siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

கொலிவுட்டில் கிளாமாராக நடிக்க முடிவு செய்த ஷீலா

17.08.2012. கொலிவுட்டில் நந்தா, டும் டும் டும் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷீலா இளவட்டம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்பு அவர் தமிழில் நடித்த சீனாதானா, கண்ணா, வேதம் படங்கள் வெற்றிபெறவில்லை. இதனால் தெலுங்கு சினிமாவில் நுழைந்து அங்கு பிசியான நடிகையாகிவிட்டார். நயன்தாராவுக்கு இணையாககூட ஒரு படத்தில் நடித்துவிட்டார். தெலுங்கில் படு கவர்ச்சியாக நடிக்கும் ஷீலா. தமிழில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை எதிர்பார்த்தார்....

நண்பரின் இறப்பால் பிறந்தநாள் விழாவை ரத்து செய்தார் மனிஷா

17.08.2012.பிரபல நடிகை மனிஷா கொய்ராலா,  தான் கொண்டாடவிருந்த பிறந்தநாள் விழாவை திடீரென ரத்து செய்தார்.கொலிவுட்டில் இந்தியன், முதல்வன் படங்களில் நாயகியாக நடித்த மனிஷா, மாப்பிள்ளை படத்தின் தனுசுக்கு மாமியாராக நடித்திருந்தார். இவர் தனது 42வது பிறந்த நாளை தன் தோழிகளுடன் கொண்டாட திட்டமிட்டிருந்தார். இதற்காக தபு, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு அழைப்பும் விடுத்தார். ஆனால் திடீரென இவரது பிறந்தநாள் விழா ரத்து செய்யப்பட்டது. இது குறித்து...

கேப்பாப்புலவு பிரதேசத்தை ஆக்கிரமித்து மக்களை அவலநிலைக்குள்ளாக்கியுள்ள இராணுவம்!

வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்புலவு பகுதியில் இராணுவம் அபகரித்து வைத்துள்ள சுமார் 2 ஆயிரத்து 282 ஏக்கர் காணிக்குரிய அனுமதிப்பத்திரத்தை தம்மிடம் வழங்குமாறு இராணுவத்தினர் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் வளமான விவசாயக் கிராமமாகக் காணப்பட்ட கேப்பாப்புலவுக் கிராமத்தில் சுமார் 700 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. தற்போது மக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்தினர் அபகரித்து...

புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு

 வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் உள்ள புத்தரின் எலும்புகளை இந்திய அரசு இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்க உள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியில் ஆட்சி செய்த ஷாக்கிப் மன்னர் பரம்பரையின் வழித்தோன்றல்களில் வந்தவர் கௌதம புத்தர். இவர் உலக வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை முற்றிலும் துறந்து கயா என்ற இடத்தில் உள்ள போதி மரத்தடியில் தவம் இருந்து ஞானம் பெற்றார். அச்சமயத்தில் இந்தியாவை ஆட்சி செய்த அசோக மன்னர் புத்தரின் நெறிகளைப்...

சிகரெட் பெட்டியில் நோயை பிரதிபலிக்கும் கொடூர படங்கள்

சிகரெட் பெட்டியில் நோயை பிரதிபலிக்கும் கொடூர படங்கள் வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012, ஜேர்மனியில் உள்ள புற்றுநோய் நிபுணர் ஒருவர் சிகரெட்டினால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோயின் தீவிரத்தை புகைபிடிப்பவருக்கு உணர்த்த தீர்மானித்துள்ளார். இதனை முன்னிட்டு சிகரெட் பெட்டியின் அட்டையில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் நோயைக்கானபடங்களை அச்சடிக்க வேண்டும், என்று அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் புகை பிடிப்பதை எதிர்த்து பல கடுமையான சட்டங்கள்...
...

சென்னையின் புகழ் பாடும் சிம்பு

17.08.2012. சிங்கார சென்னையின் புகழை சொல்லும் ஆன்தம் ஒன்றை சிம்பு பாடியுள்ளார். இந்த ஆன்தம் யுரியூப்பில் வெளியாகியுள்ளது. கொலிவுட்டில் போடா போடி, வேட்டை மன்னன், வாலு போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இதற்கிடையில் மதில் மேல் பூனை என்ற படத்தை விளம்பரப்படுத்தும் பாடலாக இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் சென்னைவாசிகளை ஈர்க்கும் படியாக அமைந்துள்ளது. ஏற்கனவே வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் சிம்புவின் அடுத்த ஆன்தம் தயாராகி வருவதாக தகவல்...

பத்மப்ரியாவால் ஏற்பட்ட பிரச்சினை

17.08.2012. நடிகை பத்மப்ரியா ஊதிய விடயத்தில் தனது மேலாளருக்கு பரிந்து பேசியதால் கேரளா சினிமா துறையில் மேலாளர்களுக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதுகேரளா சினிமாவில் நடிகர்- நடிகைகளின் மேலாளர்கள் தயாரிப்பாளர்களிடமே சம்பளம் வாங்குகின்றனர். இவர்களின் சம்பள விடயத்தில் குழப்பம் செய்தால் நடிகர்- நடிகைகளின் திகதிகளை தாமதப்படுத்துவர். இப்பிரச்சினை நீண்ட காலம் கேரளா சினிமாவில் இருந்து வருகின்றது. இந்நிலையில் மலையாளத்தில் ‘நம்பர் 66 மதுரை பஸ்’ என்ற படத்தில் பத்மப்ரியா...

தங்கச் சுரங்கத்தில் விபத்து:60 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர்

  வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, காங்கோ நாட்டின் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 60 தொழிலாளர்கள் பலியாயினர். காங்கோ நாட்டின் ஓரியன்டல் மாகாணத்தின் மம்பாசா பகுதியில் தங்கச் சுரங்கம் ஒன்று முறைக்கேடாக இயங்கி வந்தது. நான்கு நாட்களுக்கு முன் இந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், சுரங்கத்தின் நுழைவாயில் இடிந்தது. இதனால் 100 மீட்டர் ஆழத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் புதையுண்டு இறந்தனர். இது குறித்து காங்கோ சுரங்க அமைச்சர் குறிப்பிடுகையில்,...

சுயாதீனமாக கடமையாற்ற முடியாமையே பதவி விலகக் காரணம்: திலக் கருணாரட்ன

வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, சுயாதீனமாக கடயைமாற்ற முடியாத காரணத்தினால் பதவி விலகுகின்றேன் என கொழும்பு பங்குச் சந்தையின் தலைவர் திலக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.பங்குச் சந்தையை சீரழித்த சிலரினால் எனக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. நிதி அமைச்சின் ஊடாக எனது இராஜினாமா கடிதத்தை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பேன்.பங்குச் சந்தையை சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் தொடர்ந்தும் பதவி வகிப்பதில்...

வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வோரே உண்மையான துரோகிகள்: விக்ரமபாகு

வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வோரே உண்மையான துரோகிகள் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் டொக்டர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.  அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த நாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சென்னை டோசோ மாநாட்டில் உரையாற்றியதாக குற்றம் சுமத்தியிருந்தார்.உண்மையான நாட்டின் துரோகிகள் சர்வதேச நாணய நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் ஆதரவாக செயற்படுவோ என்பதனை ஜனாதிபதிக்கு...

நல்லூர் தேர் திருவிழாவில் கரைபுரண்டது பக்தர் கூட்டம்; தேரில் பவனி வந்தார் முருகன்

16.08.2012. இலங்கையில் வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா இன்றைய தினம் காலை 7 மணிக்கு நடைபெற்றது. காலைப் பூசைகள் இடம்பெற்று வசந்தமண்டப பூசையை அடுத்து முருகப் பெருமான் தேருக்கு எழுந்தருளினார். முருகனிடம் அருளைப் பெற்றுக் கொள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர் படை சூழ அழகிய வேலவன் தேரிலே வீதியுலா வந்தார ...

நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழாவில் பல்லாயிரம் அடியார்கள் பங்கேற்பு

16.08.2012 நல்லூர்க்கந்தன் ஆலய தேர்த்திருவிழாவில் யாழ். குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரம் அடியார்கள் கலந்துகொண்டார்கள். ஆலய வெளிவீதி சனசமுத்திரம் போல காட்சியளித்ததோடு ஆலய சுற்றாடல் முழுவதும் வாகனங்களினால் நிறைந்து காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். பொலிஸார் சீருடையிலும் சிவில் உடையிலும் கடமையில் ஈடுபட்டிருந்தார்கள். ஆலய சுற்றாடலில் இம்முறை முதல் தடவையாக மாணவர் படையணியினர் தண்ணீர் பந்தல் அமைத்து அடியவர்களுக்கு...