siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்: மக்கள் ஆதரவு அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012,
லண்டனில் இன்று பன்னிரண்டாவது நாளாக உண்ணாநிலைப் போராடத்தில் ஈடுபட்டுவரும் கோபி சிவந்தனுக்கு தமது ஆதரவினை வழங்குவதற்காக, அவர் அமர்ந்திருக்கும் ஸ்ரற்போர்ட் தொடரூந்து நிலையத்திற்கு அருகில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்தனர்.
சைவ, கத்தோலிக்க மதகுருமார்களும் சிவந்தனை சந்தித்து அவருக்கு ஆசி வழங்கினர். சிவந்தனின் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரற்போர்ட் பிரதான தொடரூந்து நிலையப் பகுதியில் பரவலாக விநியோகிகப்பட்டதுடன், அவற்றை ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டவர்களுக்கு அது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
சோர்வடைந்துள்ள நிலையில் காணப்படும் சிவந்தனின் இரத்த அழுத்தம் வீழ்ச்சியடைந்து காணப்படுவதாக, அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர் திருமதி. சசிகலா இராஜமனோகரன் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அதிகரித்த மக்கள் ஆதரவு அவரை தொடர்ந்து உறுதியுடன் போராடுவதற்கான மனோபலத்தை கொடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது

0 comments:

கருத்துரையிடுக