siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

நிலநடுக்கம்: கடல் அலைகள் அதிக உயரத்திற்கு எழும்பியதால் அதிர்ச்சி

 
நியூசிலாந்து அருகே பசிபிக் கடலில் உள்ள வனாது தீவுகளில் சர்வதேச நேரப்படி இன்று காலை 6.24 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில் 66 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் உருவாகியுள்ளதன் காரணமாக வழக்கத்தைவிட அதிக உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பின.
இதனால் சுனாமி ஏற்படும் என பொதுமக்கள் அஞ்சினர். ஆனால் அது போன்ற எச்சரிக்கைகள் எதுவும் விடுவிக்கப்படவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
எனவே, பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை

0 comments:

கருத்துரையிடுக