siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 22 ஆகஸ்ட், 2012

தான் அழைத்தால் நித்தியானந்தா யாழ்ப்பாணம் வந்து நிச்சயம் தங்குவார் – கணவரைப் பிரிந்த யாழ் பெண்

22.08.2012.வலிகாமம் பகுதியில் நித்தியானந்தாவுக்கு ஆசிரமம் திறப்பதற்கு பெண் ஒருவர் அதீத முயற்சிகளில் ஈடுபடுவதாக் தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த குறிப்பிட்ட பெண் வெளிநாட்டில் தனது கணவருடன் முரன்பட்டு விட்டு இந்தியா சென்றதாகத் தெரியவருகிறது. இதன் பின்னர் சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணம் வந்த குறிப்பிட்ட பெண் தனது வீட்டில் குடியிருந்த தனது அண்ணனை குடும்பத்துடன் துரத்தி விட்டு தற்போது அந்த வீட்டை பெருமளவு பணம் செலவு செய்து திருத்தி...

லண்டன் குருக்களின் ரவுடித்தனம்!

22.08.2012.லண்டனில் உள்ள ஒரு பெயர்போன கோவிலில், சாப்பாடு கேட்டுச் சென்ற தமிழன் ஒருவனைத் தாக்கி வெளியே கொண்டு வந்துபோட்டுள்ளனர் நிர்வாகத்தில் இருக்கும் சிலர். இதற்கு அக்கோயிலில் உள்ள குருக்களும் துணைபோன சம்பவம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை(17) இடம்பெற்றுள்ளது. அட பேர்போன கோயில் என்று ஏன் எழுதவேனும் ? அது ஈலிங் அம்மன் கோவில் தான் ! அடிவாங்கிய இளைஞன் கோமா நிலையில் உள்ளார், கோவில் சீல் வைக்கப்பட்டது ! சுமார் 11 பேர்கைதாகி பின்னர் விடுதலையானார்கள் ! அப்ப...

தலவில புனித அன்னம்மாள் தேவாலயத்தில் உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவின் திருச் சொருபம் ஸ்தாபிப்பு

22.08.2012அதி வணக்கத்திற்குரிய 16ஆவது ஆசிர்வாதப்பரின் ஆலோசனைக்கிணங்க தலவில புனித அன்னம்மாள் புனிதத்தலத்தில் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் திருச் சொருபம் ஒன்று அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவினால் வழங்கப்பட்டது. இந்த திருச்சொருபமானது, சமீபத்தில் கொண்டாடப்பட்ட தலவில ஆலயத்தின் 250வது ஆண்டு பூர்த்தி விழாவின் போது சிலாபம் ஆயர் அதி வண. வெலன்ஸ் மென்டிஸ் மற்றும் குறித்த ஆலயத்தின் தந்தை அதி வண. லூக் நெல்ஸன் ஆகியோரால் ஆசிர்வதிக்கப்பட்டு,...

நூதனசாலை திருட்டு: மேலும் ஒருவர் மாணிக்கம் பதித்த தங்க மோதிரத்துடன் கைது

22.08.2012.கொழும்பு தேசிய நூதனசாலையில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க சில பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மாளிகாவத்தைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து நூதனசாலையிலிருந்து திருடப்பட்ட மாணிக்கம் பதிக்கப்பட்ட தங்க மோதிரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.மார்ச் 16ஆம் திகதி நள்ளிரவன்று நூற்றாண்டுகள் பழமையான வாள்களும் நாணயங்களும் அடங்கலாக...

புதிய சாதனை படைத்துள்ள ஏக் தா டைகர்

22.08.2012. சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் சுதந்திர தினத்தன்று வெளியானது. படம் வெளியான வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூலாகியுள்ளது. 5 நாட்களில் ஒரு இந்தியப் படத்திற்கு ரூ.100 கோடி வசூலானது இது தான் முதன் முறை. இதன் மூலம் வசூலில் ஏக் தா டைகர் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக சல்மானின் தபாங்(ரூ.147 கோடி), ரெடி(ரூ.122...

காதல் ஜோடியின் கசப்பான அனுபங்களே “கபடம்”

22.08.2012. நாகரீக காதல் ஜோடியின் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களை விளக்கி கூறும் படமே கபடம். ராதா மோகன், சிம்பு தேவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஜோதி முருகன். இவர் இயக்கும் படம் கபடம். இதுபற்றி அவர் கூறுகையில், நவீன நாகரிகம் என்ற பெயரில் இன்றைய சமுதாயம், மனிதனின் உடல், மனம் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த கதை அலசுகிறது. நாகரிகத்தில் திளைக்கும் இளைஞனுக்கும், இளம் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. திருமணம் செய்து...

நயன் தான் என்னுடைய பெஸ்ட் பிரண்ட்: ஆர்யா

22.08.2012. என்னைப் பொறுத்த வரை, நயன்தாரா எனக்கு நல்ல தோழி என்று கூறியுள்ளார் ஆர்யா. இது குறித்து ஆர்யா கூறுகையில், பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடித்த போது தான் நயன்தாரா ஒரு நல்ல நடிகை என்பதை தெரிந்து கொண்டேன். அந்த படத்தில் இருந்து தான் எங்களுக்கிடையே நல்ல நட்பும் உருவானது. இப்போது வரை சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை இருவருமே பகிர்ந்து கொண்டு வருகிறோம் என்றார். மேலும் நயன்தாராவுக்கு நீங்கள் சிபாரிசு செய்வதாக கூறப்படுகிறதே... நிஜம்தானா?...

பயண எச்சரிக்கையில் மாற்றம் செய்க: பிரித்தானியாவிடம் பீரிஸ் கோரிக்கை

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012,பிரித்தானிய பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் விடுத்த பயண எச்சரிக்கை தொடர்பாக பிரித்தானிய உயர் ஸ்தானிகரை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கலந்துரையாடியுள்ளார். இவ்விடயம் குறித்து கலந்துரையாடிய அமைச்சர், வடபகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு ஏற்ப மேற்படி பயண எச்சரிக்கையில் மாற்றம் செய்யுமாறு கோரினார். நாட்டில் ஸ்திரத்தன்மையும் பாதுகாப்பும் ஏற்பட்டுள்ள நிலையில் மேற்படி...

“சீனா டவுன்“ இலங்கைக்கு வருகிறது!

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012மலேசியா,சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளில் செயற்படும் “சீனா டவுன்” (China Town) என்ற இரவுச்சந்தை அம்பாந்தோட்டைப் பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இச்சந்தை, தினமும் காலை 9 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை திறந்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆயிரம் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்கள் தங்கள் தயாரிப்புக்கள் மற்றும் சாதனங்களை இந்த...

தாய்மார்கள் பணிப்பெண்களாக வெளிநாடு செல்லத் தடை

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012, 18 வயதுக்கு கீழ் பிள்ளைகள் இருக்கும் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வதைத் தடுக்கும் வகையில் விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் ௭ன்று அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஐ. தே. க.வின் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் ௭ழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிறுவர்களின் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான...

வெள்ளவத்தை மூவர் படுகொலை! சந்தேகநபர் தற்கொலை செய்யப்போவதாக மின்னஞ்சல் மூலம் தகவல்!

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012,வெள்ளவத்தை இராமகிருஷ்ண டெரஸ் பகுதியில் இடம்பெற்ற மர்ம மரணங்கள் தொடர்பில் இதுவரையில் 25இற்கும் மேற்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 18 இலட்ச ரூபாவிற்கும் அதிகமாக கடன் பெற்றிருப்பதாகவும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த மர்மங்கள் தொடர்பிலான விசாரணைகள் பற்றி தொடர்புகொண்டு கேட்டபோதே பொலிஸார்...

சுன்னாகம் பிரதேசசபை புதிய கட்டிடத்திற்கு விஷமிகளால் கழிவு ஒயில் அபிஷேகம்

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012,புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டு இன்று திறக்கப்பட இருந்த சுன்னாகம் பிரதேசசபைக் கட்டிடத்திற்கு அதிகாலை 2.30 மணியளவில் விஷமிகளால் கழிவு ஒயில் அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த திறப்பு விழாவினை யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கியமானவரை அழைக்காது சாதாரணமாக பொதுமக்களுடன் சேர்ந்து திறப்பதற்கு திட்டமிட்டதே இந்த கழிவு ஒயில் ஊற்றப்பட்டதற்கு காரணம் என சுன்னாகம் பிரதேசசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது கழிவு ஒயில் கழுவும்...

குகன், லலித் ஆகியோரை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும்

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012, யாழ்ப்பாண மனித உரிமை செயற்பட்டாளர்களான குகன் மற்றும் லலித் ஆகியோரை உடனடியாக இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மனிதாபிமான தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. மனித உரிமைகள் செயற்பாட்டாளரான அஜித் குமார நேற்றைய தினம் இந்த கோரிக்கையை முன்வைத்தார். கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர்...

வவுனியா மீள்குடியேற்ற மக்களுக்காக ஜப்பான் உதவி

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012,வவுனியாவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான அடிப்படை வாழ்வாதாராத்தை அதிகரிப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதற்காக 11 மில்லியன் ரூபாய்கள் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மனித பாதுகாப்பு வேலைத்திட்டத்துக்காக ஒரு லட்சம் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் வாழ்வாதார அபிவிருத்தி நிதியத்திடம் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளன. ஜப்பானின் கொழும்பு தூதரகத்தின் ஊடாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக...

இலங்கையில் நாளாந்தம் 650 பேர் உயிரிழப்பு

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012,புகைத்ததல், மதுபானம் மற்றும் அதீத கொழுப்புணவின் காரணமாக இலங்கையில் நாளாந்தம் 650 பேர் பலியவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் உதவி செயலாளர் பாலித மகிபால இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நாளாந்தம் 1250 குழந்தைகள் பிரசவம் ஆகின்றன. அதேவேளை அண்ணளவாக 1000 மரண சம்பவங்கள் இடம்பெறுகின்றன. மரணிப்பவர்களில்...

Canvas A100: மைக்ரோமக்ஸின் புதிய வெளியீடு

21.08.2012.கைப்பேசி உற்பத்தியில் ஏனைய நிறுவனங்களுக்கு நிகராக புரட்சியை ஏற்படுத்திவரும் மைக்ரோமக்ஸ் நிறுவனமானது தனது நவீன தயாரிப்பில் உருவான Canvas A100 எனும் டுவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்கின்றது. கூகுளின் அன்ரோயிட் 4.0 ஐஸ்கிரீம் சான்விச் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக்கைப்பேசிகள் 5 அங்கு அளவு கொண்டதும், 854 x 480 ரெசொலூசன் உடையதுமான LCD தொடுதிரையைக் கொண்டுள்ளன. மேலும் 5 மெகாபிச்சல்கள் கொண்ட அதிவினைத்திறன் உடைய கமெரா,...