siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

நல்லூர் திருவிழாவுக்கு வந்த பெண் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

13.08.2012.

 நல்லூரில் நேற்று நடைபெற்ற கைலாசவாகனத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வரணியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

நேற்றுமாலை 4 மணியளவில் மட்டுவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் தனது குடும்பத்தாருடன் வந்துகொண்டிருந்த வேளை பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் அதன் சில்லுக்குள் அகப்பட்டு குறித்த பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தில் திருகோணமலை கக்விசன் வீதியைச் சேர்ந்த திருகோணமலை பிரதேச செயலகத்தில் எழுதுநராகப் பணியாற்றும் திருமதி செந்தில்நாதன் வைதேகி (வயது37) என்ற குடும்பப் பெண்ணே பலியானவர் ஆவார்.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் வந்த ஹன்ரர் வாகனம் முந்திச் செல்ல முற்பட்ட வேளை வாகனத்திச் சில்லுக்குள் அகப்பட்டே இவர் மரணமாகியுள்ளதாகவும் இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இவரது கணவன் மற்றும் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக