஆதரவினை வழங்குவதற்காக, அவர் அமர்ந்திருக்கும் ஸ்ரற்போர்ட் தொடரூந்து நிலையத்திற்கு அருகில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்தனர். சைவ, கத்தோலிக்க மதகுருமார்களும் சிவந்தனை சந்தித்து அவருக்கு ஆசி வழங்கினர். சிவந்தனின் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரற்போர்ட் பிரதான...

இலங்கைக்கு தலையிடியாக இருக்கும் இணையத்தளங்களை முடக்கும் முயற்சியில் கோத்தபாய?

வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, இலங்கை அரசாங்கத்திற்கு தலைவலியாக இருக்கும் இணையத்தளங்களை தடுக்கும் முயற்சியை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருவதாக லங்கா நியூஸ்வெப் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் சில இணையத்தளங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தலையிடியாக இருப்பதாகவும் இவற்றை முடக்குவதற்காக பாதுகாப்புச் செயலரின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெளிநாடுகளில் இருந்து...

இலங்கைப் பணிப் பெண்ணின் மார்பகத்தில் ஊசி குத்தி கொடுமை செய்த அவலம்

இலங்கைப் பணிப் பெண்ணின் மார்பகத்தில் ஊசி குத்தி கொடுமை செய்த அவலம் வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, இலங்கைப் பெண்ணொருவர், குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றச் சென்ற வேளை, அங்குள்ள இலங்கைப் பெண்ணொருவராலும் வேலைவாய்ப்பு முகவராலும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பெண்ணின் மார்பகத்தில் ஊசிகள் குத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பிள்ளையின்...

இனவாதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது: தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

 வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, இனவாதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது என தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இனவாத அடிப்படையில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது. 30 ஆண்டு யுத்தத்தின் பின்னர் நாட்டில் தற்போது அமைதி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் நிலைமையில் மீளவும் இனவாதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது. கடந்த கால அனுபவங்களை பாடமாகக் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானது. அரசியல்...

காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய முதலமைச்சரே கிழக்கிற்கு தேவை: சம்பந்தன்

வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய முதலமைச்சரே கிழக்கிற்கு தேவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மாகாணசபை முறைமையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானதல்ல. ஆளுனருக்கே கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 60 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வநாயகம் உரிமை போராட்டத்தை ஆரம்பித்தார். மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் இளைஞர்களின்...