siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 29 செப்டம்பர், 2012

அநாதைகள் போல விடப்பட்டுள்ளோம்

29.09.2012.By.Rajah. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை முல்லைத்தீவு அரச அதிபர் கூறுவது பொய் சூரியபுரம் காட்டில் உள்ள மக்கள் குமுறல்அநாதைகள் போல காட்டுப் பகுதிக்குள் சுடலைக்குள் தள்ளிவிட்டு இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. அவ்வாறு இருக்கும் போது அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் கூறியிருப்பது வேதனைக் குரியது. அவர் கூறுவதில் உண்மை இல்லை.
இவ்வாறு தமது உளக் குமுறலை வெளியிட்டுள் ளனர் சூரியபுரம் காட்டுப் பகுதியில் தங்கவைக்கப் பட்டுள்ள மக்கள். மனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருந்து அழைத்து வரப்பட்டு கேப்பாபிலவுக் கிராமத்தைச் சேர்ந்த 110 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் சூரியபுரம் காட்டுப்பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் இந்த மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக சூரிய புரம் பகுதியிலுள்ள மக்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் தமது ஆதங்கத்தை வெளியிட்டனர். சூரியபுரத்தில் தங்கியுள்ள குடும்பஸ்தர் ஒருவர் இது குறித்து தெரிவித்ததாவது
முகாமிலிருந்து எங்களை மந்தைகள் போல் ஏற்றிவந்து இந்த காட்டுப் பகுதியில் அநாதரவாக விட்டுள்ளனர். எமக்கு தற்காலிக வீடுகள் அமைப்பதற்கு தடி தண்டுகளோ ஏனைய வசதிகளோ வழங்கப்படவில்லை.
முகாமில் இருந்து கொண்டு வந்த தடிகளைப் பயன்படுத்தி தறப்பாள்களை கட்டி அதற்குள் பலத்த சிரமத்தின் மத்தியில் வாழ்கின்றோம்.
மின்சாரம் இல்லை. அதேவேளை விளக்குகளும் இல்லை. வெறும் மண்ணெண்ணெய் மட்டும் வழங்குகின்றனர். இதனை வைத்து நாம் என்ன செய்வது. குடிதண்ணீர் வசதியில்லை. மலசலகூட வசதி செய்து தரப்படவில்லை. இளம் பெண்கள் ஊட்பட இயற்கைக் கடன்களைக் கழிப்தற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
தற்போது பெய்து வரும் மழையால் உடமைகள் நனைந்து விடுகின்றன. நாம் இங்கு கொண்டு வந்துவிடப்பட்டு நான்கு நாள்கள் கடந்த நிலையிலும் எந்த ஒரு அரச அதிகாரிகளும் எம்மை வந்து பார்க்கவில்லை. இவ்வாறு இருக்கையில் எமக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வேடிக்கையானது என்றனர்.
இது தொடர்பாக அங்குள்ள இளம் குடும்பப் பெண் ஒருவர் தெரிவிக்கையில்
நாம் காட்டுப் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்கின்றோம். எனது வீட்டுக்குப் பின்புறம் பெரும் காடு. அப் பகுதியில் இரவு பகல் என்று பாராது இராணுவத்தினர் வந்த வண்ணம் உள்ளனர்.
தனிமையில் இருக்க முடியவில்லை. அடிக்கடி இராணுவப் புலனாய்வாளர்கள் சுற்றிச் சுற்றி வருகின்றனர். எமது வீடுகள் தூரத் தூர இருப்பதால் தனிமையில் இருக்கும் போது எனன் நடைபெறுமோ தெரியாது அச்சமாக உள்ளது. இதேவேளை ஒழுங்கான வீடு இல்லாத காரணத்தால் வீட்டுப் பொருள்களைப் பாதுகாக்க முடியாதுள்ளது. என்றார்

அரசியல் தீர்வு ஒன்றை எட்ட தமிழருக்கு சர்வதேச ஆதரவு; அரசு இனியும் தட்டிக் கழிக்க முடியாது என்கிறார் சம்பந்தன்

29.09.2012.By.Rajah.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதன் முறையாக மாகாண சபைக்கு வந்திருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு நிலையான அரசியல் தீர்வை எட்டுவ தற்காக சர்வதேசத்தின் ஆதரவும் பங் களிப்பும் எமக்குக் கிடைத்திருக்கிறது. ஆகவே தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டிய தேவை இப்போது அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அதில் சர்வதேச மும் உறுதியாக உள்ளது. நீதியை நியாயத்தை உருவாக்காமல் அரசு இனியும் தட்டிக் கழிக்க முடியாது. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
கிழக்குமாகாண சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் நேற்றுத் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சபைக்குத் தெரிவான 11 உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்துகையிலேயே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவித்தவை வருமாறு:
நாம் ஒரு தனித் தேசிய இனம். எமக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கின்றது. நாம் சரித்திர ரீதியாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வந்திருக்கின்றோம். எம்முடன் இஸ்லாமிய சகோதரர்களும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இன்றும் நாம் பெரும்பான்மையுடன்தான் இருக்கின்றோம்.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இந்நிகழ்வை நான் கருதுகின்றேன். இம்முறை நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டோம். நாங்கள் மாகாணசபையை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
தவறானவர்களின் கையில் மாகாணசபை நிர்வாகம் இருக்கக்கூடாது. கடந்தமுறை போன்ற நிலைமை தமிழ் மக்களுக்கு இம்முறையும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டோம்.
ஆட்சி அமைக்கக்கூடிய அதிகாரம் கிடைக்கவில்லையென்றாலும் மாகாணசபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட 12 தமிழ் உறுப்பினர்களில் 11 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தெரிவுசெய்யப்பட்டிருப்பரென்பது சாதாரண விடயமோ அல்லது இலகுவான விடயமோ அல்ல.
கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நிற்கின்றார்கள். கொள்கை ரீதியாக தமிழ் மக்கள் இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். முழுமையான வெற்றியைப் பெறுவதற்கு இன்னும் 6 ஆயிரம் வாக்குகளே தேவைப்பட்டன. அதை 3 மாவட்டத்திலிருந்தும் பெற்றிருக்கலாம். ஆனால், மக்கள் முழுமையான பங்களிப்பைச் செய்தார்கள். எமது மக்களுடைய ஜனநாயகத் தீர்ப்பை அரசும், உலக நாடுகளும் மதிப்பளிக்க வேண்டியிருக்கின்றது.
எமது மக்களுடைய தீர்ப்பைப் புறந்தள்ள முடியாது. தெரிவுசெய்யப்பட்ட 11 பேரும் நிதானமாகச் செயற்படவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு அரசு பல முயற்சிகளைச் செய்தது. ஆனால், அது பலிக்கவில்லை. ஏனைய அரசியல் கட்சிகளை அவர்கள் உடைத்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எவராலும் உடைக்கமுடியாது. நாங்கள் ஒற்றுமையாக எமது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு இணங்க செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டில் சர்வதேசம் எங்களை அங்கீகரித்துள்ளது. தமிழ் மக்களின் நம்பிக்கையின் பிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அரசின் பல்வேறு திட்டங்களால் எமது இனப் பரம்பல் சிதைக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் குடிப்பரம்பலை இனப் பரம்பலை செய்யக்கூடாது என்று கேட்கின்றோம். இந்நிலையால்தான் எங்களது கலாசாரம் சிதைக்கப்படுகின்றது. எமது பிரதிநிதித்துவம் குறைவடைகின்றது. நாம் அரசியல் தீர்வில் உறுதியாக இருக்கின்றோம்.
நாடு பிரிக்கப்படவேண்டும் என்று கேட்கவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுதந்திரமாக நிம்மதியாக சொந்த இடத்தில் உரிமையுடன் வாழவேண்டும் என்ற உறுதியான முடிவை எமது மக்கள் கூறியிருக்கின்றார்கள். அரசுடன் நாம் ஒத்துழைத்துச் செயற்படத் தயாராக இருக்கின்றோம். எமது மக்களுடைய உரிமைகள் தட்டிக்கழிக்கப்படுமாயின், சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பிக்க நாம் ஒருபோதும் பின்நிற்கமாட்டோம் என்றார்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை, பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்

நீதானே என் பொன்வசந்தம்:

என்னோட வா வா பாடல் வரிகள் தமிழில்.29.09.2012.By.Rajah.
நீதானே என் பொன்வசந்தம் திரைப்பட பாடல் என்னோட வா வா வரிகள் தமிழில். நீதானே என் பொன்வசந்தம் திரைப்பட பாடல் வரிகள் தமிழில்

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
நீ என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்
கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்கி
நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பார்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவதை போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கதானடி
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும்
தீயாக பார்காதடி….
சின்ன பிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி சொல்ல
கேட்டு கொண்டால் கழுகும் பயந்து நடுங்கும்
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்
காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைகணமே
காதல் அதை பொறுக்கண்ணுமே இல்லையெனில்
கட்டி வைத்து உதைகணுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டும்மடி
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

நகைச்சுவை வீடியோ (Funny Video)

29.09.2012.By.Rajah.உலகப்புகழ் பெற்ற நகைச்சுவை இடைவிடாமல் சிரிப்பதற்காக உலகப்புகழ் பெற்ற நகைச்சுவை</

நயாகரா நதியின் இயற்கை அழகு[காணொளி],

29.09.2012.By.Rajahநயாகரா நதியின் இயற்கை அழகை ரசிக்கலாம் வாங்க – .இயற்கையின் உன்னத படைப்பான நயாகரா நதியின் இயற்கை அழகை வீட்டிலிருந்தபடியே ரசிக்கலாம் வாங்க

தென் ஆப்ரிக்க Vs பாகிஸ்தான் {போட்டி வீடியோ }

29.09.2012.By.Rajah.20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தென் ஆப்ரிக்க Vs பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி வீடியோ

காற்றைக் கொஞ்சம் பாடல் வரிகள் தமிழில்

 

29.09.2012.By.Rajah.நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் காற்றைக் கொஞ்சம் பாடல் வரிகள் தமிழில். நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் பாடல் வரிகள் தமிழில்

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..
நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்.
நெஞ்சில் பார்த்து பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்.
தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும் ஒரு ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி..
தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் என்றும் தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி…
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா.
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்.. ஹே ஹே ஹே…
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..
நேற்று எந்தன் கன்வில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே…
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே..
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில் எந்ந மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு எண்ணம் ஓடும் தறிகெட்டு..
இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி
என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே..
மீட்டதோது மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்…
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

உலகிலேயே மிகபெரிய நாய் – கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்

29.092012.By.Rajah.
 

வியக்க வைக்கும் குகையின் புகைப்படங்கள் – ஆச்சரியம்

amazing cave photos 1

       

மனித உரிமை மாநாட்டில் நிச்சயம் இலங்கைக்கு





Saturday 29 September 2012.By.Rajah.௭திராக கடும் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்!வசந்த பண்டார   இலங்கைக்கு அண்மையில் விஜயத்தை மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் ஹெனி மெகாலி தலைமையிலான குழு வரும் 2013 மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் நிச்சயம் இலங்கைக்கு ௭திராக கடும் தொனியிலான அறிக்கையை சமர்ப்பிக்கும் ௭ன்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு ௭திராக பிரேரணை கொண்டு வரப்படுமானால் அதற்கான முழுப் பொறுப்பையும் வெளிவிவகார அமைச்சர் ஜீ. ௭ல். பீரிஸே ஏற்றுக்கொள்ள வேண்டும் அத்துடன், ஐ.நா. வில் இலங்கையை ஆதரித்த நாடுகளை அரசாங்கம் நட்டாற்றில் விட்டுவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெளிவுபடுத்துகையில்,
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார்.
இலங்கைக்கு ௭திராக பிரேரணை முன் வைக்கப்பட்டிருக்கும் இவ்வாறானதோர் பிரேரணையூடாக யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைகளுக்கான கடும் அழுத்தத்தை பிரயோகிப்பதே மேற்கத்திய நாடுகளின் திட்டமாகவிருந்தது.
இவ்வாறானதோர் சூழ் நிலையிலேயே ஜனாதிபதி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொண்டார்.
ஆனால் இலங்கைக்கு அண்மையில் விஜயத்தை மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் தொழில்நுட்பக் குழுவான ஹெனி மெகாலி தலைமையிலான குழு ௭திர்வரும் 2013 மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் நிச்சயம் இலங்கைக்கு ௭திராக கடும் தொனியிலான அறிக்கையை சமர்ப்பிக்கும்.
இதன் பின்னர் இலங்கை தொடர்பான யுத்தக் குற்றங்களுக்கான சர்வதேச புலன் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு அக்குழு இங்கு வரும் சாத்தியங்களும் உள்ளன.
அத்தோடு அவ்வாறான புலன் விசாரணைக்குழு இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளாது விசாரணைகளை நடத்தக் கூடிய அதிகாரமும் உள்ளது.
இதுவே நாம் ௭திர்நோக்கியிருக்கும் பயங்கரமான நிலைமையாகும்.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு ௭திராக அமெரிக்கா பிரேரணையை கொண்டு வந்தபோது ௭மக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டோம்.
அப்போது 13 நாடுகள் அமெரிக்காவின் பிரேரணையை ௭திர்த்து ௭மக்கு ஆதரவு வழங்கியது. அமெரிக்காவின் பிரேரணையை ௭திர்த்தே ஆதரவு கேட்டோம். ஆனால் இன்று ௭ன்ன நடந்துள்ளது ௭ன்று கேள்வி ௭ழுப்பினார்.

கிளிநொச்சியில் வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு!


Saturday29September2012.By.Rajah.கிளிநொச்சி-கொக்காவில் பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது கனரக வாகனம் மோதியதில் மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்வம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த தம்பிராசா எழில்வேந்தன்(வயது19) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். வாகனங்களை மறித்து விட்டுக் கொண்டிருந்த சமயம் பின்னால் வந்த பக்கோ கனரக வாகனம் இளைஞரின் மீது மோதி அவர் மீது ஏறியுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். தற்போது இவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணை களை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை வீதிப்புனரமைப்பினால் இடம்பெற்ற 4வது விபத்துச்சம்பவமும், உயிரிழப்புச் சம்பவமும் இதுவாகும், இதற்குக் காரணம் வீதிப்புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள் ள தென்னிலங்கை நிறுவனங்கள் போதியளவு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்வதில்லை.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து பொலிஸாரும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் கூட நடவடிக்கை எடுப்பதில்லை, கண்டுகொள்வதுமில்லை என்பது இங்கு குறிப்பிடத்ததக்க விடயமாகும்.

கணவன் மனைவிக்கு இடையில் சண்டை குழந்தை அடித்துக் கொலை


Saturday29September2012.By.Rajah.இரண்டு வயது மற்றும் 2 மாதம் நிரம்பிய குழந்தையை தாக்கி கொலை செய்த சந்தேகத்தில் கணவன் - மனைவி ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகலெவ - வீரகொல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் இக்கொலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த குழந்தையை அதன் தந்தை கற்குகை ஒன்றுக்குள் மறைத்து வைத்துள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து குழந்தையை பெற்றுத் தருமாறு தாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து குழந்தை கொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் குருநாகல் சட்ட வைத்திய அதிகாரி காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மீகலெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

யாழில் கொள்ளைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளது!


Saturday29September.By.Rajah.யாழ்ப்பாணத்தில் சென்ற வாரத்தில் மட்டும் 56 கொள்ளைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுண்டுக்குழிப் பகுதியில் கடை உடைக்கப்பட்டு 17,200 பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன,
டக்கா வீதியிலுள்ள கடை ஒன்றில் 21,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன, சுன்னாகம் குப்பிளான் கிழக்கு பகுதியில் வீட உடைக்கப்பட்டு 2,77,500 பெறுமதியான வீட்டுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன, சாவகச்சேரியில் முத்துக்குரார் கடை உடைக்கப்பட்டு நிறப்பூச்சு திருடப்பட்டுள்ளது.
கைதடி தொழில் பயிற்சி நிலையத்திலுள்ள கணினி உதிரிபாகங்கள் கொள்ளயிடப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரப்பகுதியில் பட்டப்பகலில் கடை உடைக்கப்பட்டு 12,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியில் சென்று கொண்டு இருந்த பெண்ணின் தங்கச்சங்கிலி மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத நபர்களினால் அறுத்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 55,000 ரூபா என முறையிடப்பட்டுள்ளது.
கோப்பாய் பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த கொள்ளையர் குழு வீட்டைத் தீவைத்து கொழுத்திவிட்டு வீட்டில் உள்ள மோட்டார் சைக்கிள்களைத் திருடிச் சென்றுள்ளது. இச் சம்பவதுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டு யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் கவனிக்கப்படவில்லை: ஐ.நா சபையில் கரன் பார்கர் அம்மையார்!


Saturday29September2012.By.Rajah.இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கும் விடுதலை புலிகளுக்கும் எதிராக சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாரியளவிலான மனித உரிமைச் சட்ட மீறல்கள் பயனுள்ள முறையில் இன்னமும் கவனிக்கப்படாமல் உள்ளதென்பதனை ஐ.நா மனித உரிமைச்சபையோருக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என மனித உரிமை பேராளர் கரன் பார்கர் அம்மையார் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்துள்ள ஜெனீவா- ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 21வது கூட்டத் தொடரில் உரையாற்றும்போதே அவர் இக்கூற்றினைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான நீதியினைக் கோரி ஐ.நா மனித உரிமைச் சபையில் அவர் ஆற்றிய உரையில், எங்களின் பார்வையில் சிறிலங்கா அரசின் முயற்சிகள்
உண்மையை கண்டறிதல், நீதி வழங்கல், நட்ட ஈடு வழங்கல், மேலும் இவை நடக்காதவாறு செய்தல் ஆகிய விடயங்களிலும் போதாமையாக உள்ளதோடு உண்மையை கண்டறிவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் அது ஆபத்தானதாகும் என ஐ.நா மனித உரிமைச் சபையோருக்கு எடுத்துரைத்துள்ளார்.
இலங்கைத்தீவில் 100 000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உயிர் இழந்ததை சிறிலங்கா அரசாங்கம் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனைச் சுட்டிக்காட்டிய கரன் பார்கர், “சிங்கள வெற்றிப் பெருமிதம்” என்று ஐ.நா பொதுச் செயலரின் நிபுணர் குழுவினர் கூறியதைப் நினைவில் கொள்ளும் போது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் உண்மை, நீதி, நட்ட ஈடு, தீர்வு என்பன கிடைக்கப் போவதில்லை என்ற அச்சத்தினையும் ஐ.நா மனித உரிமைச் சபையோருக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைச்சபையின் சிறப்பு கண்காணிப்பாளர்களை சிறிலங்காவுக்கு விரைவில் செல்ல ஐ.நா அனுமதி கோரும் என நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.
கரன் பார்கர் அம்மையார், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வளஅறிஞர் குழுவின் பிரதிநிதியாகவும் நா.த.அரசாங்கத்தின் மதியூரைஞர் குழுவின் பிரதிநிதியாகவும் உள்ளார்.