siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 டிசம்பர், 2018

இது தான் அதிகம் வெறுக்கப்பட்ட காணொளி YouTube அறிவித்தது

ஆண்டுதோறும் இணையத்தின் முக்கிய நிகழ்வுகள், பிரபலமடைந்த ஆடல் பாடல், விளையாட்டுகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியவற்றைத் தொகுத்து காணொளியாக YouTube
 வெளியிட்டு வருகிறது.
YouTube Rewind என்ற அந்தக் காணொளியை அந்தத் தளம் ஒவ்வோர் ஆண்டின் இறுதியில் வெளியிடுகிறது. அதனை காணொளியைக் காண இணையவாசிகள் ஆவலுடன் காத்திருப்பர்.
ஆனால், இந்த ஆண்டு வெளியான YouTube Rewind 2018 காணொளி, இணையவாசிகளை முகம் சுளிக்க 
வைத்துள்ளது.
தளத்தின் ஆக அதிகம் வெறுக்கப்பட்ட காணொளி என்ற வேண்டாத பெயரையும் அது பெற்றுள்ளது. காணொளிக்கு இதுவரை 12 மில்லியன் பேர் வெறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இணையவாசிகளிடம் பிரபலமாக உள்ள YouTube நட்சத்திரங்கள் காணொளியில் இடம்பெறவில்லை என்று பலர் கூறியுள்ளனர். மேலும், 2018ல் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் காணொளியில் இடம்பெறவில்லை என்று வேறு சிலர் குறைகூறியுள்ளனர்.
Logan Paul, KSI ஆக YouTube நட்சத்திரங்கள் நடத்திய குத்துச்சண்டை விளையாட்டு, இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட 
நிகழ்வுகளில் ஒன்றாகும்.
அது போன்ற முக்கிய நிகழ்வுகள் காணொளியில் இடம்பெறவில்லை என்று பலர் குற்றம் சுமத்தியுள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



                   

திங்கள், 11 பிப்ரவரி, 2013

ஐரோப்பிய நாடான செர்பியாவில் உள்ள..

<
செர்பிய பிரதமரை நேர்காணல் செய்த பெண், உள்ளாடை அணியாத விவகாரம், அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிவி' சேனல் ஒன்று, "மிஷன் இம்பாசிபிள்' என்ற பெயரில் வேடிக்கை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. மாடல் அழகியான, ப்ராங்கா நெசிவிக், பிரதமர் இவிகா டேகிக்கை நேர்காணல் செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது
நேர்காணலின் போது, உள்ளாடை அணியாமல், குட்டை பாவாடை அணிந்திருந்த அந்த பெண், கால் மேல் கால் போட்டு அமர்ந்தார். பேட்டி கண்ட பெண், காலை மாற்றி அமரும் போது, அவர், உள்ளாடை அணியாததை, பிரதமர் பார்ப்பது போன்று, வீடியோ ஒளிபரப்பானது.

இந்த சம்பவம், செர்பியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."நாட்டை அவமதிக்கும் விதமாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு காரணமானவர்களை, பிரதமர் அலுவலகம் தண்டிக்காமல் விடாது' என, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியுள்ளார்.நிகழ்ச்சியை, "டிவி'யில் ஒளிபரப்புவதை நிறுத்தி வைத்த அந்த சேனல், நிகழ்ச்சியின் முன்னோட்டத்தையும், தன் வலைதளத்தில் இருந்து நீக்கியுள்ளது.

வியாழன், 20 டிசம்பர், 2012

அமெரிக்காவில் மாயா என்ற ஒரு?



யார் அந்த மாயன்கள்?மாயன்கள் தங்கள் காலண்டரை டிசம்பர் 21,2012ம் தேதியிடன் முடித்தது ஏன்? அன்றுடன் உலகம் அழிந்து விடுமா! இதுதான் இக்காலண்டரை நம்புவோர் உலகம் அழிந்துவிடும் என்று கூறுவதற்கு முக்கிய காரணம். மேலும் அழியாவிட்டாலும் நிச்சயம் அன்று மிகப்பெரிய ஆபத்துக்கள் பூமிக்கு ஏற்படும் என்றும் கருதுகின்றனர்{காணொளிகள்}.
ஆன்மீகம் கூறுவது என்ன

கலியுகம் முடிய இன்னும் 4,26,896 ஆண்டுகள் உள்ளன. அப்போது உலகம் முழுமையாக இருக்காதாம். இப்போது கலியுகத்தின் 5104ம் ஆண்டு தான் நடக்கிறது. மொத்தம் 4,32,000 ஆண்டுகள். இப்போதே கலியுகத்தின் கொடுமை எல்லை மீறி போய் விட்டது. இனி காட்டுவாசிகள் போல நாகரீகமற்று போய் விடும் அந்த பழைய காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த யுகத்தின் முடிவில் தர்மத்தை நிலைநாட்ட திருமால் கல்கி அவதாரம் எடுப்பாரென்று புராணங்கள் கூறுகின்றன. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்
மாயன்கள் உருவாக்கியது ஒரு சுழற்சி காலண்டர். எனவே அவை மீண்டும் அவர்களது முறைப்படி முதல் தேதியான 0, 0, 0, 0, 0ல் தொடங்கலாம். எப்படி பார்த்தாலும் அது உலகின் அழிவாக இரு   க்காது. நல்ல ஆரம்பமாகவே இருக்கும் என்று அனைவராலும் நம்பப்படவேன்யது



.



.
 

சனி, 15 டிசம்பர், 2012

அமெரிக்காவில் பயங்கரம்: 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி


அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் கானிக்டிகட் பகுதியில் உள்ள சான்டி ஹூக் பள்ளியில், 20 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் இரண்டு துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
இதில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் நடத்திய நபரும் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், கவர்னர் சூழ்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், பொலிசாருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த பொலிசார், அங்கிருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் எத்தனை குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்பது பற்றி தெரியவில்லை.
சம்பவ இடத்திலிருந்து மாணவர்கள் பயத்தில் கதறியபடி பலத்த பாதுகாப்புடன் வெளியேறும் காட்சிகளை அந்நாட்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். அதிகாரிகள் தொடர்ந்து பள்ளியை சோதனை செய்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு 223 காலிபர் ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தங்களை பள்ளியிலிருந்து வெளியேற்றும் முன்னர், ஒவ்வொரு மாணவரையும் பொலிசார் தீவர சோதனை செய்ததாக மாணவர் ஒருவர் கூறினார்.
பொலிசாருக்கு உதவ மீட்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். ஆயுதங்களுடன் பொலிசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களும் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஒருவர், இந்த துயரமான சம்பவத்திற்கு ஜனாதிபதி சார்பாகவும், எனது சார்பாகவும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறினார.{காணொளி,புகைப்படங்கள்,}


 



;">



 





வியாழன், 13 டிசம்பர், 2012

பெண்ணுடன் கள்ள உறவு: சிங்கப்பூர் சபாநாயகர் பதவி விலகினார்

பெண் ஒருவருடன் தகாத உறவு கொண்டிருந்ததாக புகார் எழுந்ததால், சிங்கப்பூர் நாடாளுன்ற சபாநாயகர் மைக்கேல் பால்மர் பதவி விலகினார். சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகராக பதவி வகித்தவர் மைக்கேல் பால்மர்.
மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பால்மர், தனது தொகுதி அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மற்ற உறுப்பினர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும், தகாத உறவு வைத்திருந்தால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள் என கட்சி தலைவர்கள் விமர்சித்தனர்.
இதனையடுத்து குறித்த பெண் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதனை தொடர்ந்து தானும் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் பால்மர் அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் செய்தது தவறு தான். என்னுடைய ஒழுக்க கேட்டினால் கட்சிக்கு களங்கம் ஏற்படுவதை விரும்பவில்லை. எனவே பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.{காணொளி, }

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

போபா புயலின் கோரத் தாண்டவத்துக்கு 600 பேர் பலி: மீண்டும்

 
பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட போபா புயலுக்கு, இதுவரையிலும் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். தற்போது பிலிப்பைன்சின் வடபகுதியில் 250 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருக்கும் இப்புயல், மீண்டும் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது மணிக்கு 250 கிலோ மீற்றர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரம் தாக்கிய புயலின் தாண்டவத்திலிருந்தே மக்கள், இன்றளவும் வெளிவராத நிலையில் சிக்கி தவிக்கின்றனர்.
பல கிராமங்கள் அடியோடு நாசமாகி விட்டதால், நிவாரண பணிக்கு சர்வதேச உதவியை பிலிப்பைன்ஸ் நாடு கேட்டுக் கொண்டுள்ளது{காணொளி, }

வியாழன், 6 டிசம்பர், 2012

புரட்டி போட்ட சூறாவளி: பலி எண்ணிக்கை 300ஆக அதிகரிப்பு





 
பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி புயலுக்கு இதுவரையில் 300 பேர் பலியாகி உள்ளனர்.
பிலிப்பைன்சை நேற்று முன்தினம் போபா என்ற புயல் தாக்கியது. பலத்த வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
புயலை தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஆறு இராணுவ வீரர்கள் பலியாகினர்
 

புதன், 5 டிசம்பர், 2012

பிலிப்பைன்ஸை தாக்கியது போபா புயல்: 43 பேர் பலி



பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானௌ தீவை போபா புயல் நேற்று தாக்கியதில் 43 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பிலிப்பைன்சில் மணிக்கு 210 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய புயல், மின்டானௌ தீவில் நேற்று கரையை கடந்தது.
இதனால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வர்த்தக நகரான ககாயான் டியோரோ நீரில் மூழ்கியுள்ளது.
41 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்டானௌ நகரில் அருகேயுள்ள கிராமத்தில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர்.{காணொளி, புகைப்படங்கள்}
இந்த கிராமத்தில் திடீரென வெள்ளம் புகுந்ததால், இராணுவ ரோந்து முகாமை அடித்து சென்றதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.
கம்போஸ்டெலா பள்ளத்தாக்கு மாகாண ஆளுநர் அர்டுரோ உய் கூறுகையில், 34 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் ஏராளமானவர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது.
நியூ பாட்டன் பகுதியில் இராணுவ வீரர்களும், பொதுமக்களும் சென்ற வாகனம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது என்றார்.












ரஷ்ய சரக்கு கப்பல் கருங்கடலில் மூழ்கியது

ரஷ்யாவுக்கு சொந்தமான சரக்கு கப்பலொன்று கடல் சீற்றத்தின் காரணமாக கருங்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகருக்கு அருகில் உள்ள சிலே என்ற இடத்திலேயே இந்த கப்பல் மூழ்கியுள்ளது.
இந்த கப்பலில் 11 ரஷ்யர்களும், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவரும் பயணம் செய்தனர். இவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இதே பகுதியில் வந்த மற்றொரு ரஷ்ய கப்பலும் கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளது. இந்த கப்பலையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.{காணொளி, புகைப்படம்}
mmm

ஆளில்லா உளவு விமானத்தை கைப்பற்றியது??

 
அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக சந்தேகம் கொண்ட அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
ஆனால் அணு சக்தியை ஆக்கப்பூர்வமான விடயங்களுக்கு மட்டும் தான் பயன்படுத்தி வருகிறோம் என ஈரான் கூறிவருகிறது.
ஈரானின் பேச்சில் நம்பிக்கை இல்லாத அமெரிக்கா அணுசக்தி நிலையம் உள்ள பகுதிகள், கச்சா எண்ணெய் உள்ள பகுதிகளை ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் கண்காணிக்கின்றது.
இந்நிலையில் தற்போது வளைகுடா பகுதியில் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் பறந்த சிறிய ரக ஆளில்லா விமானத்தை ஈரான் கடற்படை பிடித்துள்ளது.
எப்போது பிடித்தது, எவ்வாறு பிடித்தது போன்ற தகவலை ஈரான் அரசு வெளியிடவில்லை.
இதுகுறித்து அமெரிக்கா தரப்பில், வளைகுடா பகுதியில் பறக்கவிடப்பட்ட ஆளில்லா விமானங்கள் அனைத்தும் சரியாக உள்ளன. எதுவும் காணாமல் போகவில்லை என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இது போன்ற ஒரு விமானத்தை ஈரான் பிடித்து வைத்து கொண்டதும், சமீபத்தில் தங்கள் நாட்டு எல்லையில் பறந்த மற்றொரு விமானத்தை தகர்க்க முயன்றதும் குறிப்பிடத்தக்கது(வீடியோ இணைப்பு)

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

பாதை இடிந்தது! உள்ளே சிக்கிய கார்கள் எரிகின்றன! மூவர் பலி

ஜப்பானில் டோக்கியோ நோக்கி செல்லும் tunnel பாதை ஒன்று இன்று காலை இடிந்து விழுந்ததில், உள்ளே சில கார்கள் சிக்கிக் கொண்டன. இந்தக் கார்களையும், அதற்குள் உள்ளவர்களையும் மீட்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெறுகின்றன. இந்த tunnel வாயில் ஊடாக புகை வெளிவந்து கொண்டிருப்பதால், உள்ளே சிக்கிக் கொண்ட கார்கள் தீப்பிடித்து எரிகின்றன என ஊகிக்கப்படுகிறது.
Sasago tunnel என்ற இந்த மோட்டார் பாதை, சுவோ எக்ஸ்பிரஸ்-வே பாதையில் உள்ளது. இன்று காலை 8 மணிக்கு இந்த விபத்து நடந்தது. தலைநகர் டோக்கியோ நோக்கிச் செல்லும் பாதை மிகவும் போக்குவரத்து நெருக்கடியானது என்ற போதிலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதிக கார்கள் இல்லை.
சுமார் 5 கார்கள் உள்ளே சிக்கியிருக்கலாம் எனவும், மூவர் உயிரிழந்துள்ளதாகவும் ஜப்பானிய டி.வி. சேனல், கியோடோ நியூஸ் தெரிவிக்கிறது{காணொளி, புகைப்படங்கள்}.







வியாழன், 29 நவம்பர், 2012

கார் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 54ஆக உயர்ந்தது

சிரியாவில் இரு கார் வெடிகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 54 பேர் பலியாயினர், 120க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக புரட்சிபடையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஜராமனா நகரில் கிறிஸ்தவ ட்ரூஸ் இன சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
இங்கு 2 கார் வெடிகுண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக திடீரென வெடித்ததில் அப்பகுதியில் இருந்த 20 பேர் பலியாயினர்.
குறுகலான சாலையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்களின் மீது விழுந்ததாகவும், எங்கு பார்த்தாலும் மனித உடல்கள் இடிபாடுகளுக்கு இடையே சிதறி கிடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
குண்டுவெடிப்பில் 20 பேர் இறந்ததாக முதலில் கூறிய சிரியா மனித உரிமைகள் அமைப்பு, பின்னர் 54 பேர் இறந்ததை உறுதி செய்தது, 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஜராமனாவில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 4 முறை குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.{காணொளி, புகைப்படங்கள்}







கண்டம் விட்டு கண்டம் பாயும் பாகிஸ்தானின் ஏவுகணை

 
அணு ஆயுதங்களை சுமந்து சென்று 1300 கிலோ மீற்றர் தூரம் சென்று தாக்ககூடிய அதிநவீன ஹத்ஃப்-5 ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. கோரி என்றழைக்கப்படும் ஹத்ஃப்-5 என்ற கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை பாகிஸ்தான் இராணுவம் வெற்றிகரமாக பரிசோதித்தது.
இந்த ஏவுகணை திரவ எரிபொருள் மூலம் இயங்கக்கூடியது. சாதாரண மற்றும் அணு குண்டை தாங்கிச் சென்று 1300 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது என்று பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் பாகிஸ்தானின் தடுப்புத்திறன் மற்றும் தேசியப் பாதுகாப்பை இச்சோதனை வலுப்படுத்தி உள்ளதாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் இந்த ஆண்டில் மட்டும் 60 கிலோமீற்றர் தூரம் சென்று தாக்கும் திறன் படைத்த ஹத்ஃப்-9 முதல் ஹத்ஃப்-4 வரை பல்வேறு அதிநவீன ஏவுகணைகளைச் சோதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.{காணொளி,}



செவ்வாய், 27 நவம்பர், 2012

ஜேர்மனியில் ஊனமுற்றோர் தொழிற்சாலையில் தீ விபத்து: 14 பேர் பலி (வீடியோ இணைப்பு)

ஜேர்மனியில் ஊனமுற்றோர் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். ஜேர்மனியின் பிளாக் பாரஸ்ட் என்னுமிடத்தில் உள்ள டிடிசீ நியூஸ்டட்டில் ஊனமுற்றோருக்கான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இங்கு 120 ஊனமுற்றோர்கள் மர மற்றும் இரும்பு சம்பந்தமான வேலைகள் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில், 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த மீட்பு படையினர், அங்கிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை.


வெள்ளி, 23 நவம்பர், 2012

16 வயதுப் பெண்ணின் தலையில் அறைந்து ரோட்டில் விழுத்திய ?

    
 
பெண்ணொருவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள நடைபாதையில் நடந்து செல்லும் போது நபர் ஒருவரின் அதிரடித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

அடிபட்ட அதிர்ச்சியில் குறித்த பெண் விழுந்த இடத்திலேயே மயக்கமாகியுள்ளார்.

இந்தக் காட்சிகள் சி.சி.ரி.வி கமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

கிழக்கு லண்டனின் Plaistow பகுதியில் மேற்படி துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண்ணை அடித்த குறித்த நபர் சாதாரணமாக நடந்து சென்றுள்ளார்.
 

  குறித்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக லண்டன் Scotland Yard பொலிஸ் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

16 வயதுப் பெண்ணைத் தாக்கிய 34 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கிழக்கு லண்டனின் Plaistow பிரதேசத்தின் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. சிறு காயங்களுடன் குறித்த பெண் தற்போது தேறி வருகின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் லண்டன் பொலிசாரின் குற்றவியல் பிரிவினரின் 020 8217 5890,,,,,ä or 0800 555 111தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்{காணொளி,}

திங்கள், 19 நவம்பர், 2012

துபாயில் 34 அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

{காணொளி, புகைப்படங்கள்}துபாயில் 34 அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. துபாயில் ஜுமிரா லேக் டவர்ஸ் என்ற 34 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக கட்டிடத்தில் தங்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டதால், யாருக்கும் காயம் ஏதுமில்லை.
ஆனால் கட்டிடத்தில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமாயின. தீ விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.




ஞாயிறு, 18 நவம்பர், 2012

காஸா பகுதி மீது 5வது நாளாக தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் (காணொளி இணைப்பு)

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் இன்று 5வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 8 குழந்தைகள் உட்பட 47 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர்ச்சியாக வான் வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் இயக்க மூத்த தளபதி ஜபாரி உயிரிழந்தார்.
ஹமாஸ் இயக்கத் தலைமையகம் மற்றும் ஹமாஸ் ஆதரவு தொலைக்காட்சி நிலையம் ஆகியவை நிர்மூலமாகின. இதில் 6 பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்தனர்.
காஸா பகுதியிலிருந்தும் பல நூறு ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று 5-வது நாளாக அதிகாலை முதலே வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல். இஸ்ரேலின் இந்த கொடுந்தாக்குதலுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்லும் போராட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலுக்கு எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

செவ்வாய், 13 நவம்பர், 2012

இலங்கையின் கொலைக்களங்கள் - குறுந்திரைப்படம் !

      By.Rajah.{,காணொளி}, இலங்கையின் இறுதிப்போரின் போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் படுகொலைகளை வைத்து தயாரிக்கப்பட்ட “இலங்கையின் கொலைக்களங்கள்” என்ற திரைப்படத்தை மையப்படுத்தி பிரித்தானியாவின் பட்டதாரி மாணவர்கள் நால்வர் குறுந்திரைப்படங்களை தயாரித்துள்ளனர்.
இதில் ஒரு குறுந்திரைப்படத்தை தயாரித்த கிறிஸ்டினா பிச்சி என்பவர், தாம் குறுந்திரைப்படத்தை தயாரித்த போது எந்த கட்டத்தையும் தேவையற்றது என்று தவிர்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தயாரிக்கப்பட்ட நான்கு குறுந்திரைப்படங்களும் லண்டனில் உள்ள சர்வதேச ஆவணப்பட கண்காட்சியின் போதும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டன.
அதனை பெருமளவானோர் பார்த்ததாக குறுந்திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்

புதன், 7 நவம்பர், 2012

வாக்களித்த மக்களுக்கு நன்றி: ஒபாமாவின் வெற்றி உரை

07.11.2012.By.Rajah{காணொளி.இணைப்பு)அமெரிக்கா ஜனாதிபதியாக பராக் ஒபாமா இரண்டாவது முறையாக தெரிவு செய்யப்பட்டார்.
நேற்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் ‌மிட் ரோம்னியை வீழ்த்தினார்.
ஒபாமாவுக்கு ஆதரவாக 303 வாக்குகளும், மிட் ரோம்னிக்கு ஆதரவாக 206 வாக்குகளும் பதிவாகி உள்ளன.
அமெரிக்காவில் சிறப்பான மாற்றம்
இந்நிலையில் தனது தேர்தல் கோட்டையான சிகாகோவில் ஒபாமா வெற்றி உரை ஆற்றினார்.
ஒபாமா சிறப்புரையை கேட்க இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். அப்போது அவர் தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்க குடிமக்களுக்கும் தனது நன்றியை கூறும் வகையில், தன்னை இந்த உயரத்தை அடைய செய்த மக்களுக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என தெரிவித்தார்.
அமெரிக்கா சாதிக்க வேண்டியவை இன்னும் நிறைய இருப்பதாக கூறிய ஒபாமா, சிறப்பான முன்னேற்றங்கள் பலவற்றை அடைய அமெரிக்க மக்கள் காத்திருப்பதாக தெரிவித்தார்.
முன்னேற்றப் பாதையை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாகச் செல்வோம் என வேண்டுகோள் விடுத்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ரோம்னியுடனான போட்டி சவால் நிரம்பியதாக இருந்தது.
அமெரிக்காவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல ரோம்னியுடைய ஆதரவும் கிடைக்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
குடியரசுக் கட்சியுடன் இணைந்து அமெரிக்க நிதி நெருக்கடியை சமாளிக்க திட்டங்கள் தீட்டப்படும் என்றார்
சவால்களை சமாளிப்பார் ஒபாமா பத்திரிகையாளர்களிடம் ரோம்னி கூறுகையில், மக்கள் ஒபாமாவை தலைவராக தெரிவு செய்துள்ளார்கள். அவருக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். என்னுடன் கடுமையாக உழைத்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அமெரிக்கா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை ஒபாமா சமாளிப்பார் என நம்புகிறேன். அமெரிக்கா மீது கொண்ட அக்கறை காரணமாக நான் தேர்தலில் போட்டியிட்டேன். இந்த நேரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை என கூறினார்

திங்கள், 5 நவம்பர், 2012

கனடா அரசின் புலம்பெயர்வு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ?

05.11.2012.By.Rajah.கனடிய அமைச்சரின் புலம்பெயர்வு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
கனடாவின் டொரண்டோ நகரில் உள்ள ராயல் யார்க் ஹோட்டலில் குடியுரிமை மற்றும் புலம்பெயர்வுதுறை அமைச்சர் ஜேசன் கென்னிக்கு இஸ்ரேலின் ஹைஃபா பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

அப்போது ஹோட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போராட்டக்காரர்கள் அரசின் புலம்பெயர்வு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், "கென்னி ஒழிக", "யாரும் சட்டவிரோதமான நபர்கள் கிடையாது" போன்ற பதாகைகளை ஏந்தியபடியும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கென்னி யூத எதிர்ப்பையும், இனவாதத்தையும், இனப்பகையையும் தொடர்ந்து வன்மையாக எதிர்த்து வருவதால் டாக்டர் பட்டம் வழங்குவதாக இஸ்ரேல் பல்கலைகழகம் அறிவித்துள்ளது.