siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 18 செப்டம்பர், 2024

ஏர் பிரான்ஸ் இரு மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது

பிரான்சின் Charles de Gaulle விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கில் இரண்டு முக்கிய நாடுகளுக்கான விமான சேவைகளை ஏர் பிரான்ஸ் ரத்து செய்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நாளுக்கு நாள் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளதாக ஏர் பிரான்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் லெபனானின் பெய்ரூட் ஆகிய நகரங்களுக்கு செப்டம்பர் 19 வரையில் விமான சேவைகளை ரத்து செய்வதாக ஏர் பிரான்ஸ் அறிவித்துள்ளது.
மேலும், நிலைமையை கண்காணித்த பின்னர் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. லுஃப்தான்சா குழுமமும் தங்கள் விமான சேவைகள் அனைத்தும் டெல் அவிவ் மற்றும் தெஹ்ரான் நகர 
எல்லைகளை கடந்து செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தது.
  என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 comments:

கருத்துரையிடுக