
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாயலுக்கு முன்பாக அமைந்துள்ள சிராஜிய்யா அரபுக்கல்லூரிக்கு இன்று வியாழக்கிழமை அதிகாலை 03.30 மணியளவில் இனந்தெரியாத குழுவொன்றினால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அரபுக்கல்லூரியின் மேல் மாடியில் அமைந்துள்ள அதிபர் அலுவலகம், மாணவர்களின் படுக்கறை விடுதி, விடுதியிலுள்ள பொருட்கள், மாணவர்களின் ஆடைகள், கணனிகள்; உள்ளிட்ட சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க...