siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 28 நவம்பர், 2012

பாட்டு கேட்டு கொண்டிருந்த கறுப்பின வாலிபர் சுட்டுக் கொலை??

பாட்டை சத்தமாக வைத்து கேட்டு கொண்டிருந்த கறுப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில் நகரில் ஷாப்பிங் செய்ய மைக்கேல் டன்(வயது 45) என்ற தொழிலதிபர் தன் மனைவியுடன் வந்திருந்தார்.
அப்போது அதிகளவு சத்தம் போட்டு கொண்டு கறுப்பின வாலிபர்கள் சிலர் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தனர்.
உடனே சத்தத்தை குறைக்கும் படி கூறினார், ஆனால் அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர்.
கோபமடைந்த வாலிபர் ஒருவர் துப்பாக்கியை எடுக்கவே, இதை பார்த்த டன் துப்பாக்கியை பிடுங்கி சரமாரியாக வாலிபரை நோக்கி 10 முறை சுட்டார்.
இதில் அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சம்பவத்துக்கு பிறகு டன் அங்கிருந்து தப்பி சென்றார். ஆனால் கண்காணிப்பு கமெரா மூலம் அவரை பொலிசார் பிடித்தனர்.
இறந்த வாலிபர் டேவிஸ் என்பதும், கைது செய்யப்பட்ட டன் வெள்ளை இனத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக