siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

விடுதலைப் புலிகளை தமிழர்கள் நிராகரித்துவிட்டனர்: சுவாமி

12.08.2012.கொழும்பு, ஆக. 10: விடுதலைப் புலிகளை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் நிராகரித்துவிட்டனர் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராணுவம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது:÷இலங்கையில் தீவிரவாதத்தை ஒழித்த பெருமை அதிபர் ராஜபட்சவையே சாரும். இதை தங்களின் தேசியப் பாதுகாப்புக்கு உகந்த நடவடிக்கையாக இந்தியர்கள் பார்க்கின்றனர். ராஜபட்சவின் வெற்றியின் மூலம் அதிகம் பயனடையப் போவது இந்தியாதான். ராஜபட்சவின் செயலுக்குண்டான வெகுமதியாக அவருக்கு எதிர்காலத்தில் உயரிய விருது கிடைக்கும்.

போரை நிறுத்தும்படி உலக நாடுகள் எல்லாம் கோரிக்கை விடுத்த நிலையிலும், அதை ஏற்காமல் தீவிரவாதத்தை முற்றிலும் அழிப்பதற்கான ராணுவ நடவடிக்கைகளில் அதிபர் ராஜபட்ச உறுதியாக இருந்தார். இது சரியான நடவடிக்கை. போர் முடிவுக்கு வந்த பின், இலங்கையில் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் நிராகரித்துவிட்டனர். அந்த அமைப்புக்கு ஆதரவான போராட்டம் தொடர்பான அழைப்பை தமிழர்கள் ஏற்கவில்லை. இதை இந்தியன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்தது. இந்திய அரசின் இச்செயலை பெரும்பான்மையான இந்தியர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

இலங்கையில் தாங்கள் ஒதுக்கப்படுகிறோம் என்ற மனநிலையிலிருந்து விடுபட்டு தேசத்தை கட்டமைக்கும் பணியில் தமிழர்களும் பங்குபெற வேண்டும் என இந்தியா விரும்புகிறது. அதற்கேற்ற சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் நல்லிணக்க நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.

பெரும்பான்மை சிங்களர்களின் அரவணைப்பின்கீழ் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார்.

அதிபருடன் சந்திப்பு: முன்னதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை சுப்பிரமணியன் சுவாமி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கையின் இனப் பிரச்னை குறித்தும், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது குறித்தும் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.

ராஜபட்சவை சந்தித்த பின் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறியது:÷இலங்கை அரசு அமைத்துள்ள நாடாளுமன்ற தேர்வுக்குழு மூலம் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிபர் ராஜபட்ச விரும்புகிறார்.

இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டணியில் இல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் அவசியம் குறித்து அதிபரிடம் எடுத்துரைத்தேன். இலங்கையில் காவல் துறையை நிர்வகிக்கும் அதிகாரத்தை தமிழர்களுக்கு வழங்குவதற்கு அரசு அச்சப்படுகிறது. இதுபோன்று அதிகாரத்தை பரவலாக்கினாலும், தவறாகப் பயன்படுத்தும்பட்சத்தில், அதைத் தடுக்க உரிய கண்காணிப்பு அமைப்புகளை அரசு அமைக்கலாம்.

இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் 356-ன்படி சட்டத்துக்கு எதிரான சூழ்நிலை நிலவும் மாநிலங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்பதை ராஜபட்சவின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.

இலங்கையில் தீவிரவாதத்தை ஒழித்தப்பின், அங்கு நேர்மறையான நடவடிக்கைகளின் மூலம் தமிழர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது அரசின் கடமை என்பதை அதிபரிடம் வலியுறுத்தினேன்'' என்றார்

விஜய்க்கு ஜோடி! ஆசை நிறைவேறிய காஜல்!

120.08.2012.தமிழ் சினிமாவின் இன்றைய டாப் நடிகைகள் பலரும் தெலுங்கு திரையுலகிலிருந்து இங்கு வந்தவர்கள் தான். தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் போது யாரும் இங்கு வருவதில்லை. தெலுங்கில் மற்ற நடிகைகளின் மார்கெட் உயர்ந்து, இவர்கள் கொடி இறங்கிக்கொண்டிருக்கும் போதே அதே நல்ல பெயருடன் தமிழுக்கு வந்து ஒவ்வொரு டாப் ஹீரோக்களுடனும் நடித்து தங்களது பெயரை நிலைநாட்டிக்கொள்கின்றனர்.
நடிகைகள் ஸ்ரேயா, அனுஷ்கா, இலியானா என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது. ஆனால் இவர்களிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டவர் நடிகை காஜல் அகர்வால். இந்தியில் ஒரு படம், தெலுங்கில் ஐந்து படம், தமிழில் மூன்று படம் என வரிசையாக நடிப்பார். காஜல் அகர்வாலின் முந்தைய சீஸன் அவ்வளவாக வெற்றியடையவில்லை.
சரோஜா, பொம்மலாட்டம், மோதிவிளையாடு போன்ற சுமாரான படங்களில் நடித்தார். ஆனால் இந்த முறை மாற்றான், துப்பாக்கி என இரண்டு டாப் ஹீரோக்களின் படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். மாற்றான், துப்பாக்கி என இரண்டு பெரிய படங்களில் காஜல் ஒப்பந்தமானதன் பின்னணி வேறெதுவுமில்லை, பொதுவாகவே சூர்யாவின் படங்களில் நடித்த ஹீரோயின்களை விஜய்யின் அடுத்த படங்களில் பார்க்கலாம்.
தெலுங்கில் காஜல் கையில் படம் இல்லாத நேரமாக பார்த்து கே.வி.ஆனந்த் கல்ஷீட் வாங்கிவிட, காஜலும் விஜய்யின் அடுத்தபடமான துப்பாக்கியில் தானாக சேர்க்கப்பட்டார் என்கிறது கோடம்பாக்கம். துப்பாக்கி படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்ட காஜல் “ விஜய் போன்ற ஜனரஞ்சக மாஸ் ஹீரோவுடன் தமிழ்ப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. விஜய் ஒரு நல்ல நடிகர். காதல், நடனம்,நகைச்சுவை போன்ற காட்சிகளில் சிறப்பாக நடிக்கிறார்” என்று கூறியுள்ளார்.மாற்றான், துப்பாக்கி முடிந்ததும் காஜல் 4 ட்தெலுங்கு படங்களில் நடிக்கிறார்

ஸ்ரீதேவியுடன், அஜீத் நடிக்கும் காட்சிகள் 13-ந்தேதி படமாகிறது

12.08.2012.பழைய நடிகை ஸ்ரீதேவி 14 வருடங்களுக்கு பிறகு ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ என்ற படத்தில் மீண்டும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் இப்படம் தயாராகிறது. இதில் முக்கிய காட்சி ஒன்றில் முன்னணி நடிகர்கள், கவுரவ தோற்றத்தில் ஸ்ரீதேவியுடன் தோன்றுகின்றனர். இந்தி படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.
தமிழ் பதிப்பில் ஸ்ரீதேவியுடன் நடிக்க அஜீத்திடம் கேட்டனர். அவர் சம்மதித்துள்ளார். இதையடுத்து ஸ்ரீதேவி, அஜீத் நடிக்கும் காட்சிகளை வருகிற 13-ந்தேதி மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்குகின்றனர். இதற்காக அங்கு செட் போடப்பட்டு உள்ளது. 13-ந்தேதி ஸ்ரீதேவிக்கு பிறந்தநாள் ஆகும். படப்பிடிப்பிலேயே அவரது பிறந்தநாளை கொண்டாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ படம் அக்டோபர் 5-ந்தேதி ரிலீசாகிறது

செயற்கை அவயங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் வழங்கல் அளவை விஸ்தரிக்க ஜப்பான் 3.7 மில்லியன் அன்பளிப்பு

12.08.2012.
இது குறித்த ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கை கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
இதில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிதொ ஹொபொ மற்றும் கொலம்போ பிரென்ட இன்நீட் சங்கத்தின் தலைவி கல்யானி ரணசிங்க ஆகியோர் கையெழுத்திட்டனர்.
சமூக நலத்திட்ட நன்கொடை உதவியாக அடிமட்ட மனித பாதுகாப்புக்கான நன்கொடை திட்டத்தின் கீழ் இந் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிதியின் மூலம் குறித்த நிறுவனத்திற்கு தேவையான மேலதிக இயந்திரங்களும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இலவசமாக செயற்கை உபகரணங்களை தேவாயானோருக்கு வழங்கி வரும் கொலம்போ பிரென்ட இன்நீட் சங்கத்தினால் கொழும்பில் செயற்கை உறுப்பு தயாரிப்பதற்கான செயற்பட்டறைகளை நிறுவதற்கும் விருத்தி செய்வதற்கும் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஊடாக வருடாந்தம் 1000 பேரை சமூகத்தில் மீளிணைந்து கொள்ளவும் சமூக சூழ்நிலைகளை மேம்படுத்திக்கொள்ளவும் நேரடியாக உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது

பரீட்சை மத்திய நிலையங்களில் அதிகாரிகள் சிலர் நிதி கொள்ளை

12.08.2012.
பரீட்சை நிலையங்களில் உதவியாளர்கள் பணியில் இருந்ததாகக் கூறி பணம் பெற்றுக் கொள்ளப்படும் மோசடிச் செயல் இடம் பெற்று வருவதாகக் கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பரீட்சை மத்திய நிலையங்களில் உள்ள பரீட்சை அலுவலகங்களுக்கு ஒரு உதவியாளர் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் நாடு முழுவதும் உள்ள அநேக பரீட்சை நிலையங் களில் உதவியாளர்கள் பெற்றுக் கொள்ளப்படவில்லை எனக் கல்விசாரா ஊழியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறு உதவியாளர்களைப் பெற்றுக் கொள்ளாமல் போலிப் பெயர்களைக் கூறி உதவியாளர்களுக்கான பணத்தை சில பரீட்சை மத்திய நிலைய பொறுப்பதி காரிகள் பெற்றுக் கொள்வதாகக் கல்விசாரா ஊழியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்துப் பல வருடங்களாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ள போதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஈழத்துக்கு இந்தியா அனுமதி

12.08.2012.சென்னையில் தி.மு.க தலைவர் கலைஞர் தலைமையில் நடக்கும் டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முன்னர் கூறியிருந்தது. ஆயினும் இப் போது மீண்டும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
மாநாட்டின் தலைப்பில், ''ஈழம்'' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுரை கூறி, வெளியுறவு அமைச்சகம் கடந்த வியாழக்கிழமையன்று டெசோ மாநாட்டு அமைப்பின் செயலர் ஹஸன் முகமது ஜின்னாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், இதற்குத் தி.மு.க தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஈழம் என்பது பல்லாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை என்றும், அதில் தவறு ஏதும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக, மத்திய அரசுக்கு தி.மு.க சார்பில் கடிதமும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு தற்போது அனுமதியளித்துள்ளது. டெசோ மாநாடு தொடர்பான வழக்கு விசாரணை நேற்று சனிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, டெசோ மாநாட்டு அமைப்பாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் இந்தத் தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, டெசோ மாநாட்டில், ஈழம் என்ற சொல்லைப் பயன் படுத்த இந்திய மத்திய அரசு தடைவிதித்துள்ள்போதும், மாநாட்டில் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது எனத் தி.மு.க. முன்னதாக முடிவு செய்திருந்தது.
"ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று உள்துறை அமைச்சரிடம் இருந்தோ, பிரதமரிடம் இருந்தோ கடிதம் வரவில்லை.ஈழம் என்ற வார்த்தை தமிழ் இலக்கியங்களில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இடம்பெற்றுள்ளது.
"பட்டினப்பாலை என்ற இலக்கிய நூலில் பூம்புகார் கடற்கரையில் வந்து நின்ற படகுகளில் இறக்குமதி, ஏற்றுமதிக்காக வந்த பொருள்கள் என்ன என்பதைக் குறிக்க ஈழத்து உணவும் காழகத் தாக்கமும் என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. எனவே ஈழம் என்பது இல்லாத சொல் அல்ல, கற்பனை சொல்லும் அல்ல. வரலாற்றிலேயே இடம்பெற்ற சொல்'' என்று தி.மு.க. தெரிவித்திருந்தது

யாழ். கடல் நீரேரியில் அனுமதியின்றி கடலட்டை, நண்டு பிடிக்கத் தடை

12.08.2012.
யாழ். மாவட்டத்தில் உள்ள கடல் நீர் ஏரியில் கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி கடலட்டை, நண்டு பிடிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாவட்ட கடல் தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடல் நீர் ஏரிகளில் தொழிலாளர்கள் தமக்கென ஒரு இடத்தைப் பிடித்து அடைத்துக் கொண்டு தொழில் செய்து வருகின்றனர். கடலட்டைகள், நண்டுகள் என்பன ஆழ்கடலில் பிடிக்க முடியாது.
இதற்காக ஓரளவு நீர்ப்பரப்பிலே தடிகள் குற்றப்பட்டு, துளைகள் போட்டு வேலியடைத்து கடலட்டை குஞ்சுகள் விட்டு வளர்க்கப்படுகின்றன. கடலட்டைகள் பெறுமதி வாய்ந்ததால் அவற்றை வளர்ப்பதற்கு கடற்றொழிலாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடலட்டைகள், நண்டு பிடிப்பதற்கு தடை இல்லை. ஆனால் கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு கடலட்டை நண்டு பிடிக்க விரும்பு பவர்கள் தமக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கடிதத்தை வழங்க வேண்டும். பின் பணிப்பாளர் அனுமதி கிடைத்ததும் தொழில் செய்ய முடியும்.
தீவுப் பகுதிகளிலேயே அதிகம் சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடிக்கப்பட்டு வருகின்றன. என்று அவர் மேலும் தெரிவித்தார்.