siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

விடுதலைப் புலிகளை தமிழர்கள் நிராகரித்துவிட்டனர்: சுவாமி

12.08.2012.கொழும்பு, ஆக. 10: விடுதலைப் புலிகளை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் நிராகரித்துவிட்டனர் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராணுவம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது:÷இலங்கையில் தீவிரவாதத்தை ஒழித்த பெருமை அதிபர் ராஜபட்சவையே சாரும். இதை தங்களின் தேசியப் பாதுகாப்புக்கு உகந்த நடவடிக்கையாக இந்தியர்கள் பார்க்கின்றனர்....

விஜய்க்கு ஜோடி! ஆசை நிறைவேறிய காஜல்!

120.08.2012.தமிழ் சினிமாவின் இன்றைய டாப் நடிகைகள் பலரும் தெலுங்கு திரையுலகிலிருந்து இங்கு வந்தவர்கள் தான். தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் போது யாரும் இங்கு வருவதில்லை. தெலுங்கில் மற்ற நடிகைகளின் மார்கெட் உயர்ந்து, இவர்கள் கொடி இறங்கிக்கொண்டிருக்கும் போதே அதே நல்ல பெயருடன் தமிழுக்கு வந்து ஒவ்வொரு டாப் ஹீரோக்களுடனும் நடித்து தங்களது பெயரை நிலைநாட்டிக்கொள்கின்றனர். நடிகைகள் ஸ்ரேயா, அனுஷ்கா, இலியானா என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது. ஆனால் இவர்களிலிருந்து...

ஸ்ரீதேவியுடன், அஜீத் நடிக்கும் காட்சிகள் 13-ந்தேதி படமாகிறது

12.08.2012.பழைய நடிகை ஸ்ரீதேவி 14 வருடங்களுக்கு பிறகு ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ என்ற படத்தில் மீண்டும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் இப்படம் தயாராகிறது. இதில் முக்கிய காட்சி ஒன்றில் முன்னணி நடிகர்கள், கவுரவ தோற்றத்தில் ஸ்ரீதேவியுடன் தோன்றுகின்றனர். இந்தி படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். தமிழ் பதிப்பில் ஸ்ரீதேவியுடன் நடிக்க அஜீத்திடம் கேட்டனர். அவர் சம்மதித்துள்ளார். இதையடுத்து ஸ்ரீதேவி, அஜீத் நடிக்கும் காட்சிகளை வருகிற 13-ந்தேதி மும்பையில்...

செயற்கை அவயங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் வழங்கல் அளவை விஸ்தரிக்க ஜப்பான் 3.7 மில்லியன் அன்பளிப்பு

12.08.2012. இது குறித்த ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கை கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிதொ ஹொபொ மற்றும் கொலம்போ பிரென்ட இன்நீட் சங்கத்தின் தலைவி கல்யானி ரணசிங்க ஆகியோர் கையெழுத்திட்டனர். சமூக நலத்திட்ட நன்கொடை உதவியாக அடிமட்ட மனித பாதுகாப்புக்கான நன்கொடை திட்டத்தின் கீழ் இந் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் குறித்த நிறுவனத்திற்கு...

பரீட்சை மத்திய நிலையங்களில் அதிகாரிகள் சிலர் நிதி கொள்ளை

12.08.2012. பரீட்சை நிலையங்களில் உதவியாளர்கள் பணியில் இருந்ததாகக் கூறி பணம் பெற்றுக் கொள்ளப்படும் மோசடிச் செயல் இடம் பெற்று வருவதாகக் கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. பரீட்சை மத்திய நிலையங்களில் உள்ள பரீட்சை அலுவலகங்களுக்கு ஒரு உதவியாளர் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் நாடு முழுவதும் உள்ள அநேக பரீட்சை நிலையங் களில் உதவியாளர்கள் பெற்றுக் கொள்ளப்படவில்லை எனக் கல்விசாரா ஊழியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இவ்வாறு உதவியாளர்களைப்...

ஈழத்துக்கு இந்தியா அனுமதி

12.08.2012.சென்னையில் தி.மு.க தலைவர் கலைஞர் தலைமையில் நடக்கும் டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முன்னர் கூறியிருந்தது. ஆயினும் இப் போது மீண்டும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. மாநாட்டின் தலைப்பில், ''ஈழம்'' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுரை கூறி, வெளியுறவு அமைச்சகம் கடந்த வியாழக்கிழமையன்று டெசோ மாநாட்டு அமைப்பின் செயலர்...

யாழ். கடல் நீரேரியில் அனுமதியின்றி கடலட்டை, நண்டு பிடிக்கத் தடை

12.08.2012. யாழ். மாவட்டத்தில் உள்ள கடல் நீர் ஏரியில் கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி கடலட்டை, நண்டு பிடிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாவட்ட கடல் தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: கடல் நீர் ஏரிகளில் தொழிலாளர்கள் தமக்கென ஒரு இடத்தைப் பிடித்து அடைத்துக் கொண்டு தொழில் செய்து வருகின்றனர்....