siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 21 மே, 2013

பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் ?


இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லைப் புற துணைப்படையில் பணிபுரிந்த ஒருவர் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவருடைய கணக்கில் பணம் இல்லை என்பதினால் வங்கி அதிகாரிகளிடம் அதிகப்பற்றில் (ஓவர்டிராப்ட்) பணம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் மறுத்து விட்டதினால் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க முயன்றுள்ளார். அங்கும் அவருக்கு பணம் வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவர், வங்கியின் காவலாளியை முதலில் துப்பாக்கியால் சுட்டுக் கொலைச் செய்துள்ளார். அதன் பின்னர் வங்கியின் உள்ளே நுழைந்து அவர் கண்மூடித்தனமாக அங்கிருந்த மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.
இதனால் அவரை மற்றவர்கள் பிடிக்க முயற்சி செய்ததில் ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்த பெண் ஒருவரைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்திருந்தார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் பொலிசார் வங்கிக்குள் நுழைந்தனர். அப்போது அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துவிட்டார்.
வங்கியில் பணம் கிடைக்காததால் ஒருவர் 4 பேரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.
 

0 comments:

கருத்துரையிடுக