siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 21 மே, 2013

இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்:?

பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Lexington நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில், பிணவறை ஊழியராக 38 வயதுடைய பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார்.
வழமையாக மருத்துவமனை ஊழியர்களுக்கு செய்யும் மருத்துவ பரிசோதனையில், குறித்த பெண் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவரது நடவடிக்கைகளில் ஏற்கனவே, நிர்வாகத்துக்கு சந்தேகம் இருந்து வந்த நிலையில், இவரது கர்ப்பம் தொடர்பில் பொலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பொலிஸ் விசாரனையில்,வைக் குறித்த திடுக்கிடும் சம்பவம் வெளிவந்தது. அப்பெண் தனது வாக்கு மூலத்தில், தான் பிணவறையில் வேளை செய்து கொண்டிருந்தபொழுது, திடீர் மரணமான ஆணின் சடலம் ஒன்று வந்ததாகவும், அப்போது தனக்கு தோன்றிய சபல எண்ணத்தால், அப்பிணத்துடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாகவும், இதனால் தான் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார்.
பிணத்தின் மூலம் கர்ப்பமாவதன் சாத்தியத்தன்மை தொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள பொலிசார், குறித்த பெண்ணின் வாக்குமூலத்துக்கு அமைய அப்பெண் மீது வழக்கு பதிவு செய்து நீமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றம் அப்பெண்ணுக்கு $250,000 பிணை விதித்து தீர்ப்பளித்தது.

6.0 அளவிலான நிலநடுக்கம்


ரஷ்யாவை 6.0 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று தாக்கியது.அந்நாட்டின் தீபகற்ப பகுதியான காம்சட்காவில் இந்திய நேரப்படி இன்று காலை 6.55 மணியளவில் இது ஏற்பட்டது. இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் பெட்ரோபவ்லோவ்ஸ்க் நகரத்தில் இருந்து 136 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் ?


இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லைப் புற துணைப்படையில் பணிபுரிந்த ஒருவர் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவருடைய கணக்கில் பணம் இல்லை என்பதினால் வங்கி அதிகாரிகளிடம் அதிகப்பற்றில் (ஓவர்டிராப்ட்) பணம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் மறுத்து விட்டதினால் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க முயன்றுள்ளார். அங்கும் அவருக்கு பணம் வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவர், வங்கியின் காவலாளியை முதலில் துப்பாக்கியால் சுட்டுக் கொலைச் செய்துள்ளார். அதன் பின்னர் வங்கியின் உள்ளே நுழைந்து அவர் கண்மூடித்தனமாக அங்கிருந்த மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.
இதனால் அவரை மற்றவர்கள் பிடிக்க முயற்சி செய்ததில் ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்த பெண் ஒருவரைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்திருந்தார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் பொலிசார் வங்கிக்குள் நுழைந்தனர். அப்போது அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துவிட்டார்.
வங்கியில் பணம் கிடைக்காததால் ஒருவர் 4 பேரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.
 

செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி:

 
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.
 இதன் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகுளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சரகோட்டா நகரில் வாழ்ந்துவரும் 18 வயதான ஈஷா கரே என்ற பெண் இந்த சாதனையைப் புரிந்துள்ளார்.
இதற்காக, இண்டெல் அறக்கட்டளை அளித்த இளம் விஞ்ஞானி விருதினையும் பெற்றுள்ளார். இந்தக் கருவியை மேம்படுத்த அமெரிக்க அரசு இவருக்கு 50,000 டாலர் நிதி உதவியும் அளித்துள்ளது.
தன்னுடைய செல்போனின் பாட்டரி அடிக்கடி சார்ஜ் செய்யும் நிலை ஏற்பட்டதே தன்னுடைய இந்த கண்டுபிடிப்பிற்கு தூண்டுகோலாக இருந்தது என்று ஈஷா குறிப்பிட்டுள்ளார்
சாதரணாமாக 1000 முறை பயன்படுத்தக் கூடிய பாட்டரிகளைப் போல் இல்லாமல், தன்னுடைய கருவியை 10,000 முறை சார்ஜ் செய்யப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கின்றார்.
இந்த பாட்டரி சிறு மின்விளக்குகளில் பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாகவும், செல்போன் போன்ற மின்சாதனப் பொருட்களில் இவற்றின் பயன்பாடு வெற்றிகரமானதாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
 

ஆராய்ச்சியாளர்கள் மூவர் லஞ்சம் பெற்ற?

 
அமெரிக்காவின் நியுயார்க் பல்கலைக் கழகத்தில், அமெரிக்க அரசின் நிதி உதவி பெற்று, காந்த ஒத்திசைவு குறித்த ஆராய்ச்சி ஒன்றில், மூன்று சீன நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல்களை வெளியிட, அரசு நிதி உதவி பெறும் சீன ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திங்களன்று, மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் யுடாங் சூ(44), சிங் யாங்(31 ), யீ லீ (31) ஆகிய மூன்று சீன ஆராய்ச்சியாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
யுனைடட் இமேஜிங் ஹெல்த்கேர் என்ற சீன ஆராய்ச்சி நிறுவனம் அந்த நாட்டின் நிதி உதவி பெற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆராய்ச்சி குறிப்புகளை அவர்களுக்கு அளித்ததாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையும், வழக்கறிஞர்களும் வாதிட்டனர்.
தீவிர குற்றமான இதனை, அரசு ஒருபோதும் மன்னிக்காது என்று பிரீத் பராரா என்ற அரசாங்க வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.
இதில், யுடான் சூ, சிங் யாங் ஆகிய இருவரும், ஞாயிறு அன்று நியுயார்க்கில் அவர்கள் வசித்து வந்த வீட்டில் கைது செய்யப்பட்டனர். யீ லீ பிரச்சினைகள் எழும்முன்னரே சீனாவிற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகின்றது. இது குறித்து குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவின் வணிக ரகசியங்களை சீனா மறைமுகமாக அபகரிக்கின்றது என்ற குற்றச்சாட்டு அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது