siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

பாதை இடிந்தது! உள்ளே சிக்கிய கார்கள் எரிகின்றன! மூவர் பலி

ஜப்பானில் டோக்கியோ நோக்கி செல்லும் tunnel பாதை ஒன்று இன்று காலை இடிந்து விழுந்ததில், உள்ளே சில கார்கள் சிக்கிக் கொண்டன. இந்தக் கார்களையும், அதற்குள் உள்ளவர்களையும் மீட்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெறுகின்றன. இந்த tunnel வாயில் ஊடாக புகை வெளிவந்து கொண்டிருப்பதால், உள்ளே சிக்கிக் கொண்ட கார்கள் தீப்பிடித்து எரிகின்றன என ஊகிக்கப்படுகிறது.
Sasago tunnel என்ற இந்த மோட்டார் பாதை, சுவோ எக்ஸ்பிரஸ்-வே பாதையில் உள்ளது. இன்று காலை 8 மணிக்கு இந்த விபத்து நடந்தது. தலைநகர் டோக்கியோ நோக்கிச் செல்லும் பாதை மிகவும் போக்குவரத்து நெருக்கடியானது என்ற போதிலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதிக கார்கள் இல்லை.
சுமார் 5 கார்கள் உள்ளே சிக்கியிருக்கலாம் எனவும், மூவர் உயிரிழந்துள்ளதாகவும் ஜப்பானிய டி.வி. சேனல், கியோடோ நியூஸ் தெரிவிக்கிறது{காணொளி, புகைப்படங்கள்}.







0 comments:

கருத்துரையிடுக