siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

இலங்கை விமானப் படையினரோடு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டிய பிரித்தானிய பாராளுமன்ற குழு

 
வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012,
யாழ். வந்த பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் விமானப் படையினரோடு நின்று புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தது யாழ். மக்களிடம் கடும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று யாழ்ப்பாணம் வந்த குழுவினர், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் உலங்குவானுர்தியில் வந்திறங்கியபோது தம்மை அழைத்து வந்த விமானப்படையினரோடு நின்று புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டியிருந்தனர்.
இவர்களில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் விமானப் படையினரோடு மாறிமாறி நின்று புகைப்படம் எடுத்ததை மைதானத்திற்கு வெளியே நின்றிருந்த பொது மக்கள் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

0 comments:

கருத்துரையிடுக