siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 28 நவம்பர், 2012

பாட்டு கேட்டு கொண்டிருந்த கறுப்பின வாலிபர் சுட்டுக் கொலை??

பாட்டை சத்தமாக வைத்து கேட்டு கொண்டிருந்த கறுப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில் நகரில் ஷாப்பிங் செய்ய மைக்கேல் டன்(வயது 45) என்ற தொழிலதிபர் தன் மனைவியுடன் வந்திருந்தார். அப்போது அதிகளவு சத்தம் போட்டு கொண்டு கறுப்பின வாலிபர்கள் சிலர் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தனர். உடனே சத்தத்தை குறைக்கும் படி கூறினார், ஆனால் அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். கோபமடைந்த வாலிபர்...

பொருளாதாரம் திடீரென சரிவடையலாம்: OECD நிறுவனம் எச்சரிக்கை

  கனடாவின் பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் உள்ள போதிலும், சில பின்னடைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக OECD என்ற சர்வதேச நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பான OECD சர்வதேச அளவிலான பொருளாதார நிலையை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, கனடாவுக்கு அதிர்ச்சியூட்டும் பொருளாதார தாக்குதல்கள் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டில் இருந்தும் உண்டாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும்...

வடகொரியாவின் இளம் தலைவர் தான் உலகிலேயே செக்ஸியான மனிதர்: ?

உருண்டை முகத்துடன் இருக்கும் வடகொரியாவின் இளம் தலைவர் கிம் ஜாங் தான் உலகிலேயே செக்ஸியான மனிதர் என்று சீன நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் தான் இந்த ஆண்டின் செக்ஸியான மனிதர் என அமெரிக்காவின் “The Onion" அறிவித்துள்ளதாக சீனாவை சேர்ந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இளமையானவர், அழகானவர், உருண்டை முகம் கொண்டவர், துடிப்பானவர், உறுதியானவர்.. என எல்லா பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக கிம் ஜாங் விளங்குகிறார்...

இந்தோனேஷியாவில் கடுமையான நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின

இந்தோனேஷியாவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 56 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் கடலோர பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின, சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. டுவால் நகரில் இருந்து 157 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கடியில் 12 கிலோ மீற்றர்...

கார்த்திகை விளக்கீட்டை அனுஷ்டிப்பதற்கு இந்துக்களுக்கு தடை!

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் இந்துக்கள் இம்முறை கார்த்திகை தீபமேற்றல் மற்றும் ஆலய பூசை வழிபாடுகளில் பாதுகாப்பு தரப்பிலிருந்து தலையீடுகளையும் தடைகளையும் எதிர்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமாகிய நவம்பர் மாதம் 27ம் திகதியன்றே இம்முறை குமாராலய தீபமும் வருவதால்தான் இந்த தலையீட்டையும் தடைகளையும் இந்துக்கள் எதிர்நோக்குவதாக அவர்...