siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 29 டிசம்பர், 2012

இந்தியாவின் வீரமகள் இறந்துவிட்டாள்: ஜனாதிபதி ?

இந்தியாவின் வலிமை மிக்க இளைய சமுதாயத்தின் அடையாளமாக திகழ்ந்த வீரமகளை நாடு இழந்து விட்டதென ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது உயிருக்காகவும் கவுரவத்துக்காகவும் கடைசி நிமிடம் வரை தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் அந்த மாணவி போராடினார். இந்தியாவின் வலிமை மிக்க இளைய சமுதாயத்தின் அடையாளமாக, உண்மையான முன்மாதிரியாக திகழ்ந்த இந்தியாவின் வீரமகளை இழந்த இந்த நாடு துயரப்படுகின்றது. துரதிர்ஷ்டவசமாக அவரை இழந்து துயரப்படும் குடும்பத்தினர்...

அமெரிக்கர்கள் தத்து எடுப்பதை தடுக்கும் புதிய சட்டம். புதின் அதிரடி

  ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்து எடுப்பதை தடுக்கும் புதிய சட்டம் ஒன்று ரஷியாவில் கொண்டு வரப்பட்டது. இதில் ஜனாதிபதி புதின் நேற்று கையெழுத்திட்டார். இது ஜனவரி 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும். இந்த தகவலை மாஸ்கோவிலுள்ள ஜனாதிபதி மாளிகை தெரிவித்தது. மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் ரஷியர்களை தண்டிக்கும் சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்து இருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ரஷியா தற்போது இந்த புதிய சட்டத்தை இயற்றி இருக்கிறது. ...

ஆங்சான் சூகி பயன்படுத்திய கம்பளி ரூ.25 லட்சத்துக்கு ஏலம்

.   மியான்மர் எதிர்க்கட்சியின் தலைவர் ஆங்சான் சூகி. நாட்டில் ஜனநாயகம் வேண்டி ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடினார். எனவே அவர் சுமார் 18 ஆண்டுகள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். சமீபத்தில் விடுதலையான இவர் தற்போது உலக நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இவர் தனது கட்சி வளர்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சி திட்டத்துக்காக நிதி திரட்டி வருகிறார். இதற்காக அவர் தனது கம்பளி ஆடையை ஏலத்தில்...

காணாமல் போன குழந்தை 3 ஆண்டுகளுக்கு பின் மீட்பு

காணாமல் போன குழந்தை 3 ஆண்டுகளுக்கு பின்பு திரும்ப கிடைத்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆத்யா அஞ்சும் வில்கின்சன் என்ற சிறுமி மூன்று வயதாக இருக்கும் போது, காணமால் போய்விட்டார். இதனையடுத்து ஆத்யாவை, அவரது தந்தை அழைத்து சென்றது தெரியவந்தது. பின் குழந்தையை பார்க்க வேண்டும் என தாய் கெஞ்சி கேட்டும், மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த பெண், கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். உடனே இவருக்கு சிறைத்தண்டனை விதித்து, குழந்தை...

வர்த்தகர்களை நோக்கி வெள்ளை வான்

கண்டி முத்துமாரி ஸ்டோர்ஸ் உரிமையாளர் கோவிந்தசாமி அருணாச்சலம் பிரபாகரன் என்பவர் இனந்தெரியாத நபர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். இந்த கடத்தல் சம்பவம் நேற்று (28) இரவு 9.40 அளவில் இடம்பெற்றுள்ளதென தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக சிவில் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மலபார் வீதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளை கம்பளை பகுதியில் வைத்து இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடத்தப்பட்டவர்...

சுவிஸில் நாய், பூனைக்கறி சாப்பிடும் விவசாயிகள்

சுவிட்சர்லாந்தின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் நாய் மற்றும் பூனை இறைச்சிகளை சாப்பிடுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உலகில் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் நாய், பூனை சாப்பிடுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். சுவிஸ் குளிர்பிரதேசம் என்பதால் அங்குள்ள மக்கள் இறைச்சியை பெரும்பாலும் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் நாய், பூனை என்பது வீட்டின் செல்லப்பிராணிகள், இதன் இறைச்சிகளை சாப்பிடுவதை சமூகம் ஏற்றுக்கொள்ளாது. சுவிஸில்...