siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 29 டிசம்பர், 2012

இந்தியாவின் வீரமகள் இறந்துவிட்டாள்: ஜனாதிபதி ?

இந்தியாவின் வலிமை மிக்க இளைய சமுதாயத்தின் அடையாளமாக திகழ்ந்த வீரமகளை நாடு இழந்து விட்டதென ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்காகவும் கவுரவத்துக்காகவும் கடைசி நிமிடம் வரை தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் அந்த மாணவி போராடினார்.
இந்தியாவின் வலிமை மிக்க இளைய சமுதாயத்தின் அடையாளமாக, உண்மையான முன்மாதிரியாக திகழ்ந்த இந்தியாவின் வீரமகளை இழந்த இந்த நாடு துயரப்படுகின்றது.
துரதிர்ஷ்டவசமாக அவரை இழந்து துயரப்படும் குடும்பத்தினர் இந்த இழப்பை தாங்கும் வலிமையை பெற பிரார்த்திக்கின்றேன்.
அதே வேளையில், அவரது மரணம் வீணாகிப் போகும் என்ற முடிவுக்கு நாம் வந்து விடக்கூடாது.
இதை போன்ற சம்பவம், இனி எப்போதுமே ஏற்படாது என்ற பாதுகாப்பை தருவதற்கு தேவையான அனைத்தையும் நாம் செய்வோம் என்று தனது அனுதாப செய்தியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இதேவேளையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் இரங்கல் தெரிவித்திருப்பதுடன் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கிடைக்க வழி செய்வோமென கூறியுள்ளனர்.

அமெரிக்கர்கள் தத்து எடுப்பதை தடுக்கும் புதிய சட்டம். புதின் அதிரடி


 

ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்து எடுப்பதை தடுக்கும் புதிய சட்டம் ஒன்று ரஷியாவில் கொண்டு வரப்பட்டது. இதில் ஜனாதிபதி புதின் நேற்று கையெழுத்திட்டார். இது ஜனவரி 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
இந்த தகவலை மாஸ்கோவிலுள்ள ஜனாதிபதி மாளிகை தெரிவித்தது. மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் ரஷியர்களை தண்டிக்கும் சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்து இருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ரஷியா தற்போது இந்த புதிய சட்டத்தை இயற்றி இருக்கிறது.
இதன் மூலம் இரு நாடுகள் இடையே உறவு பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது

ஆங்சான் சூகி பயன்படுத்திய கம்பளி ரூ.25 லட்சத்துக்கு ஏலம்

.
 
மியான்மர் எதிர்க்கட்சியின் தலைவர் ஆங்சான் சூகி. நாட்டில் ஜனநாயகம் வேண்டி ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடினார். எனவே அவர் சுமார் 18 ஆண்டுகள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார்.
சமீபத்தில் விடுதலையான இவர் தற்போது உலக நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இவர் தனது கட்சி வளர்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சி திட்டத்துக்காக நிதி திரட்டி வருகிறார்.
இதற்காக அவர் தனது கம்பளி ஆடையை ஏலத்தில் விட்டார். சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறத்தில் 'வி' வடிவிலான கழுத்து அமைப்பை கொண்ட அந்த ஆடை ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது. அதை மியான்மரின் தனியார் 'எப்.எம். ரேடியோ' நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.
யங்கூனில் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதும் போராட்டங்களின் போதும் இந்த கம்பளி ஆடையை பயன்படுத்தியுள்ளார்

காணாமல் போன குழந்தை 3 ஆண்டுகளுக்கு பின் மீட்பு


காணாமல் போன குழந்தை 3 ஆண்டுகளுக்கு பின்பு திரும்ப கிடைத்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆத்யா அஞ்சும் வில்கின்சன் என்ற சிறுமி மூன்று வயதாக இருக்கும் போது, காணமால் போய்விட்டார்.
இதனையடுத்து ஆத்யாவை, அவரது தந்தை அழைத்து சென்றது தெரியவந்தது. பின் குழந்தையை பார்க்க வேண்டும் என தாய் கெஞ்சி கேட்டும், மறுத்து விட்டார்.
இதனால் கோபமடைந்த பெண், கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
உடனே இவருக்கு சிறைத்தண்டனை விதித்து, குழந்தை கண்டுபிடிக்கும்படி பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இச்சிறுமி பாகிஸ்தானில் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே பாகிஸ்தானிலிருந்து மென்செஸ்டருக்கு அழைத்து வரப்பட்ட சிறுமியை, தாய் கண்ணீர் மல்க வரவேற்றார்.
அவர் கூறுகையில், ஆத்யாவை கடந்த 2009ஆம் ஆண்டில் தான் பார்த்தேன். அதன் பின்பு மூன்றாண்டுகள் கழித்து பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டில் கணவன்- மனைவி இருவரும் விவாகரத்து செய்ததே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





வர்த்தகர்களை நோக்கி வெள்ளை வான்


கண்டி முத்துமாரி ஸ்டோர்ஸ் உரிமையாளர் கோவிந்தசாமி அருணாச்சலம் பிரபாகரன் என்பவர் இனந்தெரியாத நபர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார்.

இந்த கடத்தல் சம்பவம் நேற்று (28) இரவு 9.40 அளவில் இடம்பெற்றுள்ளதென தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக சிவில் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மலபார் வீதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளை கம்பளை பகுதியில் வைத்து இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடத்தப்பட்டவர் 56 வயதுடைய கோவிந்தசாமி அருணாச்சலம் பிரபாகரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்

சுவிஸில் நாய், பூனைக்கறி சாப்பிடும் விவசாயிகள்

சுவிட்சர்லாந்தின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் நாய் மற்றும் பூனை இறைச்சிகளை சாப்பிடுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உலகில் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் நாய், பூனை சாப்பிடுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
சுவிஸ் குளிர்பிரதேசம் என்பதால் அங்குள்ள மக்கள் இறைச்சியை பெரும்பாலும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
ஆனால் நாய், பூனை என்பது வீட்டின் செல்லப்பிராணிகள், இதன் இறைச்சிகளை சாப்பிடுவதை சமூகம் ஏற்றுக்கொள்ளாது.
சுவிஸில் அல்பென்ஸெல் மற்றும் செயிண்ட் கேலன் மாநிலங்களில் வாழும் விவசாயிகள் இந்த பிராணிகளை அதிகம் விரும்பி உண்கின்றனர்.
இது குறித்து அவர்கள், இறைச்சி என்றால் ஆடு, மாடு, பூனை, நாய் என்ற வேறுபாடு கிடையாது என்றார்.
சுவிஸில் இதை தடுக்கும் படியான அதிகாரப்பூர்வ சட்டமேதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.