siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 30 டிசம்பர், 2013

கொலராடோ மாகாணத்தில் கஞ்சா விற்க அதிகாரபூர்வமாக அனுமதி!

 அமெரிக்காவில் முதல் முறையாக கொலராடோ மாகாணத்தில் கஞ்சா விற்க அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைநகர் டென்வர் உள்பட அந்த மாகாணம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி முதல் கஞ்சா விற்பனை தொடங்கப்பட உள்ளது. கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு தனி உரிமமும் விற்பனை செய்வதற்கு தனி உரிமமும் வழங்கப்படுகின்றன. இரு பிரிவுக்கும் சேர்த்து இதுவரை 42 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 160-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
   
கடந்த 2012 நவம்பரில் கொலராடோ மாகாணத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக அங்கீகரிக்க 65 சதவீத வாக்காளர்கள் ஆதரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் இப்போது கஞ்சா விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அதன் விற்பனைக்கு பல்வேறு
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 21 வயதுக்கு மேற்பட் டவர்களுக்கு மட்டுமே கஞ்சாவை

விற்பனை செய்ய வேண்டும். ஒரு நபருக்கு ஒரு அவுன்ஸ் (28 கிராம்) அளவுக்கு மட்டுமே வழங்க வேண்டும். கஞ்சா வாங்கும் நபர் கண்டிப்பாக தனது அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.
வெளி மாகாண நபர்களுக்கு 8 கிராம் அளவுக்கு மட்டுமே விற்க வேண்டும். கடையிலோ, பொது இடத்திலோ கஞ்சாவை புகைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள்

விதிக்கப்பட்டுள்ளன. வாகனச் சோதனையின்போது வாகன ஓட்டியின் ரத்தத்தில் 5 நானோகிராமுக்கு மேல் கஞ்சா அளவு இருந்தால் அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

இராணுவத்தில் அதிகரிக்கும் பாலியல் கொடுமைகள்

  அமெரிக்க இராணுவத்தில் ஆண்டு பாலியல் கொடுமைகள் 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக இராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான அரசுத் தகவல்களை ஆய்வு செய்ததில், கூடுதலாக 5000 பாலியல் முறைப்பாடுகள் வந்திருப்பதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு முதல் 9 மாதங்களில் மட்டும் 46 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க இராணுவத்தில் வேலை செய்பவர்களை பாலியல் கொடுமைப்படுத்தும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த குற்றங்களை முற்றிலும் தடுக்கும் வகையில், பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வழிவகை செய்யும் சட்டத்திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒபாமா சமீபத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.