siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 4 ஜனவரி, 2013

பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு தூக்கு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2012 மார்ச் மாதம் திருவனந்தபுரத்தில் 15 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் ராஜேஸ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றவாளியான ராஜேஸ் குமாருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருவனந்தபுரம்...

குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்கள்:

பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இக்குற்றங்களுக்கெதிராக பெருமளவில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இந்நிலையில், பிரமிளா சங்கர் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பெண்களுக்கெதிரான குற்றங்களில் வழக்கை எதிர்நோக்கும் எம்.பி. மற்றும்...

டெல்லி மாணவி மரணம்: மைனர் தப்பிக்க வாய்ப்பு

டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவர் என்பதால் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. குறித்த இளைஞர் இன்னமும் ஐந்து மாதங்களில் 18 வயதை அடைந்துவிடுவார். எனினும் அவர் 18 வயதை அடைய முன்னரே குற்றம் செய்திருப்பதால் அதிக பட்சமாக மூன்று வருட தண்டனையே கொடுக்க முடியும். அதுவும் சிறுவர் சீர் திருத்த பள்ளியிலேயே அனுமதிக்க முடியும். 18 வயதை கடந்த இளைஞர்களுக்கு மட்டுமே சிறைத்தண்டனை...

இளம்பெண்ணை கற்பழித்த காங்கிரஸ் பிரமுகருக்கு பொதுமக்கள் அடி ?

அசாமில், திருமணமான பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த, காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.சிராங் மாவட்டத்தில், காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவர், விக்ரம் சிங் பிரம்மா. நேற்று முன்தினம் இரவில், வீடு புகுந்து, பெண் ஒருவரை கற்பழித்து விட்டார். நேற்று காலையில் இந்த விவகாரம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அந்த வழியாக வந்த விக்ரம் சிங்கை, பொதுமக்கள் முற்றுகையிட்டு, தாக்க துவங்கினர்.தகவல் அறிந்து வந்த போலீசார்,...

முதன்முறையாக ஆண்மை நீக்க தண்டனை. தென்கொரிய

 தென் கொரியாவில், செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்ட வாலிபருக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில், செக்ஸ் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் நடைமுறை உள்ளது. ஆசிய நாடுகளில் இந்த தண்டனை கிடையாது. டில்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு, இந்த முறையில் தண்டனை அளிக்க பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால், பல்வேறு...