siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

சுவாசிலாந்து நாட்டில் குடியுரிமை நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதி தற்கொலை முயற்சி

13.08.2012.சுவாசிலாந்து அரசாங்கம் குடியுரிமை வழங்க மறுத்தமையால் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். மேபானில் வசிக்கும் நவரத்னம் மதன் (34)  என்பவர் தனது கோரிக்கையினை முன்வைத்து அந்நாட்டு அரசருக்கு கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் எழுதியிருந்தார். ஆயினும் அதற்கான பதில் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. மதன் 2003ம் ஆண்டு சுவாசிலாந்து நாட்டிற்கு வருகை தந்தார். ஆகஸ்ட் 17 2004 ஆண்டு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. இவர் தன்னுடைய மாமாவுடன் வசித்து...

ராசி பலன் 13-08-2012

மிகவும் பலன் தரும் ராசி பலன்ஓர் காணொளி கட்சி ...

பெண்கள் எந்த நேரத்தில் என்ன நகை அணியலாம்!! நிபுணர்கள்

13.08.2012.உடுத்தும் உடைகளுக்கு ஏற்ப இன்றைக்கு நகைகளை அணியும் பழக்கம் அதிகரித்து வருகிறது. வீட்டில் நகை இருக்கிறதே என்பதற்காக அள்ளிப் போட்டுக்கொண்டு போவது அழகையே மாற்றிவிடும். அது ஆபத்தானதும் கூட. எனவே எந்த நேரத்தில் என்ன நகைகளை அணியலாம் என்பதை தெரிவித்துள்ளனர் அழகியல் நிபுணர்கள். நகைகளைத் தேர்வு செய்யும் பொழுது உங்கள் வயதைக் கவனத்தில் கொள்வது அவசியம். வயதானவர்கள் அளவில் பெரிய நகைகளையும், சிறியவர்கள் சின்னநகைகளையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும்....

சினேகா, பரத்துக்கு இந்து மகாசபா கண்டனம்

13.08.2012.தமிழ்நாடு இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இந்து மதம் பாரம்பரிய பெருமைகள் பலவற்றைக் கொண்டுள்ளது. சேவை மனப்பான்மையுடன் இந்து மக்களுக்காக ஏராளமான பொதுச்சேவைகள் செய்து வருகிறோம். அண்மையில் காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த விழாவொன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க நடிகர் பரத்தை மாணவர்கள் அழைத்தனர். ஆனால் அந்த விழாவில் பங்கேற்க பரத் ரூ.5 லட்சம் கேட்டாராம். அதிர்ந்து போனோம். பரத்தை டெலிபோனில்...

புதுமுகங்கள் நடிக்கும் த்ரில்லர் படம் ‘சௌந்தர்யா’!

13.08.2012.புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும் புதிய த்ரில்லர் படம் சௌந்தர்யா, விரைவில் ரசிகர்களை மிரட் வருகிறது.ஏ.பி‌.சி‌. ட்‌ரீ‌ம்‌ஸ்‌ எண்‌டர்‌டெ‌ய்‌னர்‌ஸ்‌ தயா‌ரி‌க்‌கும்‌ பு‌தி‌ய படம்‌ ‘செ‌ளந்‌தர்‌யா’‌. இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ கதை‌ எழுதி‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌து‌ உள்‌ளா‌ர்‌ சந்‌தி‌ரமோ‌ஹன்‌. பு‌துமுகங்‌கள்‌ கோ‌வி‌ந்‌த்‌, கி‌ல்‌லர்‌ கா‌சி‌ம்‌, ரி‌த்‌தூ‌ஸன்‌, சா‌ரதி‌, சந்‌தோ‌ஷ்‌, வி‌னி‌த்‌ வி‌னு, சஞ்‌சுகொ‌ட்‌டே‌ரி‌ என்‌று பலர்‌ நடி‌க்‌க, இவர்‌களுடன்‌...

தம்மடிக்க இனி தடையில்லை!

13.08.2012.உலகில் புகைப்பிடிக்கும் பழக்கம் வேகமாக அதிகரித்து வருவதால், பல மாநில அரசாங்கங்களும் பொதுமக்களின் நலன்கருதி புகைப்பிடிக்கும் பழக்கத்தி நிறுத்தக்கோரி மக்களுக்கு அறிவுரை வழங்கியும், தங்களது மாநிலங்களில் புகையிலை பொருட்களை தடை செய்தும் வருகிறது. திரைப்படங்களில் பிரபல நடிகர், நடிகைகள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வருவதால் ரசிகர்களாகிய இளைஞர்கள் சிறு வயதிலேயே அவற்றை கற்றுக்கொண்டு பாதிக்கப்படுகின்றனர் என்று சமூக நல ஆர்வலர்கள் கூறிவந்தனர்....

ராட்டினம் | திரைப்பட விமர்சனம்

13.08.2012.தமிழக சினிமா விமர்சனங்கள் சமீபத்தில் திரைப்படங்களின் தரத்தை அளவுக்கு அதிகமாக புகழ்ந்து வருகின்றன. ஒரு கல் ஒரு சினிமா என்ற சாதாரண படத்தை தேவையில்லாமல் எழுதி அப்படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தின. மேலும் வழக்கு எண் 18 – 9 என்ற ஒரு தடவை மட்டும் சலிப்பின்றிப் பார்க்கக்கூடிய படத்தை அளவுக்கு மிஞ்சிய மதிப்பீடு கொடுத்து ரசிகர் எதிர்பார்ப்பை வீழ்த்தின. எப்போதுமே ஒரு படத்தின் உண்மையான தரத்திற்கு பத்து வீதம் குறைவாகவே விமர்சனம் எழுதப்பட வேண்டும்....

கமல், ஸ்ரீதேவி, மீனா ஆகியோர் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த ரகசியம்!

13.08.2012.நான்கு வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் கமல்ஹாசன். “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே…” பாடல் காட்சியை படம் பண்ணும்போது ஒரு ஷாட் எடுத்து விட்டு அடுத்த ஷாட்டிற்கு தேடினால் ஆள் இருக்கமாட்டான். சினிமா மீது அவருக்கு அப்பொழு‌தே ஆர்வம் அதிகம். அதனால் ஏ.வி.எம். ஸ்டுயோவிற்குள் இருக்கும் ப்ரிவியூ தியேட்டரில் ஏதாவது ஒரு படத்தை பார்க்க பறந்திருப்பான். உள்ளே படவேலைகள் நடந்து கொண்டிருக்கும். ஏதாவது...

ஸ்ருதி ஹாசனின் கையில் காதல் சின்னம்

13.08.2012.காதல் சின்னத்தை தன் கையில் டாட்டூவாக வரைந்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். பிரபு தேவா பெயரை தனது கையில் டாட்டூவாக போட்டுக் கொண்டார் நயன்தாரா. அவரைத் தொடர்ந்து பாலிவுட் காதலன் பிரதீக் பெயரை மதராசபட்டினம் கதாநாயகி எமி ஜாக்ஸன் பச்சை குத்திக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசனும் காதலின் சின்னமான ரோஜா மலரை கையில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். டோலிவுட்டில் அவர் நடித்த கப்பர் சிங் படம் ஹிட்டானதை தொடர்ந்து விளம்பர படங்களில்...

’மனைவியாக இருக்க விருப்பமில்லை’ – சினேகா அதிரடி!

13.08கடந்த ஞாயிற்றுக்கிழமை(29.07.12) ”சென்னை சர்வதேச ஃபேஷன் வார விழா” சென்னையில் நடந்தது. மாடலிங் துறையைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். சினிமா நட்சத்திரங்களான சினேகா, பிரசன்னா, கார்த்திகா நாயர், அஜ்மல், மகத், லட்சுமிராய் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். சினேகாவும் பிரசன்னாவும் சென்ற வருடமே இவ்விழாவில் கலந்துகொண்டு ஜோடியாக நடந்துவந்தனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் அப்போது காதல் இருந்தது யாருக்கும் தெரியாது. புதுமணத்தம்பதிகளான...

கணவனின் 3வது திருமணத்தை நிறுத்திய 2வது மனைவி

13.08.2012.ஏற்கெனவே திருமணம் செய்த பெண்ணை ஏமாற்றி மூன்றாவதாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றவர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் மனைவி. திருமணத்தை நிறுத்திய போலீஸார், தொடர்புடைய நபர் மற்றும் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி சண்முக குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகத்தாய் (வயது 28). இவரது கணவர் ஊமைத்துரை. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ஏற்கெனவே ஒரு பெண்ணைத் திருமணம்...

மன்னாரில் இருந்து “யம்மா யம்மா காதல் பொன்னம்மா” (வீடியோ இணைப்பு)

13.08.2012. யம்மா யம்மா காதல் பொன்னம்மா என்ற பாடலை மன்னாரில் இருந்து இளைஞர்கள் காட்சிப்படுத்தி உள்ளனர்.         ...

தெனாலிராமனாக வருகிறார் வடிவேலு!

13.08.2012.அரசியல் புயலில் சிக்கியதால், சில காலம் சினிமாவை விட்டே ஒதுங்கிய வைகைப் புயல் வடிவேலு, மீண்டும் களத்தில் குதிக்கப் போவதாக சொல்கிறார். அடுத்து சினிமாவில் நடித்தால், ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னை வைத்து, “இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற படத்தை இயக்கிய சிம்புதேவன், ஏற்கனவே ஒரு, “ஸ்கிரிப்ட் தயார் செய்து, அதை படமாக்க தயாராகி வருகிறார். இந்த நிலையில், தற்போது புதுமுக டைரக்டர் ஒருவர், “தெனாலிராமன் என்ற தலைப்பில்,...

சிவாஜியின் பேரன் சிவாஜி தேவ் நடிக்கும் 21ம் நூற்றாண்டின் காதலைச் சொல்லும் படம் – நந்தனம்

13.08.2012.சுபா கிரியேசன்ஸ் எஸ். தங்கராஜ் தயாரிக்க… N. C . ஷியாமளன் இயக்கத்தில் செவாலியே சிவாஜியின் பேரன் சிவாஜி தேவ் – மித்ரா குரியன் நடிக்கும் நந்தனம்.காதல் பலவிதத்தில் சினிமாவில் கையாளப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் காதலிக்க ஏழு வருடங்கள் தேவையில்லை. ஏழு நாட்கள் போதும்…என்ற கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் படம்தான் நந்தனம்.இன்றைய பெண்களும் சரி பசங்களும் சரி வாழ்க்கையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை முன்னிறுத்தியே தங்கள்...

கொழும்பு கல்கிஸையில் விபசார விடுதி முற்றுகை! அறுவர் கைது!

13.08.2012.விபசார உலகின் முக்கிய தளமாக இலங்கை மாற்றப்பட்டு வருகின்றதோ என்ற கவலை பலரின் மனதில் எழுந்துள்ளது.காலி வீதி கல்கிஸ்ஸையில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் செயற்படுத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.இந்த விபச்சார விடுதியை இயக்கியவரும் அதில் விபச்சாரிகளாக தொழில் புரிந்த 6 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கல்கிஸ்ஸை குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் பெற்றுக் கொண்ட உத்தரவு ஒன்றிற்கு அமைய நேற்று (11) மாலை...

ரூ.5 ஆயிரம் கோடியில் வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஹெலிகொப்டர்கள் வாங்க திட்டம்

13.08.2012. இந்திய கடற்படையை நவீனமயமாக்கும் நோக்கத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 900 ஹெலிகொப்டர்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. உலக அளவில் ஹெலிகொப்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் போயிங், பெல், சிகோர்ஸ்கை, காமோவ், ஈரோகாப்டர், அகஸ்டர் வெஸ்ட்லேண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு இதற்கான டெண்டருக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டரின் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாகும். முதற்கட்டமாக ரோந்து பணி, தீவிரவாத எதிர்ப்பு, நிவாரண பணி, நீர்மூழ்கி கப்பல் அழிப்பு...

நல்லூர் திருவிழாவுக்கு வந்த பெண் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

13.08.2012. நல்லூரில் நேற்று நடைபெற்ற கைலாசவாகனத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வரணியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். நேற்றுமாலை 4 மணியளவில் மட்டுவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் தனது குடும்பத்தாருடன் வந்துகொண்டிருந்த வேளை பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் அதன் சில்லுக்குள் அகப்பட்டு குறித்த பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.இந்தச் சம்பவத்தில் திருகோணமலை கக்விசன் வீதியைச் சேர்ந்த...

ஈழத்தமிழர் காவியம் படைக்காமல் ஓயேன்; வைரமுத்து சபதம்

13.08.2012.  கவிஞர் வைரமுத்து எழுதிய "மூன்றாம் உலகப் போர்'' என்னும் நூலைத் திறனாய்வு செய்த வைரமுத்துவின் மகன் கபிலன், இதுவரை எத்தனையோ இலக்கியங்கள், கவிதைகள், நூல்கள் படைத்த என் தந்தைக்கு இந்த விழா மூலம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அவர் ஈழத் தமிழர்களின் அவலம் குறித்து ஒரு காவியம் எழுத வேண்டும். அது அவர்களின் பிரச்சினைகளை உலகுக்கு உணர்த்துவதாக அமைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.கடந்த 4 ஆம் திகதி தேனியில் நடைபெற்ற கவிஞர் வைரமுத்து எழுதிய...

20000 பொலிஸார் பாதுகாப்பில் மூன்று மாகாண சபைத் தேர்தல்

13.08.2012.அடுத்த மாதம் நடைபெறவுள்ள கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் 20 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் செயலகத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் கண்காணிப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். குறித்த மாகாணங்களில் தேர்தல் தொடர்பில் சிறிய சம்பவங்கள் சிலவே...

.பிறமாவட்டங்களுக்குச் செல்லும் அரச பஸ்களில் உள்ளூர் பயணிகள்; இ.போ.ச. வடபிராந்திய

13.08.2012.    யாழ். நகரிலிருந்து பிறமாவட்டங்களுக்குச் செல்லும் அரச பஸ்களிலும் சரி பிறமாவட்டங்களிலிருந்து யாழ். நகருக்குவரும் அரச பஸ்களிலும் சரி உள்ளூர் பயணிகள் பயணிக்கமுற்பட்டால் அவர்களை ஏற்றிச் செல்லல் வேண்டும். பயணிகளை ஏற்றாமல் சென்று அவர்களுக்கு போக்குவரத்து நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடாது என்று இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸ்ஹர் தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:யாழ்ப்பாணத்துக்கும்...

படையினரின் ஆதரவுடனேயே வேட்பாளர்கள் மீது தாக்குதல்; அரியநேத்திரன் குற்றச்சாட்டு

13.08.2012. மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானின் ஆதரவாளர்களும் அவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்தோருமே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.  இவர்களின் அச்_றுத்தல் நடவடிக்கைகளுக்கு படையினரும், பொலிஸாரும் ஆதரவாக உள்ளனர். இவ்வாறு குற்றஞ்சாட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.அத்துடன், நடைபெற இருக்கின்ற...

போர்க் குற்றவாளிகள் மீது உடன் நடவடிக்கை தேவை

13.08.2012.இலங்கையில் நடந்தேறிய இறுதிப்போரின்போது தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகள் மீது ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கையை உடன் எடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா. மூலம் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் இவ்வாறு சென்னையில் நேற்று நடைபெற்ற டெசோ மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.சென்னை ராயப்பேட்டை வை.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட...